Skip to main content

கலைஞர் பற்றி நினைவு கூறும்போது உணர்ச்சி வயப்பட்டு கண் கலங்கிய ஸ்டாலின்...!

Published on 25/03/2019 | Edited on 25/03/2019

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் செல்வம் மற்றும் திருப்போரூர் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் இதயவர்மனையும் ஆதரித்து பிரச்சாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் ஈடுபட்டார்.

 

stalin

 

அப்போது, ஏற்கனவே ஆட்சியின் கொடுமை, இப்போது வெயிலின் கொடுமையில் இருக்கிறீர்கள் என்று குறிப்பிட்ட அவர், ஆட்சியின் கொடுமையில் இருந்து ஒருமாத காலத்தில் விடுவித்து விடுவோம் என கூறினார். தமிழகத்தில் இருக்கும் முதலமைச்சரை போல எடுபிடி முதலமைச்சரை பார்க்கமுடியாது என்றும் தன்னுடைய பதவிக்காகவும், பினாமிகளுக்காகவும் ஆட்சி செய்து கொண்டு இருப்பவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும் குற்றம் சாட்டினார். அவர் அமைச்சராக இருக்கும் நெடுஞ்சாலை துறையில் பல ஊழல்கள் நடந்துள்ளதாகவும், 3500 கோடி ரூபாய் அளவிற்கு டெண்டர் வழங்கப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளது என்றும் கூறிய அவர், தனது நண்பர் செய்யாதுரைக்கு டெண்டர்கள் ஒதுக்கி முதலமைச்சர் முறைகேடு செய்துள்ளார் என்றார்.

 

குட்கா விவகாரத்தில், 8 அமைச்சர்கள் பட்டியலோடு 89 கோடி ரூபாய் வழங்கப்பட்ட ஆவணங்கள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் கைப்பற்றப்பட்டன என்று கூறிய அவர், மோடி ஊழல் இல்லாத ஆட்சியை தருவேன் என்று கூறி கடந்த முறை வாக்கு சேகரித்தார். ஆனால் இன்று எடப்பாடியோடு கூட்டணி  வைத்ததன் மூலம் ஊழல் ஊழலோடு கூட்டணி வைத்துள்ளது என நிரூபித்துள்ளார் என்றார். பாதுகாப்பு துறையில் ஊழல் செய்தவர்தான் மோடி என்றும், அவர் மீண்டும் ஜெயிக்க முடியாது என்பதால் இப்போது மக்களை ஏமாற்ற நாடாகமாடுகிறார் என்றும் கூறிய ஸ்டாலின், எனவேதான், எடப்பாடியை மோடிக்கு பிடிக்கிறது என்றார். தர்மயுதத்தின் விலை என்ன என்று பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கும் தான் தெரியும் என்றும், ஜெயலலிதாவிற்கு உண்மையாக இல்லாமல் மக்களை இருவரும் ஏமாற்றி வருகின்றனர் என்றும் தெரிவித்த அவர், ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி உரிய தண்டனை பெற்று தருவதே தி.மு.க ஆட்சியின்  கொள்கையாக இருக்கும், தனது உறுதியாக இருக்கும் என்றார். எடப்பாடி எப்படி முதலமைச்சர் ஆனார் என்பதை அதிமுகவோடு கூட்டணி அமைத்துள்ள மருத்துவர் ராமதாஸிடம் கேட்கலாம் என்றும் அதிமுக கட்சியை அமித்ஷாவிடம் அடமானம் வைத்துள்ளதாகவும், அதை மீட்கவே முடியாது என்றும் கூறிய அவர், மோசடி தனத்திற்கு சட்டம் தண்டனை கொடுக்கும் என்றும் மோடிக்கு மக்கள் தண்டனை கொடுக்க வேண்டும் என்றும் கேட்டு கொண்டார்.


கோமாளிகளும், ஊழல்வாதிகளும் இருக்கக்கூடிய கேபினட் தமிழகத்தில் உள்ளது என்று கூறிய அவர், முட்டை ஊழல் சரோஜா, பருப்பு ஊழல் காமராஜ் என பட்டியலிட்டார்.  தனக்கு வாழ்வு தந்த ஜெயலலிதாவின் வீடு புகுந்து திருடியவர் எடப்பாடி பழனிச்சாமி என்றும், கொடநாடு விவகாரத்தில் சயன், முதலமைச்சர் மீது புகாரளிக்க காட்டயப்படுத்தபட்டதாக வீடியோவை செட்டப் செய்து வெளியிட்டு உள்ளனர் என்றும் கூறியதோடு, திராணி, தெம்பு இருந்தால் சயனை நேரடியாக சொல்ல சொல்லுங்கள் என்று சவால் விட்டார்.


கலைஞரிடம் கடைசியாக பேசும்போது திமுக ஆட்சியமைப்போம் என உறுதி அளித்தேன் என்று கூறி உணர்ச்சி வசப்பட்ட அவர், கலைஞர் உயிரோடு இருக்கும் போது அதை நிறைவேற்ற முடியவில்லை என்று குரல் தழுதழுத்தார். தான் கலைஞரின் மகன் அவர் சொல்லை மீறியதும் இல்லை, அவர் பாதையில் இருந்து மாறியதும் இல்லை என்று கூறியதோடு கலைஞர் வழியில் சொன்னதை செய்வோம், கண் கலங்கியபடி செய்வதை சொல்வோம் என்று கூறி வாக்கு சேகரித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஓய்வு பெற வேண்டும் என்ற விருப்பத்தின் அடிப்படையில் விலகுகிறேன்”- சுப்புலட்சுமி ஜெகதீசன்

Published on 20/09/2022 | Edited on 20/09/2022

 

“Resigning based on desire to retire”- Subbulakshmi Jagatheesan

 

திமுகவில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிவித்துள்ளார். முதல்வர், கட்சி மற்றும் அரசுப்பணிகளை நாடே பாராட்டும் வகையில் செயல்படுத்திக் கொண்டு இருக்கிறார். இது எனக்கு மிகுந்த மன நிறைவை தருகிறது என குறிப்பிட்டுள்ளார்.

 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள விலகல் அறிக்கையில், “2009 இல் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பணி காலம் நிறைவு பெற்றதற்கு பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிடாமல், கட்சிப் பணிகளை மட்டும் மேற்கொள்வது என்ற எனது முடிவை தலைவர் கலைஞர் அவர்களிடமே தெரிவித்துவிட்டேன்.

 

தலைவர் கலைஞர் மறைவுக்குப்பின். அவர்களின் விருப்பத்தின்படி தலைவர் தளபதி அவர்களை முதலமைச்சர் ஆக்கும் நோக்கத்துடன் கழகப் பணிகளை மட்டும் செய்து வந்தேன்.

 

2021 சட்டமன்ற பொதுத் தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெற்று. தலைவர் தளபதி முதலமைச்சராக பொறுப்பேற்று, அரசுப் பணிகளையும், கட்சிப் பணிகளையும் நாடே பாராட்டும் வகையில் சிறப்பாகச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.

 

இது எனக்கு மிகுந்த மனநிறைவைத் தருகிறது. இந்த நிறைவோடு. அரசியலிலிருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எனது நீண்ட நாள் விருப்பத்தின் அடிப்படையில் ஆகஸ்டு மாதம் 29ஆம் தேதியன்று பதிவியிலிருந்தும். கட்சியிலிருந்தும் விலகுவதாக எனது விலகல் கடிதத்தை தலைவர் தளபதி அவர்களுக்கு அனுப்பிவிட்டேன்” என  தெரிவித்துள்ளார்.

 

 

Next Story

“ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு முதல் மரியாதை’; முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி

Published on 15/09/2022 | Edited on 15/09/2022

 

'First honor to One Rupee Idli Patty'; Resilience of Chief Minister Stalin

 

1 முதல் 5ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவ, மாணவியருக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார்.

 

தொண்ணூறுகளின் துவக்கத்தில் கமலாத்தாள் பாட்டி ஒரு இட்லி கடையை துவங்கினார். கடந்த 30 வருடங்களாக கடையை நடத்திக்கொண்டு வரும் இவர் வெகு காலமாக தனது கடையில் இட்லியை ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார். அத்தியாவசியப் பொருட்களின் விலை, பெட்ரோல், டீசல் விலை உயர்வு, ஜிஎஸ்டி போன்ற விலையேற்றங்கள் பல வந்தாலும் இட்லியை ஒரு ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்து வருகிறார். கமலாத்தாள் பாட்டியின் இட்லிக்கடை இருக்கும் பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இருக்கும் ஏழை, எளிய மக்கள் மிக குறைந்த விலையில் காலை உணவினை அருந்தி தங்களது பணிகளை மேற்கொள்கின்றனர்.

 

இந்நிலையில் அண்ணாவின் பிறந்த நாளான இன்று 1 முதல் 5 ம் வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளி மாணவ மாணவியருக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

 

1920 களில் ஜஸ்டிஸ் பார்ட்டி சென்னை மாகாணத்தில் பள்ளி மாணவர்களுக்கு உணவு திட்டத்தை துவங்கியது. அதன் பிறகு ஒவ்வொரு கால கட்டத்தில் ஒவ்வொரு தமிழக முதல்வரால் அத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டும் மேம்படுத்தப்பட்டும் வருகிறது. ஜஸ்டிஸ் பார்டியால் 1920களில் துவங்கப்பட்ட மதிய உணவுத்திட்டம் இன்று அதன் நூற்றாண்டு விழாவை எட்டியுள்ளது. அதனை சிறப்பிக்கும் வகையிலும் மேலும் விரிவு படுத்தும் நோக்கிலும் துவக்க நிலை பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரையில்  இன்று துவங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழகத்தில் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டத்தை துவங்கியது முதல் நடந்த வரலாற்று சம்பவங்களை தொகுத்து தமிழக அரசின் செய்தி தொலைத் தொடர்பு துறையால் புத்தகமாக கொண்டுவரப்பட்ட ஆவண நூல் வெளியிடப்பட்டது. இந்நூலினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட, முதல் பிரதியை கமலாத்தாள் பாட்டி பெற்றுக்கொண்டார். 

 

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், “ஒடுக்கப்பட்டோர் பிள்ளைகள், ஏழை எளியோர் வீட்டுப் பிள்ளைகள் எதன் காரணமாகவும் பள்ளிக்கு செல்வது தடைபடக் கூடாது என்பதற்காகவே திராவிட இயக்கத்தால் இத்திட்டம் துவங்கப்பட்டது. அன்றுதான் கடந்த நூற்றாண்டின் மாபெரும் இயக்கத்துக்கான விதை தூவப்பட்டது. அதற்காகவே சுயமரியாதை சமூக நீதி கோட்பாடு உருவாக்கப்பட்டது. வகுப்புவாரி இட ஒதுக்கீடு தரப்பட்டது. தகுதியோ சாதியோ கல்விக்கு தடையாக இருக்கக்கூடாது என பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் நினைத்தனர். அவர்கள் நினைத்த திட்டத்தை நான் செயல்படுத்திக் கொண்டு வருகிறேன் என நினைக்கும் பொழுது உள்ளபடியே நான் அளவிட முடியாத மகிழ்ச்சிக்கு ஆளாகிறேன்” என கூறினார்.