Advertisment

"கலைஞர் என்னை வளர்த்தார்.. பேராசிரியர் என்னை வார்ப்பித்தார்" ஸ்டாலின் கண்ணீர்க் கவிதை...

திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உயிரிழந்த நிலையில், அவரின் இழப்பு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் கவிதை ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார்.

Advertisment

stalin tribute to anbazhagan

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

திமுக பொதுச் செயலாளரும், திராவிட இயக்க மூத்த தலைவர்களில் ஒருவருமான க.அன்பழகன் (98) இன்று அதிகாலை 1 மணி அளவில் காலமானார். க.அன்பழகன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சளி, மூச்சுத் திணறல் காரணமாக கடந்த 24-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். உடல்நலக்குறைவு காரணமாக அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை 1 மணி அளவில் அவர் காலமானார். இந்தச் செய்தி திமுகவினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் மு.க.ஸ்டாலின், துரைமுருகன், கனிமொழி, ஆ.ராசா, கே.என்.நேரு உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் மருத்துவமனைக்குச் சென்றனர். பின்னர் அங்கிருந்து கீழ்ப்பாக்கத்தின் ஆஸ்திரன் தோட்டத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டுவரப்பட்ட அவரது உடலிற்கு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அன்பழகனின் இழப்பு கொடுத்த துக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் கவிதை ஓன்றை எழுதியுள்ளார். "முப்பாலூட்டிய பேராசிரியப் பெரியப்பா" என்ற அந்த கவிதையில், "திராவிடச் சிகரம் சாய்ந்துவிட்டது, சங்கப் பலகை சரிந்துவிட்டது, இனமான இமயம் உடைந்து விட்டது" என தனது மனக்கவலையை வெளிப்படுத்தியுள்ளார் ஸ்டாலின்.

K. Anbazhagan
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe