Skip to main content

பழனிசாமிக்கு தேவை கமிஷன் தான் ! கமிஷன் கிடைத்தால் என்னவேணாலும் செய்வார் முதல்வர் ! 

Published on 10/06/2019 | Edited on 10/06/2019

திருச்சி மத்திய மண்டலத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களை வெற்றிபெறவைத்த டெல்டா மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டம் திருச்சியில் கே.என்.நேரு ஏற்பாட்டில், உழவர் சந்தையில் நடைபெற்றது.
 

stalin


இந்த நன்றி அறிவிப்பு கூட்டத்திற்கு திருச்சி எம்.பி திருநாவுக்கரசர், தஞ்சை எம்.பி. பழனிமாணிக்கம், கரூர் எம்.பி. ஜோதிமணி, நாகப்பட்டினம் எம்.பி. செல்வராஜ், மயிலாடுதுறை எம்.பி. ராமலிங்கம், பெரம்பலூர் எம்.பி. ஐஜேகே பாரிவேந்தர், இவர்களோடு இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற திருவாரூர் பூண்டிகலைவாணன், அரவக்குறிச்சி செந்தில்பாலாஜி, தஞ்சை நீலமேகம் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து மகிழ்ந்தார். இந்த கூட்டத்தில் காதர்மொய்தீன், ஐ.பெரியசாமி, உதயநிதிஸ்டாலின், சபரீசன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

சட்டமன்றத்திலும், தேர்தலிலும் பிரச்சாரத்திலும் தவறாமல் பங்கேற்றவர் அன்பில் தர்மலிங்கம் என்றார். அண்ணாவுக்கும், பெரியாருக்கும் ஏற்பட்ட பிரிவில் கசப்பை மறந்து நட்பு பாராட்டியவர் எனவும் குறிப்பிட்டார். காங்கிரஸ் அறிவித்த வேட்பாளரை எதிர்த்து பிரச்சாரம் செய்யவந்த பெரியாரிடம் ஆசி பெற சென்றவர் எனவும் குறிப்பிட்டார். மேலும், கலைஞர் சமாதியை அண்ணா சமாதிக்கு அருகில் அமைக்க எதிர்ப்பு எழுந்த போது போராடி வென்றதாக குறிப்பிட்டார்.

திமுக தலைவர் ஸ்டாலினின் உரை:

கலைஞர் இல்லாமல் கொண்டாடும் கலைஞரின் முதல் பிறந்தநாள். தேனியில் அதிமுக கோடி, கோடியாக பணம் கொட்டி வெற்றி பெற்றிருக்கிறார்கள் வருகிற சட்டமன்ற தேர்தலிலும் இப்போது நாடாளுமன்றத்தில் வெற்றியை போன்று வெற்றிபெற வேண்டும் சூளுரை ஏற்க வேண்டும். ஐந்து முறை ஆட்சி அமைத்த கலைஞரின் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த, கலைஞரின் ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்றார். 
நானே விவசாயி என்கிறார் முதல்வர். ஆனால் அவரே விவசாயிகளுக்கு எதிராக நடந்து கொள்கிறார். அவருக்கு தேவை எல்லாம் கமிஷன்தான். 
 

stalin


தமிழக அதிமுக அரசு இந்த வெற்றியை கொச்சைப்படுத்துகிறது. அப்போது மோடி வெற்றி பெற்றது பொய் பிரச்சாரமா? 37 எம்பிக்களை வைத்து என்ன செய்வோம் என்பது நாடாளுமன்றம் கூடும்போது தெரியும்.. அதிமுக ஜடம் எம்பிக்கள்போல் திமுக எம்பிக்கள் இருக்க மாட்டார்கள். 

பெரியார் வழியில் போராடுவார்கள். மும்மொழி கொள்கையை திரும்ப பெற வைத்தோமா இல்லையா? காவிரி தண்ணீர் கேட்டால் மேகேதாது பற்றி பேசுகிறீர்களே. அது காவிரி ஆணையமா, கர்நாடகா ஆணையமா? காவிரி தண்ணீர் 8 வருடமாக மேட்டூர் அணை திறப்பு இல்லை. எடப்பாடிக்கு இது பற்றி கவலை உண்டா? கர்நாடக முதல்வரோடு பேசினாரா? அதிகாரிகளை அங்கே அனுப்பினாரா? எட்டு வழிச்சாலையில் காட்டும் அவசரத்தை ஏன் இதில் காட்டவில்லை? எட்டு வழி சாலை வந்தால்தான் மூவாயிரம் கோடி வரும். பணத்தை தவிர எந்தவித கொள்கையுமற்ற சர்வாதிகார எடுபிடி ஆட்சி நடக்கிறது.. எட்டுவழி சாலையை மக்களை சமாதானப்படுத்தி கொண்டு வந்தே தீருவேன் என்பதே விவசாயியான எடப்பாடியின் நோக்கம்.

மேலும் பேரிழப்புக்கு எதிரான பேரியக்கத்தின் சார்பில் நடத்துகிற மனிதச்சங்கிலிக்கு திமுக ஆதரவு என தெரிவித்தார். கடந்த ஆண்டு இரண்டு பேரை பலி கொடுத்திருக்கிறோம். இந்த முறை மூன்று பேரை பலி கொடுத்திருக்கிறோம். இந்த தற்கொலைக்கு காரணமே மத்திய, மாநில அரசுகள்தான், சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஒரு மரண அடியை அதிமுக அரசுக்கு புகட்ட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சொத்துக்குவிப்பு வழக்கு; 79 வயது முன்னாள் சார்பதிவாளருக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
79-year-old ex-registrar sentenced to 5 years in prison for Asset transfer case

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜானகிராமன் (79). இவரது மனைவி வசந்தி (65). ஜானகிராமன் கடந்த 1989ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை சார்பதிவாளராக பணியாற்றி வந்தார்.  ஜானகிராமனின் பணிகாலத்தில் அவரது பெயரிலும், அவரது மனைவி பெயரிலும் பல்வேறு இடங்களில் 37 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்துக்களை வாங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது.

அந்தப் புகாரின் பேரில், வருமானத்திற்கு அதிகமான சொத்துக்களை சேர்த்ததாக கணவர் மற்றும் மனைவி மீது திருச்சி மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் லஞ்சஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், இது தொடர்பான வழக்கு திருச்சி ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், இந்த விசாரணை இன்று (25-04-24) நீதிபதிகள் முன்பு வந்தது. அப்போது, இந்த வழக்கை விசாரணை நடத்திய நீதிபதிகள், இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் உறுதிப்படுத்தினர். இதனையடுத்து, ஜானகிராமனுக்கும், அவரது மனைவி வசந்திக்கும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி அதிரடி தீர்ப்பளித்தார். அவர்கள் இருவரது பெயரில் உள்ள சொத்துக்களின் தற்போதைய மதிப்பு ரூ.100 கோடிக்கும் மேல் இருக்கும் எனக் கூறப்படும் நிலையில், அவற்றை பறிமுதல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். 

Next Story

“பிரதமர் வேட்பாளர் பிரியங்கா காந்தி” - காங்கிரஸில் இணையும் மன்சூர் அலிகான் அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
mansoor ali khan willing to join congress

இந்திய ஜனநாயகப் புலிகள் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் மன்சூர் அலிகான், நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். அப்போது பிரச்சாரத்தின் போது அவருக்கு உடல்நலக்குறவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பாக பேசப்பட்டது. 

இந்த நிலையில் மன்சூர் அலிகான் காங்கிரஸில் ராகுல் காந்தி முன்னிலையில் இணைய விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான கடிதத்தை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை சந்தித்து கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “பிரதமர் மோடி ஒரு விஷப்பாம்பை விட மோசமாக விஷம் கக்கிற அளவிற்கு, தேசத்தில் பிரிவை ஏற்படுத்தி ரத்த ஆறு ஓடவைத்து, மதக் கலவரத்தை உண்டு பண்ணி, எப்படி மணிப்பூர், குஜராத்தில் பண்ணினாரோ அதையே இப்போதும் பண்ண நினைக்கிறார்.  மன்மோகன் சிங் கால் தூசிக்கு கூட இவர் ஈடாகமாட்டார். மன்மோகன் சிங் 2006ல் கருணை அடிப்படையில் பேசியதை திரித்து ராஜஸ்தானில் பேசியுள்ளார். அவர் மனிதராக இருக்கவே தகுதியற்றவர். தேர்தல் ஆணையம் பிரதமர் மீது கடும் நடவடிக்கை எடுத்து கைது செய்து திகார் ஜெயிலில் உடனடியாக அடைக்க வேண்டும்.   

காங்கிரஸில் இணைய போன வருஷம் நவம்பரிலே கடிதம் கொடுத்திருந்தேன். அது என் தாய் கழகம். 15 வருஷங்களுக்கு முன்னால் நான் காங்கிரஸில் இருந்தேன். திண்டிவனம் ராமமூர்த்தியுடன் கருத்து வேற்பாடு ஏற்பட்டதால் விலகிவிட்டேன். பின்பு மீண்டும் சேர கடிதம் கொடுத்தேன். ஆனால், சரியாகப் போய் சேரவில்லை போல. அதனால்தான் கட்சியை தொடங்கி என் கைக்காசைப் போட்டு செலவு செய்து, போராடி இந்தத் தேர்தலை சந்தித்திருக்கிறேன். என்னுடைய ஆதரவு இந்தியா கூட்டணிக்குதான். சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தியை பிரதமர் வேட்பாளராகப் பார்க்கிறேன். அந்த மகராசிக்கு பிரதமருக்கான முகராசி உள்ளது. அல்லது ராகுல் காந்தி பிரதமர் ஆவார் என்ற என் ஆசையையும் நிலைப்பாட்டையும் தெரியப்படுத்தி இருந்தேன். 10 வருடங்கள் நாட்டை ஆண்ட பாரதப் பிரதமர் ஒரு வெங்காயம் உரிச்சு போடல. நாட்டு மக்களை பிச்சைக்காரங்க ஆக்கிட்டாங்க. கோவணத்தை உருவிட்டு வெளிநாட்டில் இருந்து இவரைக் கொல்ல சதி செய்கிறார்கள் என உளறிக் கொண்டிருக்கிறார். ஒரு சாதாரண குடிமகனாக அவரைத் தூக்கி உள்ளே போடுங்க. இல்லைன்னா போராட்டம் வெடிக்கும்” என்றார்.