ADVERTISEMENT

’பியூட்டி பார்லர், பிரியாணி கடை பஞ்சாயத்துகளை பார்ப்பதற்கே ஸ்டாலினுக்கு நேரம் சரியாக இருக்கிறது ’-   அமைச்சர் ஜெயக்குமார் 

10:33 AM Sep 22, 2018 | Anonymous (not verified)


மீன்வளத்துறை அமைச்சர் சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ’’ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டது மூடப்பட்டதுதான். திறக்கப்படும் என்ற பேச்சுக்கு இடமே இல்லை’’என்றும், ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி தடையாக இருக்கிறது என்றும் தெரிவித்தார்.

ADVERTISEMENT

மின்துறை தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயாராக இருப்பதாக தெரிவித்த ஜெயக்குமார், பியூட்டி பார்லர், பிரியாணி கடை பஞ்சாயத்துகளை பார்ப்பதற்கே ஸ்டாலினுக்கு நேரம் சரியாக இருக்கிறது என்றார்.

ADVERTISEMENT

மேலும், என்னை அரிச்சந்திரன் என்று கூறிய கருணாஸ்க்கு நன்றி. சாதி ரீதியாக பேசிய கருணாஸ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவரது பேச்சுக்கு அதிமுக கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், ஸ்டாலின் இன்னும் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT