Skip to main content

எதுக்கு கருத்து சொல்லணும்... திமுக ஆட்சிக்கு வரக்கூடாதுன்னு நினைக்கிறாரா? கோபமான ஸ்டாலின்!

Published on 28/01/2020 | Edited on 28/01/2020

தி.மு.க.-காங்கிரஸ் கட்சிகளுக்கிடையிலான உரசலில் சமாதானம் எட்டப்பட்டாலும் இன்னும் முழுமையாக  இருதரப்புக்கு இடையிலேயும் பரபரப்பு அடங்கவில்லை என்று சொல்லப்படுகிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தி.மு.க.வுக்கும், காங்கிரசுக்கும் இடையிலான உரசல், சோனியாவின் முயற்சியால் சமாதானமானது. சமாதான முயற்சி நடந்துகொண்டிருந்த நேரத்தில் தி.முக. பொருளாளரான துரைமுருகன், கூட்டணி உறவு முறிந்தால் எங்க கட்சிக்கு எந்தவித நஷ்டமும் இல்லை என்று கூறியது மறுபடியும் காங்கிரஸ் தரப்பில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 
 

dmk



இந்த நிலையில், தன் லைனில் வந்த துரைமுருகனின் மகனான கதிர் ஆனந்த் எம்.பி.யிடம், கூட்டணிக்கட்சி பற்றி பொது வெளியில் உங்க அப்பா எதுக்கு கருத்துச் சொல்லணும். தி.மு.க. இனி ஆட்சிக்கு வரக்கூடாதுன்னு அவர் நினைக்கிறாரா?ன்னு ஸ்டாலின் தன் கோபத்தைக் காட்டியிருக்கிறார். இதைத் தொடர்ந்து ஸ்டாலின் லைனுக்குப் போன துரைமுருகன், நான் காங்கிரஸை வேண்டும் என்றே விமர்சிக்கவில்லை. பத்திரிகையாளர்கள் எடக்கு மடக்காகக் கேள்வி எழுப்பியதால், அவர்களுக்கு நான் சொன்ன தமாஷ் பதிலை அவர்கள் சீரியஸாக்கிவிட்டார்கள் என்று தன்னிலை விளக்கம் கொடுத்திருக்கிறார்.


மேலும் சமீபத்தில் முதல்வர் எடப்பாடி, "எங்கள் கட்சியில் இருக்கும் அத்தனை பேருமே முதலமைச்சர் தான் என்று பேசியதை விமர்சனம் செய்த அவர், அப்படியென்றால், முதல்வர் பதவியை ஓ.பி.எஸ்.சிடம் கொடுக்கட்டும் என்று கூறி எடப்பாடித் தரப்பையே அதிர வைத்து விட்டார். இருந்தும் இந்தச் சூழலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் தங்களுக்கு எதிராக வாக்களித்த காங்கிரஸ் ஊராட்சிக் கவுன்சிலர் ஒருவரை தி.மு.க. தங்கள் கட்சியில் சேர்த்துக் கொண்டுள்ளது. இதுதான் கூட்டணி தர்மமா?ன்னு இப்போது மீண்டும் காங்கிரஸ் தரப்பில் முணுமுணுப்பு எழுந்திருக்கு. இரு தரப்புக்கும் இடையில் மழை விட்டாலும் தூவானம் விடலை என்று கூறுகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ்!

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Income tax notice to Congress, Communist Party of India

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாகத் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் ரூ.1,823 கோடி செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை சார்பில் நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ. 135 கோடியை ஏற்கனவே வருமான வரித்துறை முடக்கியுள்ள நிலையில், தற்போது ரூ. 1823.08 கோடி அபராதம் கட்ட வேண்டும் என காங்கிரஸ் கட்சிக்கு புதிய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 1993-94, 2016-17, 2017-18, 2018-19 மற்றும் 2019-20 காலகட்டத்திற்கு உரிய வருமான வரி மற்றும் அதற்குரிய அபராதத்தை செலுத்த காங்கிரஸ் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுபியுள்ளது.

இது குறித்து குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் தேரிவிக்கையில், மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு எதிராக வரி பயங்கரவாதம் நடைபெறுவதாக காங்கிரஸ் கங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. பாஜக இந்திய ஜனநாயகத்தை தகர்க்கும் வேலைகளை செய்து வருவது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 8 ஆண்டு பழைய வருமான வரியை மீண்டும் ஆய்வு செய்து ரூ.1,823 கோடி வரி பாக்கியை கட்டச் சொல்வது விதிமீறல் என காங்கிரஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Income tax notice to Congress, Communist Party of India

இதனைத் தொடர்ந்து ரூ. 11 கோடி வருமான வரி நிலுவையில் உள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பழைய பான் (P.A.N.) எண்ணை பயன்படுத்தியதற்கு ரூ. 11 கோடி வரி பாக்கியை செலுத்த வேண்டும் என நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் இந்தியா கூட்டணிக் கட்சிகளை முடக்கும் வேலையில் மத்திய அரசு ஈடுபடுவதாக எதிர்க்கட்சிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.