Skip to main content

"சவுண்ட் பார்ட்டி மார்க்கண்டேயன்... சத்தமில்லாமல் சாதித்த சின்னப்பன்..!" 

Published on 18/03/2019 | Edited on 18/03/2019

 

இடைத் தேர்தல் நடக்கும் விளாத்திகுளம் தொகுதியில், முன்னாள் எம்.எல்.ஏ மார்க்கண்டேயனுக்கு தான் 'சீட்' என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் இந்த ரேசில் மாஜி எம்.எல்.ஏ சின்னப்பன் முந்திக் கொண்டு சீட் வாங்கிவிட்டார். இதுகுறித்து கட்சிக்காரர்கள் சிலரிடம் பேசினோம். 


 

markandeyan




 "இவரு வாய வச்சுக்கிட்டு சும்மா இருந்தாத்தானே? பேசியே காரியத்தை கெடுத்துப்புட்டார். அருமையா ஜெயிக்க வேண்டிய தொகுதியை இழுபறி நிலைக்கு கொண்டு வந்துவிட்டார் என அவர்கள் ஆற்றாமையுடன் பேசினர். தேர்தல் அறிவிப்பு வெளியாகும் முன்னே நவம்பர் மாதத்திலேயே தொகுதி பொறுப்பாளர்களாக அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கடம்பூர் ராஜூ ஆகியோரை நியமிச்சாங்க. கடம்பூராருக்கும் இவருக்கும் (மார்க்கண்டேயன்) ஆகாது. கடம்பூர் ராஜூவோ, மணல் திருடி விற்பனை செய்பவர்களுக்கு எல்லாம் சீட் கிடையாது என, மார்க்கண்டேயனை குறிவைத்து பேச, பதிலுக்கு தினகரன் அணியின் சிலீப்பர் செல் தான் கடம்பூர் ராஜூ என்று எதிர்பாய்ச்சல் பாய்ந்தார் மார்க்கண்டேயன். இது கட்சிக்குள்ள குழப்பத்தை ஏற்படுத்த, ஓபிஎஸ் தலையிட்டு அப்போது பிரச்சனையை தீர்த்து வைத்தார்.


 

admk




அதன்பிறகும் சும்மா இருந்தாரா? ஓட்டப்பிடாரம் தொகுதி செயல்வீரர்கள் கூட்டத்திற்கு வந்த எஸ்.பி.வேலுமணிக்கு, இவர் தூத்துக்குடி டோல்கேட்டுக்கு இந்த பக்கமும், அப்ப மாவட்ட செயலாளராக இருந்த சி.த.செல்லப்பாண்டியன் தரப்பு டோல்கேட்டுக்கு அந்தப்பக்கமும் தனித்தனியா வரவேற்பு கொடுத்து கட்சியோட மானத்தை வாங்கினார்கள். அதற்கு பிறகு, புதூரில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் சின்னப்பனை மேடையில் பேசவிடாமல் செய்வதற்காக, தனது ஆட்களை தூண்டிவிட்டு அடிதடி ரகளையில் இறங்கினார். இதையெல்லாம் கட்சியோட தலைமைக்கு தெரிஞ்சும் எந்த நடவடிக்கையும் எடுக்கலை. ஆனால், அவருக்கு செய்தி தொடர்பாளர் பதவி கொடுத்தாங்க. இப்ப சின்னப்பனுக்கு சீட் கொடுத்திருக்கிறார்கள்" என்று விளக்கினர்.



 

   ஆரம்பத்தில் இருந்தே ஓபிஎஸ் சப்போர்ட் இருக்குதுன்னு மார்க்கண்டேயன் தனி ஆவர்த்தனம் பண்ணிகிட்டு இருந்தார். இப்படியே போனால் இவரை கையில் பிடிக்க முடியாது. ஓபிஎஸ் கை ஓங்கிவிடும் என கருதியே, கடம்பூரார் சிபாரிசு பண்ணிய சின்னப்பனுக்கு சீட் கொடுத்திருக்காராம் இபிஎஸ்.  "கடந்த முறை அம்மா நிறுத்திய உமா மகேஷ்வரியை, 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தேன். இந்த முறை கட்சித் தலைமை யாரை நிறுத்தினாலும், அவரை ஜெயிக்க வைப்போம். ஆனால், கடம்பூர் ராஜூவை தேர்தல் பொறுப்பாளராக போட்டதை ஏற்க முடியாது. ஒரு சலவை தொழிலாளியை வேட்பாளராக நிறுத்தினாலும் அவரை ஜெயிக்க வைப்பேன்" என்று விளாத்திகுளம் கட்சிக் கூட்டத்தில் முன்பு உரையாற்றினார் மார்க்கண்டேயன். சொன்னதை செய்வாரா மார்க்கண்டேயன்?

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.