Skip to main content

"மோடிக்காக ஸ்ம்ரிதி இராணி தமிழர்களை பழிவாங்கினார்" - திருமுருகன் காந்தி  

Published on 13/05/2018 | Edited on 14/05/2018

கடந்த வாரம், சென்னையில் "அழியப் போகிறது தமிழ்நாடு. என்ன செய்யப் போகிறோம் நாம்?" என்ற தலைப்பில் தமிழர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கூட்டத்தில் மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கலந்து கொண்டு உரையாற்றினார்.
 

thirumurugan gandhi



"உலகத்துலேயே நடக்காத தேர்வையா நடத்துறீங்க? அவ்ளோ பெரிய தேர்வா நீட்? ஐ.ஏ.எஸ் படிச்சு நாட்ட ஆளப் போற தேர்வா அது? இவ்வளவு கறாரா நடத்துறீங்க? ஐ.ஏ.எஸ் தேர்வுக்கே இவ்வளவு கட்டுப்பாடு இல்ல, ஆனா நீட்டுக்கு மட்டும் ஏன் இவ்வளவு கட்டுப்பாடுகளை கொண்டு வருகின்றான் என்றால் தமிழ் பிள்ளைகள், தமிழ் குழந்தைகள் மருத்துவம் படிக்கூடாது; அதுதான் அவன் எண்ணம்.

நூறு வருஷத்துக்கு முன்னாடி சென்னை பல்கலைகழகத்தில் சமஸ்கிருதம் படிச்சு பாஸ் பண்ணாதான் மருத்துவர் ஆக முடியும் என்ற ஒரு முறை இருந்தது. அதை நீதிக்கட்சி ஒழித்தது. அப்படி அந்த முறை ஒழிக்கப்பட்டதால்தான் அனைத்து சாதியினரும் மருத்துவராக முடியும் என்ற நிலை வந்தது. அதனால்தான் நம்ம தெருவுல உள்ள நம்ம குழந்தைங்க நம்மளுக்கு உக்காந்து வைத்தியம் பாக்குது. வடமாநிலத்துக்காரன் வருவானா? இந்த நிலைமையையெல்லாம் மாற்றத்தான் மத்திய பி.ஜே.பி அரசும் ஆர்.எஸ்.எஸ் கைக்கூலிகளும் வேலை செய்துகொண்டிருக்கின்றனர். இந்த மருத்துவ கல்வியை உயர்சாதிகாரர்களுக்கு மட்டும் கொடுத்தா அவங்க நம்மள தொட்டு வைத்தியம் பார்ப்பார்களா, அது சாத்தியமாகுமா? அதையெல்லாம் நம்மிடமிருந்து புடுங்கத்தான் நீட் தேர்வுன்னு சொல்லி நம்ம பிள்ளைகள ராஜஸ்தானுக்கு அனுப்பறது, கேரளாவுக்கு அனுப்பறது. இங்கே இருக்கும் ராஜஸ்தான்காரனுங்கள திருப்பி அனுப்புனா நம்ம பிள்ளைகள் இங்க எழுதும். தமிழ்நாடு வந்தேறிகளோட வேட்டைக்காடா மாறிக்கொண்டு வருகிறது. 

 

modi smriti irani

 


என்றைக்கு குஜராத்திகள் குஜராத்துக்குப் போறானோ அன்னைக்கு காவிரி வீடு வந்து சேரும். நீட் தேர்வுல இவன் காதுல இருக்க கம்மல கழட்டறது, பெண்களுடைய மாண்பை குறைக்கும்படி நடந்து கொள்வது என்று செயல்படுகிறான். பெற்றோர்களுக்கு முதலில் சுயமரியாதை வேணுங்க. தன் பிள்ளைக்கு அப்படி நடக்கும்போது செருப்ப கழட்டி அடிச்சிருக்கணும் நீங்க. அடிச்சிருக்கணுமா இல்லையா? உங்க பிள்ளைங்க தேர்வெழுதி மார்க் எடுத்து மருத்துவராகி சம்பாரிச்சு கொடுக்கணும்'னு நெனச்சீங்கனா ஒவ்வொரு தேர்வு மையத்திலயும் சுயமரியாதையை விட்டுக்கொடுக்க வேண்டிவரும். ஒவ்வொரு தேர்வு மையத்திலும் ஒவ்வொரு அப்பனும் செருப்ப கழட்டி அடிச்சிருந்தானா இவன் இந்த வேலைய செய்திருக்கமாட்டான். அந்த அடி மத்திய அரசுக்கு விழுந்த செருப்படியாக இருந்திருக்கும். 

இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்ததற்கான காரணம் என்ன? தமிழ் மாணவர்களின் வாழ்க்கையை அழித்ததற்கான காரணம் என்ன? நீங்க மோடிக்கு கறுப்புக்கொடி காட்டுனீங்க. அதனால் மோடிக்கு நெருக்கமாக இருக்கக்கூடிய கல்வித்துறையை சார்ந்த ஸ்ம்ரிதி  இராணி தமிழ் மாணவர்களின் எதிர்காலத்தை நாசமாக்க வேண்டுமென்று, பழிவாங்கும் இந்த வேலையை செய்திருக்கிறார். வேற ஒன்றும் கிடையாது. நீ எத்தனை முறை எங்கள் இனத்தைப் பழிவாங்கினாலும் நாங்கள் நெருப்புப் பறவையாக வந்து நிற்போம். ஒரு போதும் நாங்கள் அஞ்சப்போவது இல்லை".





 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு; வெளியான முக்கிய அறிவிப்பு!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Important announcement For the attention of NEET students

2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான இளங்கலை நீட் நுழைவுத் தேர்வுக்காக விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டித்து தேசியத் தேர்வு மையம் அறிவித்துள்ளது.

2024 - 25 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு (2024) மே மாதம் 5 ஆம் தேதி நடைபெறும் எனத் தேசியத் தேர்வு முகமை ஏற்கனவே அறிவித்திருந்தது. தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகிவிட்ட நிலையில், தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் எனத் தேசிய தேர்வு மையம் தெரிவித்திருந்தது. 

அதன்படி, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி முதல், மார்ச் 16 ஆம் தேதி வரை நீட் தேர்வு எழுதும் மாணவ - மாணவிகள் ஆன்லைன் வழியாக விண்ணப்ப பதிவை மேற்கொள்ளலாம் எனத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்குமாறு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டு மார்ச் 16ஆம் தேதி வரை கால அவகாசம் நிறைவடைந்த நிலையில், ஏப்ரல் 10ஆம் தேதி வரை நீட்டித்துள்ளதாக தேசிய தேர்வு மையம் அறிவித்துள்ளது. 

மேலும், https://exams.nta.nic.in/NEET என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தை நாளை (09-04-24) மற்றும் நாளை மறுநாள் (10-04-24) சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது. நீட் தகுதி தேர்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் தகவல் தொகுப்பு கையேடு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவ்வப்போதைய நிலவரங்களைத் தெரிந்து கொள்வதற்கு, www.nta.ac.in என்ற இணையதளத்தைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். குறிப்பிட்ட அவகாசத்திற்குள் விண்ணப்ப முடியாதவர்களின் நலன் கருதி தேசிய தேர்வு முகமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 

Next Story

இட ஒதுக்கீட்டைப் பறித்த மோடியைக் கண்டித்து பாமக போராட்டம் நடத்தாதது ஏன்? - திருமுருகன் காந்தி

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Thirumurugan Gandhi question Why didn't  pmk   struggle against Modi for taking away reservation

சிதம்பரம் மக்களவை தொகுதியில் இந்தியா கூட்டனியில் திமுக தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவு திரட்டி மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி சிதம்பரம் தொகுதிக்குட்பட்ட பரங்கிப்பேட்டை, சிதம்பரம் நகரம் உள்ளிட்ட இடங்களில் வாகன பிரச்சாரம் மேற்கொண்டு மக்கள் மத்தியில் பானைச்சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “வருகிற 19-ஆம் தேதி நடைபெறுகிற தேர்தல் இதுவரை நடக்காத வித்தியாசமான தேர்தல்.  இது யார் பிரதமராக வரக்கூடாது என்பதற்கான தேர்தல்.  மோடி என்கிற நாசக்கார சக்தி, பாஜக என்கிற பயங்கரவாத கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதற்கானது. கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாட்டை நாசப்படுத்திய மோடிக்கு முடிவு கட்டும் தேர்தல். கடந்த 10 வருடத்திற்கு முன்பு விலைவாசி எப்படி இருந்தது. தற்போது எரிவாயு, பெட்ரோல், டீசல் பன்மடங்கு உயர்ந்து மக்கள் மீளமுடியாத விலைவாசி உயர்வால் தினந்தோறும் அவதி அடைகின்றனர். இதில் ஜிஎஸ்டி வரியைப் போட்டு மக்களை நசுக்கி வருகிறது.  

தமிழ்நாட்டின் உரிமையைக் காட்டி கொடுக்க பாஜகவுடன் பாமக கூட்டணி சேர்ந்துள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்களின் கல்வி, வேலைகளைத் தட்டிப் பறித்து மேல் சாதிக்காரனுக்கு தாரை வார்த்துள்ளார் மோடி. இட ஒதுக்கீட்டையும், வேலையையும் பறித்த மோடியைக் கண்டித்து பாமக ஒரு நாளாவது போராட்டம் நடத்தி இருக்குமா? இட ஒதுக்கீட்டுக்கு எதிராக செயல்படும் பாஜவுடன் கூட்டணி வைத்துள்ளீர்கள். இது என்ன ஞாயம்? இவர்களுக்கு கல்வி உரிமையும், வேலை, இடஒதுக்கீடு உரிமையை மறுத்தபோது போராடியவர் திருமா தான். நெய்வேலி என்எல்சி யில் வன்னியர் சமூக இளைஞர்களுக்கு வேலை கொடுக்கவில்லை என ராஜசபாவில் அன்புமணி பேசினாரா?  கல்விக்கடனை ரத்து செய்யப் பேசினாரா? வெறும் சாதி பெருமை பேசினால் போதாது.  

மோடிக்கு கூஜா தூக்கிய எடப்பாடியும் தமிழகத்தில் என்ன செய்தார் என்பதை கூற முடியாது. விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு யோக்கியர் போல் பேசுகிறீர்களே நீங்கள் மோடிக்கு அடிமையாக இருந்தது தெரியாதா? அமலாக்கத்துறை அனைவர் வீட்டுக்கும் செல்கிறது ஆனால் எடப்பாடி மற்றும் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் வீட்டிற்கு ஏன் செல்லவில்லை? இதில் இருந்தே தெரியவில்லையா மோடிக்கும் எடப்பாடிக்கும் ரகசிய ஒப்பந்தம் உள்ளது. அதற்காக தமிழ்நாட்டு மக்களை அடிமைப்படுத்த அனுமதிக்க மாட்டோம் அதிமுக என்ற அடிமைக் கட்சிக்கு வாக்களிக்காதீர்கள்.

இங்கே நிற்கக்கூடிய வேட்பாளர்கள் திருமாவுக்கும் எதிராக இணையான வேட்பாளர்களா? இவரது கல்வி தகுதிக்கும், பேச்சுக்கும், பாராளுமன்றத்தில் மக்களுக்காக குரல் கொடுப்பதை அவர்கள் கொடுப்பார்களா? அவர்கள் அடிமையாக தான் இருப்பார்கள். எனவே பானை சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். இந்திய அளவில் கவனிக்கக் கூடிய தலைவராக திருமா திகழ்கிறார். அவர் இந்த தொகுதி பிரதிநிதி மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்தியாவுக்கான பிரதிநிதி ஒடுக்கப்பட்ட வஞ்சிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதியாக செயல்படுகிறார். அவரை பாராளுமன்றத்திற்கு அனுப்புவது தான் நமக்கு பெருமை.  ஏப்ப சாப்பைகளை அனுப்பி என்ன பயன் எனவே சிந்தித்து திருமாவை தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெறவைப்பது நமது கடமை” எனப் பேசினார்.

இவருடன் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மேலிடப்பார்வையாளர் பாவரசு, கட்சியின் மாவட்டச்செயலாளர் அரங்கத்தமிழ்ஒளி, முன்னாள் மாவட்டச்செயலாளர் பால.அறவாழி, திராவிடர் கழக மாவட்டச்செயலாளர் சித்தார்த்தன் உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.