Skip to main content

சிவகாசி மாநகராட்சி: ராஜேந்திரபாலாஜி டிராமா! கவுன்சிலர்கள் தாவல்! - அதிர்ச்சி தகவல்கள்!

Published on 02/03/2022 | Edited on 02/03/2022

 

Sivakasi Corporation: Rajendrapalaji Drama! - Councilors tab shocking information!

 

“இது பச்சைத் துரோகம்..” என்று திமுகவுக்குத் தாவிய  சிவகாசி மாநகராட்சி கவுன்சிலர்கள் 9 பேரையும் வசைபாடி நறநறத்தனர்,  விருதுநகர் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் இருவர். “இவங்கள்லாம் அடுத்த தேர்தல்ல நின்னு ஓட்டு கேட்டு போறப்ப இப்படியும் நடக்கும்ல.  ‘நீங்க சொன்ன சின்னத்துக்குத்தான் போன தடவை ஓட்டு போட்டோம்.  ஜெயிச்சதும் பொசுக்குன்னு மொத்தமா கட்சி மாறிட்டீங்க. இந்த தடவையும் மாற மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்? ஓட்டுக்கு எந்தக் கட்சிக்காரங்க பணம் கொடுத்தாலும் அப்பாவி மக்கள் வாங்கிக்குவாங்க.  ஆனா.. ஓட்டு போடறது அவங்களுக்குப் பிடிச்ச கட்சிக்குத்தான். அப்படித்தான் உங்களையும் தேர்ந்தெடுத்தாங்க. நீங்க என்னடான்னா, உங்க பேராசைக்காக அப்ப கட்சி மாறுனீங்க. இப்ப எந்த முகத்த வச்சு ஓட்டு கேட்டு வர்றீங்க?’ முகத்துக்கு நேரா இப்படி கேட்டாங்கன்னா, இந்த 9 கவுன்சிலர்களும் எப்படி வாயைத் திறக்கமுடியும்?” எனக் குமுறிவிட்டு,  தாவல் பின்னணி குறித்து அலசினார்கள்.  

 

“அதெப்படி போன 10 வருஷம் அதிமுகவுல சம்பாதிச்சிட்டு, அடுத்த 5 வருஷம் திமுகவுலயும் சம்பாதிக்கணும்னு கணக்கு போட்டு கட்சி தாவுறாங்க? ஆளும்கட்சிக்கு போயிட்டா இவங்கள்லாம் புனிதமாயிருவாங்களா? வருமானத்துக்கு அதிகமா இவங்க சம்பாதிச்ச சொத்துகளுக்கெல்லாம் பாதுகாப்பு கிடைச்சிருமா? 

 

Sivakasi Corporation: Rajendrapalaji Drama! - Councilors tab shocking information!
பலராமன்

 

ராஜேந்திரபாலாஜிய விரட்டி விரட்டி அரெஸ்ட் பண்ணுன வழக்குல புகார் கொடுத்த விஜயநல்லதம்பி,  ‘ஆவின் வேலை வாங்கித்தர ரூ.60 லட்சத்தை உதவியாளர் பலராமனிடம்தான் கொடுத்தேன். இந்த பலராமனின் 10 ஆண்டுகளுக்கு முந்தைய பிந்தைய சொத்துகளை ஆய்வு செய்தாலே உண்மை வெளிப்படும்.’ என்று குற்றம் சாட்டியிருந்தார். ராஜேந்திரபாலாஜி மீதான பண மோசடி வழக்கில் (ஏ-3) குற்றம் சாட்டப்பட்டவரான பலராமன் தற்போது திமுகவில் சேர்ந்துவிட்டார். 9 மாநகராட்சி கவுன்சிலர்களோடு இணைந்த பலராமனைக் காப்பாற்ற திமுக அரசு உதவினால், ராஜேந்திரபாலாஜி மீதான வழக்கு ஒண்ணுமில்லாம போயிருமே! இன்னைக்கு வரைக்கும் அந்த வழக்குல பலராமன் நிரந்தர ஜாமீன் வாங்கல. கோர்ட்டிலும் ஜாமீன் ஏறல. ஆனா, ரெண்டு அமைச்சர் முன்னால தைரியமா நின்னு ஆளும்கட்சில சேர்ந்துட்டேன்னு போட்டோ எடுத்துக்க முடியுது. இந்த விவரமெல்லாம் திமுக தலைமைக்கு தெரியுமா? 

 

இந்த பலராமன், விருதுநகர் மேற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ஆனதும், மாவட்ட அறங்காவலர் குழு தலைவரானதும்,  போன அதிமுக பீரியட்லதான். அபார வளர்ச்சியெல்லாம் அரசியல வச்சுத்தான்.   இவருக்கு சொந்தமா பல்லடத்தில் ரூ.300 கோடி பெறுமான மில் இருக்கு.  மூணு ஷிப்ட் வேலை நடக்கு. பலராமனின் கோடிக்கணக்கான பணம் பினாமிகளின் பெயரில் சிவகாசி பட்டாசு நிறுவனங்கள்ல புரளுது.  இவ்வளவு சம்பாத்தியம் எப்படி வந்துச்சுன்னு,  ராஜேந்திரபாலாஜி மேல உள்ள கோபத்துல பலராமன் பக்கம் திரும்பிடக்கூடாதுன்னுதான் பாதுகாப்பு தேடி திமுகவுக்கு போயிட்டாரு. 

 

Sivakasi Corporation: Rajendrapalaji Drama! - Councilors tab shocking information!
பொன் சக்திவேல், பலராமன், லெனின் கிருஷ்ணமூர்த்தி 

 

கூண்டோடு கட்சி தாவ வச்சதுல லெனின் கிருஷ்ணமூர்த்தியோட பங்கு நெறய இருக்கு. இந்த லெனின் கிருஷ்ணமூர்த்தி எந்தக் கட்சிலயும் இல்ல. ஆனா, அதிமுக, திமுக முக்கிய பிரமுகர்களுக்கு பினாமியா இருந்து தொழிலதிபரா ஆயிட்டாரு. மதுரை வடக்கு தொகுதி திமுக எம்.எல்.ஏ.வும், மதுரை மாநகர் மாவட்ட செயலாளருமான கோ.தளபதியைப் பிடித்து,  தெலுங்கு லாபி மூலம் இணைப்பு வேலைய பண்ணிருக்காங்க. பலராமன், லெனின் கிருஷ்ணமூர்த்தி, சீனிவாசன் அப்புறம் மாவட்ட திமுக இளைஞரணி பொறுப்புல இருந்த கே.வி.கந்தசாமி.. இந்த நாலு பேர் விரிச்ச வலையில, திருத்தங்கல் அதிமுக ந.செ. பொன் சக்திவேல் சிக்கிட்டாரு. அதிமுகவை விட்டுப்போக மனசே இல்லாம,  உள்ளுக்குள்ள அழுதுகிட்டேதான் போயிருக்காரு பொன் சக்திவேல். ராஜேந்திரபாலாஜி மாதிரியே உன்னையும் விடமாட்டாங்கன்னு சொல்லியே பொன் சக்திவேலை கூட்டிட்டு போயிட்டாங்க.   ‘உன்னையும் விஜிலன்ஸ வச்சு சோலிய முடிச்சிருவாங்க’ன்னு அதிமுக முக்கிய நிர்வாகி ஒருவருக்கும் மிரட்டி அழைப்பு விடுத்திருக்காங்க.  அவரோ ‘நான் வரல..’ என்று அதிமுகவுல இப்பவரைக்கும் ஸ்டெடியா இருக்காரு. 

 

இன்னொரு பேச்சும் நம்புறமாதிரியே ஓடிட்டிருக்கு.  அதாவது, ராஜேந்திரபாலாஜிக்கு ரொம்பவும் நெருக்கமா இருந்தாரு சீனிவாசன். தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அப்ப முதலமைச்சரா இருந்த  எடப்பாடி பழனிசாமி அமெரிக்கா சென்றபோது ராஜேந்திரபாலாஜியும் போயிருந்தார். அப்ப இந்த சீனிவாசனும் ராஜேந்திரபாலாஜியோட நட்புக்காக அமெரிக்காவுக்கு ட்ரிப் அடிச்சாரு.   இவ்வளவு நெருக்கமா இருந்துட்டு,  இப்ப ராஜேந்திரபாலாஜிய அம்போன்னு விட்டுட்டு,  சீனிவாசன் எதுக்கு திமுகவுக்கு போகணும்? இங்கேதான் ட்விஸ்ட் இருக்கு. அமைச்சரா இருந்தப்ப எந்த நேரமும் தன்கூடவே இருந்தவங்கள இப்ப திமுகவுல சேரச்சொல்லி அனுப்பியதே ராஜேந்திரபாலாஜிதான். அங்க போயி மொதல்ல நீங்க உங்கள காப்பாத்திக்கங்க. அது நடந்தா, எனக்கும் நல்லதுதான்னு சீனிவாசனை வாழ்த்தி அனுப்பிருக்காரு. ஏன்னா, எந்த ஒரு காரியத்துல இறங்கினாலும், ராஜேந்திரபாலாஜிகிட்ட திருநீறு பூசி ஆசிவாங்குற வழக்கத்த சீனிவாசன் கடைப்பிடிச்சிட்டு வர்றாரு.  ராஜேந்திரபாலாஜி நடத்துன இந்த டிராமா, அவரோட அரசியல் ஆசான் கே.கே.எஸ்.எஸ்.ஆருக்கு தெரியாம இருக்காது.” என்றனர். 

 

Sivakasi Corporation: Rajendrapalaji Drama! - Councilors tab shocking information!
சீனிவாசன்

 

இதுகுறித்து விளக்கம்பெற சீனிவாசனைத் தொடர்புகொண்டபோது, நம்மைத் தவிர்த்தார். கட்சி தாவலுக்கு துணைநின்றவர்களும், செல்போன்களை ஸ்விட்ச்-ஆப் செய்திருந்தனர். தொடர்ந்து முயற்சித்தும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி நமது லைனுக்கு வரவில்லை. 

 

கட்சி தாவல் நாடகமெல்லாம் என்ன மாடல் அரசியலோ? 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.