style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். திமுக சார்பில் கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பொதுமக்களிடம் பெறப்பட்ட கையெழுத்துகள் குடியரசு தலைவருக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக இன்று (08.02.2020) காலை சைதாப்பேட்டையில் உள்ள அரங்கநாதன் சுரங்கப்பாதை அருகே உள்ள வண்டிக்காரன் தெருவில் நடைபெற்ற கையெழுத்து இயக்கத்தில் திமுக மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி கருணாநிதி அவர்கள் பங்கேற்று மக்களிடம் கையெழுத்து பெற்றார்.