Skip to main content

எஸ்.ஐ. தேர்விலும் ஊழல் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு?

Published on 18/03/2020 | Edited on 18/03/2020

 

தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் நடத்தும் காவல் உதவி ஆய்வாளர்கள் தேர்வுக்கான அறிவிப்பு 2019 மார்ச் மாதம் வெளியிட்டு ஜனவரி 12,13 தேதிகளில் 32 மாவட்டங்களில் நடைபெற்றது. அதில் முதல்கட்டமாக நடைபெற்ற பொதுப் பிரிவுக்கான தேர்வு  மிகவும் கடினமாக இருந்த நிலையில் 13ம் தேதி காவலர் துறையினர்களுக்கான 20 சதவீதம்  இட ஒதுக்கீட்டிற்கான தேர்வு நடைபெற்றது. இதில்  அனைத்து வகையான முறைகேடுகள்  அரங்கேறியுள்ளது. 

 

 Employee -



12ம் தேதி எஸ்.ஐ பொது தேர்வு எழுதிய மாணவர்களுக்கு  கைக் கடிகாரம் , கைப் பேசி, எலக்ட்ரிக் சம்பந்தப்பட்ட எந்தப் பொருட்களும் உள்ளே அனுமதிக்கவில்லை,  நீட் தேர்வுக்கு செய்த விதிமுறைகளைப் போலவே இருந்துள்ளது.  
 

சென்னை மதுரவாயல் உள்ள கல்லூரி ஒன்றில் 13ம் தேதி நடைபெற்ற காவலர்களுக்கான தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வை எழுதிய பிறகு காவலர் ஒருவர்  தங்களுடைய காவலர் வாட்ஸ்அப் குருப்பில் தேர்வு மிகவும் கடினமாக இருந்ததைத் தங்களின் மனதில் உள்ளதை கொட்டித் தீர்த்துள்ளார். இந்தத் தேர்வை எழுதிய இன்னோறு நபர் இரண்டு நாள் கழித்து இது தொடர்பாக வழக்கு தொடுப்பேன், எல்லோருமே பார்த்துதான் எழுதினாங்க என்று சொல்ல, அதற்கு இன்னோரு காவலர் இப்படி பேசியுள்ளார்.
 

“இவ்வளவு பேசரயே மச்சி, டிப்பார்ட்மண்ட் கோட்டா தேர்வு மதுரவாயல் காலேஜில் எழுதிட்டு, பொதுத் தேர்வில் வரவில்லை என்றாலும் டிப்பார்ட்மெண்ட் கோட்டா போயிடுவேன் என்று சொல்லி நீ மதுரவாயில் பிரிஜ்மேல ஆட்டம் போட்டுட்டு போன நீயூஸ்யெல்லாம் எனக்கு எப்போ வந்திடுச்சி, இப்போ வந்து இரண்டு நாள் கழிச்சி கூவர, யா கீ லிஸ்ட்டில் பார்த்தட்டியா அதுலயும் மார்க் வராதா, அதனாலதான் இரண்டு நாள் கழித்து ஆடரயோ, 
 

உங்க டீம் ஆளுங்க எல்லோரும் டிப்பார்ட்மண்ட் கோட்டா எழுதிட்டு ஆட்டம் போட்டுட்டு இப்போ வந்து கேஸ்ப்போடுவேன்  அதைப் பண்ணுவேன் இதைப் பண்ணுவேன் என்று சொல்லுர, என்ன நீ எழுதன எல்லாத்தையுமே வீடியோ எடுத்து வச்சிருக்கியா? அப்படி இருந்தாலும் நீயும் தான் என்னைப்பார்த்து  எழுதன என்று அவன் சொன்னா நீயும் தான் மாட்டுவாய், நீ டிப்பார்மண்ட் மேல கேஸ் போட்டு எதிர்த்து வெற்றி பெறுவது கஸ்ட்டம் அப்படியே போட்டாலும் மொத்த தேர்வயுமே நிறுத்தவேண்டிய சூழ்நிலை வந்தும் பார்த்துக்கோ, அதனால மூடிட்டு அடுத்த தேர்வு வந்தா எழுதிட்டு போ இது காலம் காலமாக நடப்பதுதான்” என்றார்.


இது தொடர்பாக பேசிய  தேர்வு ஆணையம் டி.ஜி.பி கரன்சிங்காவிடம் கேட்டபோது இது போன்ற தவறுகள் நிச்சியம்  நடந்திருக்க வாய்ப்புகள் இல்லை நாங்கள் தெளிவாகத் தான் நடத்தியுள்ளோம் மேலும் இது போன்ற தகவல் இருந்தால் அந்த நிர்வாகிகள் மீதும் அதன் தொடர்பானவர்கள் மீதும் நிச்சியம் நடவடிக்கை பாயும் என்றார்.
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தில் 1085 வேட்பு மனுக்கள் ஏற்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
1085 nominations accepted in Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதாவது திருவள்ளூர் - 31, வட சென்னை - 67, தென் சென்னை - 64, மத்திய சென்னை - 58, ஸ்ரீபெரும்புதூர் - 53, காஞ்சிபுரம் - 31, அரக்கோணம் - 44, வேலூர் - 50, கிருஷ்ணகிரி - 41, தருமபுரி - 44, திருவண்ணாமலை - 49, ஆரணி - 48, விழுப்புரம் - 31, கள்ளக்குறிச்சி - 37, சேலம் - 52, நாமக்கல் - 58, ஈரோடு - 52, திருப்பூர் - 46, நீலகிரி - 33, கோயம்புத்தூர் - 59, பொள்ளாச்சி - 44, திண்டுக்கல் - 35, கரூர் - 73, திருச்சிராப்பள்ளி - 48, பெரம்பலூர் - 56, கடலூர் - 30, சிதம்பரம் - 27, மயிலாடுதுறை - 30, நாகப்பட்டினம் - 26, தஞ்சாவூர் - 36, சிவகங்கை - 39, மதுரை - 41, விருதுநகர் - 41, ராமநாதபுரம் - 56, தூத்துக்குடி - 53, தென்காசி - 37, திருநெல்வேலி - 53, கன்னியாகுமரி - 33 என மொத்தம் 1749 வேட்புமனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்து திருவள்ளூர் -14, வட சென்னை - 49, தென் சென்னை - 53, மத்திய சென்னை - 32, ஸ்ரீபெரும்புதூர் - 32, காஞ்சிபுரம் - 13, அரக்கோணம் - 29, வேலூர் - 37, கிருஷ்ணகிரி - 34, தருமபுரி - 25, திருவண்ணாமலை - 37, ஆரணி - 32, விழுப்புரம் - 18, கள்ளக்குறிச்சி - 21, சேலம் - 27, நாமக்கல் - 48, ஈரோடு - 47, திருப்பூர் - 16, நீலகிரி - 16, கோயம்புத்தூர் - 41, பொள்ளாச்சி - 18, திண்டுக்கல் - 18, கரூர் - 56, திருச்சிராப்பள்ளி - 38, பெரம்பலூர் - 23, கடலூர் - 19, சிதம்பரம் - 18, மயிலாடுதுறை - 17, நாகப்பட்டினம் - 9, தஞ்சாவூர் - 13, சிவகங்கை - 21, மதுரை - 21, விருதுநகர் - 27, ராமநாதபுரம் - 27, தூத்துக்குடி - 31, தென்காசி - 26, திருநெல்வேலி - 26, கன்னியாகுமரி - 27 என மொத்தம் 1085 வேட்புமனுக்கள் எற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 56 வேட்பாளர்களும், குறைந்தப்பட்சமாக நாகப்பட்டினத்தில் 9 வேட்பாளர்களும் போட்டியில் உள்ளனர். வேட்புமனுக்களை திரும்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும். 

Next Story

தமிழகத்தில் 1749 வேட்பு மனுக்கள் தாக்கல்! 

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
1749 nominations filed in Tamil Nadu
தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு (கோப்புப்படம்)

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. மேலும் தமிழகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய இன்றே கடைசி (27.03.2024) நாள் ஆகும்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளில் 1403 பேர் தங்களது வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர் என்ற விவரம் வெளியாகியுள்ளது. இதற்கான தகவலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இந்த வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நாளை (28.03.2024) நடைபெற உள்ளது. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

அதாவது திருவள்ளூர் - 31, வட சென்னை - 67, தென் சென்னை - 64, மத்திய சென்னை - 58, ஸ்ரீபெரும்புதூர் - 53, காஞ்சிபுரம் - 31, அரக்கோணம் - 44, வேலூர் - 50, கிருஷ்ணகிரி - 41, தருமபுரி - 44, திருவண்ணாமலை - 49, ஆரணி - 48, விழுப்புரம் - 31, கள்ளக்குறிச்சி - 37, சேலம் - 52, நாமக்கல் - 58, ஈரோடு - 52, திருப்பூர் - 46, நீலகிரி - 33, கோயம்புத்தூர் - 59, பொள்ளாச்சி - 44, திண்டுக்கல் - 35, கரூர் - 73, திருச்சிராப்பள்ளி - 48, பெரம்பலூர் - 56, கடலூர் - 30, சிதம்பரம் - 27, மயிலாடுதுறை - 30, நாகப்பட்டினம் - 26, தஞ்சாவூர் -  36, சிவகங்கை - 39, மதுரை - 41, விருதுநகர் - 41, ராமநாதபுரம் -  56, தூத்துக்குடி - 53, தென்காசி - 37, திருநெல்வேலி - 53, கன்னியாகுமரி - 33 என மொத்தம் 1749 வேட்புமனுக்கள் பெறப்பட்டுள்ளன.