தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்று திமுக தலைமையிலான அரசு தமிழ்நாட்டில் பொறுப்பேற்றிருக்கும் நிலையில் கரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுவருகிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் பட்ஜெட்டின்போது ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட இருப்பதாக அப்போதைய நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். இந்நிலையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "ஜெயலலிதா பெயரிலான பல்கலைக்கழகத்தை திமுக அரசு மூடும் முயற்சியில் இறங்கியிருப்பது கண்டிக்கத்தக்கது. ஜெயலலிதா பெயரில் பல்கலைக்கழகம் இருக்கக்கூடாது என்ற அரசியல் காழ்புணர்ச்சியில் திமுக ஈடுபடுகிறது. அதிமுக ஆட்சியில் உருவாக்கியவற்றை எல்லாம் கலைப்பது என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல" என தெரிவித்துள்ளார்.