'Shock' given by DMK To TamilNadu Congress

Advertisment

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி இன்று காலை டெல்லியில் கூடியது. இந்த கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியில் சோனியா காந்தி தொடர வேண்டும் என காரிய கமிட்டி கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட பலர் வலியுறுத்தியுள்னர்.

இதனிடையே, அடுத்து நடைபெறக்கூடிய பீகார் மற்றும் தமிழ்நாடு தேர்தல் தொடர்பாக இன்று நடக்க உள்ள காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் முடிவு எடுப்பதால் ஆரம்ப கட்டமாக தி.மு.க.வை சேர்ந்த ஒரு குழுவுடன் சோனியாகாந்தி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஆட்சியில் பங்கு வேண்டும் என தொடங்கிய சோனியா காந்தியிடம், 10 சீட்டுதான் உங்களுக்கு என தி.மு.க. குழு பேசிவிட்டு சென்றுள்ளது என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisment