Skip to main content

மதத்தின் பெயரால் வாக்கு சேகரிப்பது அவமானம்! - பாஜகவை விமர்சிக்கும் பிரகாஷ்ராஜ்

Published on 29/04/2018 | Edited on 29/04/2018

மதத்தின் பெயரால் வாக்கு சேகரிப்பது அவமானகரமானது என பா.ஜ.க.வை நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சித்துள்ளார்.

 

 

கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் வரும் மே 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றிபெறும் முனைப்போடு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதில் மங்களூரு தெற்கு தொகுதியில் போட்டியிடும் வேதய்யா காமம் என்பவரின் மனைவி, அவருக்கு வாக்கு சேகரிக்கும் வீடியோ சமீபத்தில் சமூக வலைதளங்களில் வைரலானது. 

 

அந்த வீடியோவில், ‘என் கணவர் இந்து என்பதால், இந்துக்கள் அனைவரும் அவருக்கே வாக்களித்து, அதன்மூலம் இந்து மதத்தையும், இந்து சித்தாந்தத்தையும் காப்பாற்ற உதவவேண்டும். முஸ்லிம்களுக்கு வாக்களித்தால் அவர்கள் இந்துக்களின் அடையாளத்தை அழித்துவிடுவார்கள்’ என மதத்தினை முன்னிலைப்படுத்தி வாக்கு சேகரித்திருந்தார்.

 

பொதுவாக தனது ட்விட்டர் பக்கத்தில் #JustAsking ஹேஷ்டேக்குடன் பாஜகவை விமர்சிக்கும் நடிகர் பிரகாஷ்ராஜ், இந்த வீடியோவை பதிவிட்டு, ‘கர்நாடக மாநிலம் தெற்கு மங்களூரு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரின் மனைவி வாக்கு சேகரிப்பதைப் பார்த்தீர்களா? பாஜகவின் மதவாத அரசியல் அவமானகரமானது. இதுதான் உங்களின் அனைவருக்குமான வளர்ச்சியா? என எழுதியுள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.