Skip to main content

“டீ செலவுக்கு கூட காசு இல்லை” - செல்வப்பெருந்தகை!

Published on 08/04/2024 | Edited on 08/04/2024
Selvaperunthagai says No money even for tea

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. 

அதே வேளையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குறுதிகள் கொண்ட அறிக்கையை கடந்த 5ஆம் தேதி காங்கிரஸ் கட்சி வெளியிட்டது. அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அக்கட்சியின் மூத்த தலைவர்களான சோனியா காந்தி, ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் அறிக்கையை வெளியிட்டனர். 5 தலைப்புகளில் 25 வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அளித்தது. 

இந்த நிலையில், இந்த தேர்தல் அறிக்கைக்கான தமிழாக்கத்தை சென்னை, சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை இன்று (08-04-24) வெளியிட்டார். அதன் பின்னர், செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் கொடுத்த அனைத்து வாக்குறுதிகளையும், கொடுக்காத வாக்குறுதிகளையும் கொடையாக அர்ப்பணித்துள்ள ஒரே கட்சி காங்கிரஸ் கட்சிதான். தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு முன்பு பா.ஜ.க வேட்பாளருக்கான கொண்டு சென்ற ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. 

இதுவே ஒரு எதிர்க்கட்சி அல்லது மாநில கட்சி வேட்பாளரிடம் இருந்து எடுத்து இருந்தால் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சி.பி.ஐ சும்மா இருந்திருப்பார்களா?. மோடியும், நிர்மலா சீதாராமனும் இதுவரை வாய் திறக்கவில்லை. பா.ஜ.கவிடம் கோடி கோடியாக பணம் உள்ளது. ஆனால், காங்கிரஸ் வேட்பாளர்களிடம் டீ செலவுக்கு கூட காசு இல்லாமல், வெறும் தண்ணீரை குடித்துக் கொண்டு பிரச்சாரம் செய்து வருகின்றனர்” என்று கூறினார். 

சார்ந்த செய்திகள்