Skip to main content

‘இது என்ன பிரமாதம், இதை விட ஸ்பெஷல் ஐட்டம் ஒன்னு இருக்கு’ - செல்லுராஜு கலகலப்பு

Published on 21/02/2023 | Edited on 21/02/2023

 

sellur raju Propaganda erode east byelection

 

ஈரோடு கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் தென்னரசுவை ஆதரித்து அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு 20 ஆம் தேதி(நேற்று) ஈரோடு கிழக்கு தொகுதிக்குட்பட்ட அந்தோணியார் வீதி என்ற பகுதியில் பொதுமக்களிடம் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டார். ஏற்கனவே அங்கு அதிமுகவினர் மக்களை கொண்டு வந்து உட்கார வைத்திருந்தனர்.

 

இந்நிலையில் அங்கு வந்த செல்லூர் ராஜு மக்களிடம் பேசத் தொடங்கினார் அப்போது அவர், “எல்லோரும் நல்லா இருக்கீங்களா? ஈரோடு நல்ல ஊருங்க; இந்த ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் போன்று இதுவரை நான் ஒரு தேர்தலையும் பார்க்கவில்லை. இந்த தேர்தலை பார்க்க அதிசயமாக இருக்கு. அமைச்சர்கள் அனைவரும் காரில் பவனி வருகிறார்கள். தலைமைச் செயலகத்துக்கு சென்றால் கூட அவர்களை பார்க்க முடியாது. ஆனால் தற்போது எளிதாக பார்க்க முடிகிறது. ஈரோடு மக்கள் அன்பானவர்கள், பாசமானவர்கள். கோபப்பட்டால் கூட அன்பாக பதில் சொல்லக்கூடியவர்கள். நீங்கள் அதிமுகவுக்கு ஓட்டு போட தயாராகி விட்டீர்கள். 19 ந் தேதி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட நடிகர் கமல்ஹாசன் இந்திய தேசத்திற்கு அச்சுறுத்தல் வந்துள்ளதாக கூறியுள்ளார். அப்படி என்ன அச்சுறுத்தல் வந்துவிட்டது? பாகிஸ்தான் நம் மீது படையா எடுக்கப் போகிறது?  

 

கமல்ஹாசன் நல்ல நடிகர். அவர் நடித்த அபூர்வ சகோதரர்கள் படம் பார்த்துள்ளேன். நன்றாக நடித்துள்ளார். ஆனால் சினிமா வேறு அரசியல் வேறு. எல்லாராலும் எம்ஜிஆர் போல் ஆகிவிட முடியாது. கமலஹாசன் சினிமாவில் கால்ஷீட் கொடுப்பது போல் ஒருநாள் பிரச்சாரத்திற்கு கால் சீட் கொடுத்துள்ளார். நடிகர்  சிவாஜியே கட்சியை தொடங்கி அது சரிப்பட்டு வராததால் கலைத்து விட்டார், இவர் எம்மாத்திரம். சினிமா போர்வையில் மக்களை ஏமாற்றுகிறார். அதிமுக 31 ஆண்டுகாலம் ஆட்சி செய்து உள்ளது. மக்கள் மீது எந்த ஒரு வரியும் திணிக்கவில்லை. திமுக ஆட்சி ஏற்றதும் சொத்துவரி, மின் கட்டண,  பால் விலையை உயர்த்தி விட்டது. இந்த ஆட்சியால் நீங்கள் தவித்து வருகிறீர்கள். மக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். அதிமுகவின் பல்வேறு நலத்திட்டங்களை நிறுத்திவிட்டனர். கொரோனா காலகட்டத்தில் ஒட்டுமொத்த உலகமே ஸ்தம்பித்து இருந்தது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி ஒவ்வொரு மாவட்டம் வாரியாக சென்று மக்களைச் சந்தித்தார். 

 

பல்வேறு நடவடிக்கையால் கொரோனா கட்டுக்குள் வந்தது. ஆனால் மு.க ஸ்டாலின் வீடியோ கால் மூலம் மக்களைச் சந்தித்துப் பேசினார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுகவினருக்கு தகுந்த பாடம் புகட்டி அதிமுகவை வெற்றி பெற வைக்க வேண்டும்" என்று கூறிய செல்லூர் ராஜ் பிறகு கூட்டத்திலிருந்த பெண்களைப் பார்த்து "என்ன வேலை செய்றீங்க? என்று கேட்டார் அதற்கு ஒரு பெண் "விவசாய வேலைக்கு போவோம், கூலி வேலைக்கும் செல்வோம்" என்றார். "நல்லது... நல்லது..." என்ற செல்லூர் ராஜு அங்கிருந்து கிளம்பினார்.

 

அதேபோல், ஈரோடு மரப்பாலம் பகுதியில் செல்லூர் ராஜூ ஒரு வீட்டின் முன்பாக அமர்ந்து திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது  கரும்பலகையில் இன்றைய விலைவாசி உயர்வு குறித்து எழுதி மக்களுக்கு இதனால் கூடுதலாக எவ்வளவு செலவாகிறது என்பது குறித்து பள்ளி ஆசிரியர் பாடம் நடத்துவது போல குச்சி ஒன்றை வைத்துக்கொண்டு விளக்கிக் கொண்டிருந்தார். அப்போது இதுகுறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, “தம்பி நானே தயாரித்த என் சொந்த ஸ்கிரிப்ட். நான் நிறைய சிந்திப்பேன். இது போன்று நிறைய வைத்துள்ளேன். ஒவ்வொன்றாக வெளியே எடுப்பேன்” எனப் பதிலளித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.