Skip to main content

இதெல்லாம் தி.மு.க. செய்யும் தில்லுமுல்லு! செல்லூர் ராஜூ பேட்டி!

Published on 01/06/2020 | Edited on 01/06/2020

 

Sellur K. Raju


மதுரை மேலப்பெருமாள் மேஸ்திரி வீதியில் ஏழை - எளிய மக்களுக்கு இலவச அரிசி, காய்கறி பலசரக்கு உள்ளிட்ட பொருள்களை முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர் தளபதி மாரியப்பன் சார்பில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு வழங்கினார்.
 


நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கோவில் நகரமான மதுரை மாநகரின் கோவில்கள் திறக்காததால் வாழ்வாதாரம் இழந்ததாகப் பொதுமக்கள் கூறுவதாகக் கேட்ட கேள்விக்கு, 'கோவில்களைத் திறப்பது தொடர்பான கோரிக்கையை தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்படும். சமூக இடைவெளி பின்பற்ற வேண்டும் என்பதற்காகவே கோவில்கள் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களைத் துன்புறுத்த வேண்டும் என்பது தமிழக அரசின் எண்ணம் இல்லை. கரோனா தாக்கம் குறையும் பட்சத்தில் அதி விரைவில் கோவில்களைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

குடும்ப அட்டைகளை வழங்கினால் ரூபாய் ஐம்பதாயிரம் கடன் வழங்கப்படும் என்பது பற்றிய விளக்கம் இல்லாததால் பொதுமக்கள் சிரமப்படுவதாகக் கேட்ட கேள்விக்கு, 'வங்கிக் கிளைகளுக்குச் சென்று உரிய ஆவணங்களைச் செலுத்தினால் உரிய கடன் வழங்கப்படும்' என்றார்.
 

 


தொடர்ந்து பேசிய அவர், 'அ.தி.மு.க. சார்பாக எந்தப் போராட்டமும் அறிவிக்கப்படவில்லை. அ.தி.மு.க.வை பற்றி தவறான செய்திகளைப் பரப்புகிறார்கள். இதெல்லாம் தி.மு.க. செய்யும் தில்லுமுல்லு. அ.தி.மு.க.வை பற்றி இல்லாத ஒன்று சொல்லி கெடுதலை உருவாக்க வேண்டும் என்பதே தி.மு.க.வின் எண்ணமாக உள்ளது. முதலமைச்சர் மீது பற்றும் பாசமும் தமிழக மக்கள் கொண்டுள்ளனர். மற்ற மாநிலத்தில் உள்ள முதலமைச்சர்கள் அமைதியாக இருக்கும் நிலையில் நம்முடைய முதல் அமைச்சர் அள்ளி அள்ளி கொடுப்பதைப் பார்த்து பொறுக்க முடியாமல் தி.மு.க.வின் தில்லுமுல்லு தான், சமூக வலைத்தளங்களில் தவறாகப் பரப்புகிறது. 

தேவை இருக்கும் பட்சத்தில் வெளியே வரவேண்டும். கட்டுப்பாடு என்பது பாதுகாப்பாக இருக்க வேண்டிதான் அரசு விதித்துள்ளது. மதுரையில் அ.தி.மு.க.வின் சார்பில் 2 லட்சம் பேருக்கு மேல் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளது இன்னும் எத்தனை பேர் கேட்டாலும் நிவாரணம் தர தயாராக உள்ளோம் மதுரையில் யாரும் பசியோடு இருக்கக் கூடாது என்பதே எங்கள் எண்ணம்' எனத் தெரிவித்தார்.



 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.