பொள்ளாச்சி, கோயம்புத்தூர் நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து 02-04-2019 செவ்வாய்கிழமை மாலை 05 மணியளவில், பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் அ.சனுஜாவை ஆதரித்து பொள்ளாச்சி ஆனமலை சாலை, வள்ளுவர் திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து இரவு 08 மணியளவில், கோயம்பத்தூர் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர் பேராசிரியர் கல்யாணசுந்தரம் மற்றும் நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் படுக தேச பார்ட்டி சார்பில் சுயேட்சையாகப் போட்டியிடும் மா.சுப்ரமணி ஆகியோரை ஆதரித்து கோவை, சோமனூர் பேருந்து நிலையம் அருகில் சீமான் பிரச்சாரம் மேற்கொண்டார்.