Skip to main content

''இதுதான் அந்த ரகசியம்...''கரூரில் உதயநிதி; உள்ளாட்சியிலும் செந்தில் பாலாஜியின் பிரமாண்டம்

Published on 09/02/2022 | Edited on 09/02/2022

 

'' This is the secret ... '' Udayanithi in Karur- Senthil Balaji's greatness in the locality!

 

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என உள்ளாட்சித் தேர்தல் களம் அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் பிரச்சாரம் சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. கரூர் மாவட்டத்தில் நடைபெறும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து 9 ஆம் தேதி திமுக இளைஞர் அணிச் செயலாளரும் எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் திறந்தவெளி வேனில் நின்றவாறு பிரச்சாரம் செய்தார்.

 

கரூர் மாநகராட்சியில் மொத்தம் 48 வார்டுகள். இதில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கரூர் பேருந்து நிலைய பகுதியில் உள்ள ரவுண்டானா அருகே பல்லாயிரக்கணக்கானோர் மத்தியில் அவர் பேசும்போது, "கரூர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதியிலும் இம்மாவட்ட மக்களாகிய நீங்கள் திமுகவை வெற்றிபெற வைத்தீர்கள். அடுத்து வரப்போகிற கரூர் மாநகராட்சியிலும் தி.மு.க.வுக்கு வெற்றியைத் தேடி தருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற 8 மாதத்தில் மிகப்பெரிய சாதனையை நமது திமுக அரசு செய்துள்ளது. மக்களுக்குக் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளோம்.

 

'' This is the secret ... '' Udayanithi in Karur- Senthil Balaji's greatness in the locality!

 

2 தவணைகளாக கரோனா நிவாரண நிதி ரூபாய் 4000 தரப்பட்டது. பெட்ரோல் விலை குறைப்பு, பெண்களுக்குப் பேருந்துகளில் இலவச கட்டணம், இல்லம் தேடி கல்வி, நம்மை காக்கும் 48, மின் நுகர்வோர்களுக்கு மின்னகம் மூலமாக 24 மணி நேரச் சேவை என மக்கள் நேரடியாகப் பயன்பெறும் பல நல்ல திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளோம். தமிழக அரசை பற்றி வட மாநில பத்திரிகை ஒன்று சர்வே நடத்தியுள்ளது. அதில் இந்தியாவில் முதன்மையான முதல்வர் ஸ்டாலின் தான் என்று கூறியுள்ளது. இந்தியாவில் முதன்மையான மாநிலமாக தமிழகத்தை மாற்றுவதற்கு தமிழக முதல்வர் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். நீட் தேர்வு ரத்து செய்ய மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியதை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப வேண்டும் என நேரில் சென்று தமிழக முதல்வர் கோரிக்கை வைத்தார். ஆனால் தமிழக ஆளுநர் அதை சபாநாயகருக்கே திருப்பி அனுப்பினார். மீண்டும் சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டி நீட் விலக்கு மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பியுள்ளோம்.

 

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு ரத்து குறித்து உதயநிதி ஸ்டாலின் ரகசியம் ஒன்று வைத்துள்ளார். அந்த ரகசியம் மூலமாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருக்கிறார். ரகசியம் இதுதான். நீட் தேர்வை ரத்து செய்யும் வரை நாங்கள் ஓயமாட்டோம். அதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுப்போம். ஆளுநர் அவர்களே தற்போது நடைபெறுவது அடிமை அதிமுக ஆட்சி கிடையாது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக ஆட்சி என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மோடி தமிழகத்தைப் பார்த்து திருந்த வேண்டுமென ராகுல்காந்தி பேசி உள்ளார். தமிழக மக்கள் பாசிச பா.ஜ.க.வுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கின்றனர்.

 

வருகிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கரூர் மாநகராட்சியில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த 48 பேரில் ஒருநபர் ஏற்கனவே போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டார். மீதமுள்ள 47 பேரை வெற்றி பெற வைக்க வேண்டியது மக்களாகிய உங்கள் பொறுப்பு" என்றார்.

 

கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், மின்சாரத்துறை அமைச்சருமான செந்தில் பாலாஜி உடனிருந்தார். இதுபோல தொடர்ந்து வேலாயுதம்பாளையம், கிருஷ்ணராயபுரம், குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார் உதயநிதி.

 

'' This is the secret ... '' Udayanithi in Karur- Senthil Balaji's greatness in the locality!

 

நீண்ட காலமாக அ.தி.மு.க.வின் கோட்டையாக இருந்த கரூர், தி.மு.க வுக்கு வந்த பிறகு மிகவும் துடிப்போடு, பாய்ச்சலாக பணியாற்றும் செந்தில்பாலாஜி, அ.தி.மு.க. எடப்பாடி ஆட்சியில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க.வை சேர்ந்தவர்கள் அதிக இடம் வெற்றி பெற வைத்தார். சட்டமன்ற தேர்தலில் மாவட்டத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட நான்கு சட்டமன்றத் தொகுதிகளிலும் தி.மு.க-வை வெற்றி பெற வைத்தார். பிறகு அ.தி.மு.க.வை சேர்ந்த மாவட்ட முக்கிய நிர்வாகிகள் பலரையும் தி.மு.க.வில் இணைய வைத்து அ.தி.மு.க தலைமைக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார்.

 

அதேபோல் செந்தில் பாலாஜிக்கு பொறுப்பு மாவட்டமாகக் கொடுக்கப்பட்ட கோவை மாவட்டத்திலும் அ.தி.மு.க. கட்டமைப்பை உடைக்க தொடங்கியுள்ளார். தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல் பிரச்சார கூட்டமாக கோவையில் நடைபெற்றது. இதில் காணொளி காட்சி மூலம் முதல்வர் சென்னையிலிருந்து பேசுவதை கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பல பகுதிகளில் உள்ள மூன்று லட்சம் மக்களைப் பங்கு பெற வைத்திருக்கிறார்.  செந்தில் பாலாஜி என்றாலே பிரம்மாண்டம் என கோவை மாவட்ட அ.தி.மு.க. அலறுகிறது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

''ராகுல் காந்தியே வருக... புதிய இந்தியாவை தருக...''-முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
"Rahul Gandhi come... bring a new India..."- Chief Minister M.K.Stal's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

இந்நிலையில் கோவை செட்டிபாளையத்தில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். முன்னதாக நெல்லை மாவட்டத்தில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் கலந்து கொண்ட ராகுல் காந்தி தற்பொழுது கோவை வந்துள்ள நிலையில் இருவரும் ஒரே மேடையில் பரப்புரையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''கோவை தொகுதியில் திமுகவினுடைய வேட்பாளராக போட்டியிடும் கணபதி ராஜ்குமார் இந்த மண்ணின் மைந்தர். கோவையின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டு மக்களுக்காக பணியாற்றியவர். உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்ய வேண்டும். கரூர் நாடாளுமன்ற வேட்பாளர் ஜோதிமணிக்கு கை சின்னத்தில் வாக்களித்து வாக்களிக்க வேண்டும். வெற்றி என்றால் சாதாரண வெற்றி அல்ல மாபெரும் வெற்றியை தர வேண்டும். மார்ச் 24 ஆம் தேதி என்னுடைய பரப்புரை பயணத்தை திருச்சியில் தொடங்கினேன். ஒவ்வொரு கூட்டமும் மாநாடு போல நடந்து கொண்டிருக்கிறது. அந்த வரிசையில் இந்தக் கோவை பொள்ளாச்சி கூட்டத்தையும் வெற்றிவிழா மாநாட்டை போல ஏற்பாடு செய்துள்ள அமைச்சர் முத்துசாமி, சுவாமிநாதன் மற்றும் செந்தில் பாலாஜிக்கும் ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தக் கூட்டம் மாநாடு போல நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் இதற்கு இந்தியாவின் உடைய இளம் தலைவர் ராகுல் காந்தி மகுடம் வைத்தது போல இங்கே பங்கேற்றுள்ளார். நாடு சந்திக்க இருக்கக்கூடிய இரண்டாம் விடுதலைப் போராட்டத்தின் காங்கிரஸ் கட்சியினுடைய கைகளை திமுக வலுப்படுத்தும். திமுக எப்போதும் சோதனை காலத்தில் காங்கிரஸ் கட்சியோடு இருக்கின்ற கூட்டணி கட்சி. அதே நேரத்தில் எப்பொழுதும் வெல்லும் கூட்டணி நம் கூட்டணி. சோனியா காந்தி மீதும், சகோதரர் ராகுல் காந்தி மீதும் தமிழ்நாட்டு மக்கள் என்றும் தனியாக அன்பும் பாசமும் கொண்டவர்கள். அப்படிப்பட்ட ராகுலை நம்ம ஸ்டைலில் வரவேற்க வேண்டுமென்றால், 'ராகுல் அவர்களே வருக புதிய இந்தியாவிற்கு விடியல் தருக' என இந்தியாவின் தென்முனையான தமிழ்நாட்டில் இருந்து நான் வரவேற்கிறேன்.

பாஜக வந்தால் கோவையின் அமைதி போய்விடும். ஜி.டி.நாயுடு பெயரில் கோவையில் நூலக அரங்கம் அமைக்கப்படும். கோவை மெட்ரோ ரயில் திட்டம் திருப்பூர் வரை நீட்டிக்கப்படும். திமுக அரசின் நெருக்கடி காலத்திலேயே இவ்வளவு செய்கிறோம் என்றால் இந்தியா கூட்டணி வந்த பிறகு நிறைய செய்வோம். மகளிர் உரிமைத் தொகை, புதுமைப்பெண் உள்ளிட்ட திட்டங்களை திமுக அரசு கொண்டுவந்துள்ளது'' என்றார்.

Next Story

31 வது முறையாக நீட்டிப்பு; நீதிமன்றம் அதிரடி

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
Extension for the 31st time; Court action

போக்குவரத்துத்துறையில் சட்டவிரோதமாக பணப்பரிமாற்றம் செய்ததாகப் பதியப்பட்ட வழக்கில், கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14 ஆம் தேதி சட்ட விரோதப் பணப்பரிமாற்றத் தடுப்பு சட்டத்தின் கீழ், அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். இந்த வழக்கு தொடர்பாகச் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜிக்கு எதிராகக் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 12 ஆம் தேதி குற்றப்பத்திரிகை மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை அமலாக்கத்துறையினர் தாக்கல் செய்தனர்.

அதே சமயம் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடித்து வந்தார். மேலும் செந்தில் பாலாஜி வகித்து வந்த இலாகாக்களான மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கும், மதுவிலக்குத்துறை அமைச்சர் சு. முத்துசாமிக்கும் ஒதுக்கப்பட்டது. இத்தகைய சூழலில் செந்தில் பாலாஜி கடந்த 12 ஆம் தேதி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து, அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் புதியதாக மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வரும் நிலையில்  இன்று நடைபெற்ற விசாரணைக்கு பிறகு மேலும் 15 நாட்களுக்கு செந்தில் பாலாஜிக்கான நீதிமன்ற காவலை 31 ஆவது முறையாக நீட்டித்து சென்னை மாவட்ட மூன்றாவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி டி.வி.ஆனந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.