Skip to main content

“இ.பி.எஸ். காலத்திலும் கள்ளச்சாராயம் இருந்தது... யாரும் இறக்கவில்லை..” - சீமான்

Published on 24/05/2023 | Edited on 24/05/2023

 

Seaman in the Villupuram, chengalpattu case

 

விழுப்புரம், செங்கல்பட்டில் கள்ளச்சாராயத்தால் இறந்தவர்கள் விவகாரத்தில் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.

 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “எடப்பாடி பழனிசாமி ஆட்சிக் காலத்திலும் டாஸ்மாக்கில் மது விற்கப்பட்டது. அப்போதும் கள்ளச்சாராயம் இல்லை என்றெல்லாம் சொல்ல முடியாது. நல்வாய்ப்பாக யாரும் அப்போது இறக்கவில்லை. இதற்கு முன் முதலமைச்சர் வெளிநாடு போனதில் எவ்வளவு முதலீடு வந்துள்ளது. அந்நிய முதலீடு என்பதே ஆபத்தானது தானே. அன்று பிரிட்டனிடம் மட்டும் அடிமையாக இருந்தது. இன்று உலக நாடுகளிடம் அடிமையாக இருக்க என் நாடு துடிக்கிறது. இது என்ன சுதந்திரம், விடுதலை.

 

சிங்களப் படையால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர்களுக்கு எவ்வளவு கொடுக்கப்பட்டுள்ளது. உழவர்கள் 400க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்த சம்பவங்கள் உள்ளன. அவர்களுக்கு நிவாரணம் எவ்வளவு கொடுத்தீர்கள். தூத்துக்குடியில் விஏஓ அதிகாரி கொலை செய்யப்பட்டார். அவருக்கு ரூ.10 லட்சம். நேர்மையான அதிகாரிக்கு ரூ.10 லட்சம், விஷச்சாராயம் அருந்தி இறந்தவர்களுக்கும் ரூ.10 லட்சம். அதில் சாராயம் விற்றவர்களுக்கும் ரூ.50 ஆயிரம். குற்றவாளிகளுக்கும் குடும்பம் இருக்கிறது என சொல்கிறார்கள். சிறையில் இருக்கும் அனைவருக்கும் வீட்டுக்கு வீடு சென்று பணம் கொடுப்பீர்களா? தஞ்சாவூரில் இறந்தவர்கள் உடலில் சயனைடு இருந்ததாக சொல்கிறார்கள். 

 

அதில் ஒருவர் சொல்கிறார், டாஸ்மாக்கில் விற்கப்படும் மதுவை விட கள்ளச்சாராயம் விலை குறைவாக இருக்கிறது என்று. இப்போதெல்லாம் வாழ்ந்து என்ன பயன் நாம் சாவோம் என முடிவெடுத்தால் யாரும் பால்டாயிலோ எலி மருந்தோ குடிக்க வேண்டாம். விஷச்சாராயம் எங்காவது விற்கிறதா என பார்த்து அதைக் குடித்து இறந்தால் வீட்டிற்கு ரூ.10 லட்சம் வரும். சாவது என முடிவெடுத்துவிட்டால் சாராயம் குடித்து சாவுங்கள். இது என் அன்பான வேண்டுகோள்” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சின்னம் கிடைக்காதவர்கள் பொறாமையில் பேசுகிறார்கள்' - ஜி.கே. வாசன் பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
'Those who don't get the symbol speak in envy'-GK Vasan Answer

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த கரும்பு விவசாயி சின்னத்திற்குப் பதிலாக மைக் சின்னம் கொடுக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து சின்னம் தொடர்பான பிரச்சனையில் மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் சிக்கின. மதிமுக பம்பரம் சின்னம் கேட்ட நிலையில், தேர்தல் ஆணையம் அச்சின்னத்தை தர முடியாது எனத் தெரிவித்திருந்தது. அதேபோல் விசிகவும் பானை சின்னம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது.

அண்மையில் புதிய சின்னமான மைக் சின்னத்தை அறிமுகப்படுத்திய நாம் தமிழர் கட்சியின் சீமான், ''தங்களுடைய கட்சிக்கு மட்டுமல்லாது மதிமுகவிற்கும் சின்னம் ஒதுக்குவதில் தேர்தல் ஆணையம் சுணக்கம் காட்டுகிறது. இரண்டு தொகுதியில் போட்டியிட்டால் தான் கேட்கும் சின்னம் கொடுக்கப்படும் எனச் சொல்கிறது. அப்படி பார்த்தால் விசிக இரண்டு தொகுதிகளில் தானே போட்டியிடுகிறது அவர்களுக்காவது  கேட்கும் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்க வேண்டும். இதே பாஜக கூட்டணியில் உள்ள தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக ஆகிய கட்சிகளுக்கு கேட்கும் சின்னம் கிடைத்துள்ளது. பாஜக கூட்டணியில் இருந்தால் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும்'' எனத் தெரிவித்திருந்தார்.

nn

இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''சில கட்சிகளுக்கு சின்னங்கள் கிடைக்கவில்லை என்று அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பொறாமையோடு பேசிக் கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றமே ஒரு தெளிவான உத்தரவை கொடுத்திருக்கிறது. முறையாக கணக்கு வழக்குகளை கொடுத்தால் உங்களுக்கு சின்னம் கிடைக்கும். அதை சரிவர செய்யாமல் எங்களுக்கு எங்களுடைய சின்னம் வேண்டும் என்று கேட்டால் சட்டத்திலேயே அதற்கு இடம் கிடையாது. தேர்தல் ஆணையம் நினைத்தவர்களுக்கு நினைத்ததை கொடுக்க முடியாது. அதற்கான அதிகாரம் அவர்களுக்கு இந்தியாவில் கிடையாது. நம்முடைய சின்னம் முக்கியம் என்றால் சின்னத்திற்கு ஏற்ற அரசியல் கட்சிகள் தங்களுடைய கோட்பாடுகளை முறையாக சரியாக செய்திருக்க வேண்டும். அது அவர்களுடைய கடமை'' என்றார்.

Next Story

வித்தியாசமான முறையில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த நாதக வேட்பாளர்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
 naam Tamil party candidate who came to file nomination in a different way

நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது,  இதற்காக மார்ச் 21ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி இன்று வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் பலரும் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். தமிழ் நாடு முழுவதும் வேட்பு மனு தாக்கல் இன்று மாலை 3 மணியோடு முடிவுற்றது.

வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடக் கூடிய மகேஷ் ஆனந்த் இன்று வேலூர் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் சுப்புலட்சுமியிடம் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

 ad

முன்னதாக வேலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்து அங்கிருந்து மக்கான், கிரீன் சர்க்கிள் வழியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாக வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.

அப்போது தாரை தப்பட்டைகள் முழங்க புலி வேஷமிட்டு நடனமாடியபடியும், அய்யன் திருவள்ளுவர், டாக்டர் அம்பேத்கர், மருது சகோதரர்கள், ராஜராஜ சோழன் போன்று வேடமிட்டு பேரணியாக வந்தனர்.