“பல லட்சம் கமிஷன் வாங்கிய சீமான்” - ராஜீவ் காந்தி கண்டனம்

Seaman talks about artist pen memorial; Rajiv condemned

முன்னாள் முதல்வர் கலைஞரின் நினைவாக மெரினா கடல் பகுதியில் 81 கோடி ரூபாய் மதிப்பில் பேனா சின்னம் அமைப்பது தொடர்பாக கருத்துக் கேட்புக் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று நடைபெற்றது.

இதில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக மற்றும் இயற்கை ஆர்வலர்கள் மற்றும் மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். நாம் தமிழர், சட்டப்பஞ்சாயத்து இயக்கம் ஆகிய இயக்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். நாம் தமிழர் சார்பாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். சமூக ஆர்வலர் முகிலன் கலந்து கொண்டார். முதலில் சட்டப்பஞ்சாயத்து இயக்கம் சார்பாக பேசிய சங்கர் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடலில் பேனா சின்னம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்துப் பேச ஆரம்பிக்க, அங்கிருந்த ஒரு தரப்பினர் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கூச்சலிட்டனர். தொடர்ந்து பேசிய சீமான், ''கடல் பகுதியில் பேனா சின்னம் வைப்பதால் பவளப்பாறைகள் பாதிக்கப்படும். உங்களுக்கு எதைப் பற்றிய அக்கறை இருக்கிறது? பேனா சின்னம் வச்சுப் பாருங்க.. ஒருநாள் நான் வந்து உடைக்கலன்னா பாருங்க.. யார் கேட்டா பேனா சின்னம்?ஏன், பேனாவை கடலுக்குள்ள தான் வைக்க வேண்டுமா? அண்ணா அறிவாலயத்தின் முன் வையுங்கள்; நினைவிடம் கட்டி உள்ளீர்களே, அங்கே வையுங்கள் கடலுக்குள்ளே தான் வைப்பீர்களா? பள்ளிக்கூடத்தைச் சீரமைக்க காசு இல்லை, பேனா வைக்க காசு எங்கிருந்து வருகிறது. இதனால் 13 மீன்பிடி கிராமங்கள் பாதிக்கப்படும். என் மீனவ மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். அனைத்து மீனவர் சங்கம், அகில இந்திய சங்கம் என வைத்துக்கொண்டு இதனால் ஒன்றும் பாதிப்பு இல்லை என்று சொல்லக்கூடாது'' என்று பேசினார்.

இது தமிழக அரசியலில் பரபரபை ஏற்படுத்தியது. இதற்கு திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி தனது கண்டனத்தைதெரித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் அவர் கூறியதாவது, “அதானியின் காட்டுப்பள்ளி துறைமுகத்தினை என் உயிரை கொடுத்தாலும் தடுத்து கடல் வளம் காப்பேன் என 2021-ல் பேசிய சீமான் இப்பஏன் பேசுவது, போராடுவது இல்லை? பல லட்சம் ரூபாய் கமிசன் வாங்கி கொண்டு அமைதியானார்! வசனம் பேசுவதும், வாய் சவடால் விடுவதும் சீமானுக்கு ஒன்றும் புதிது அல்ல!

சீமான் விட்ட முதல் உதார்-வாய்ச்சவடால் என்ன தெரியுமா? சிங்களன் எம் மீனவனை அடித்தால் நான் சிங்கள மாணவனை அடிப்பேன்! - 2008ம் ஆண்டு பேசியது. எத்தனை சிங்களவனை அடிச்சிங்க சீமான். வாய்ச்சவடால், பீலா விடுவதில் சீமான் எப்போதும் king தான்!” எனக் கூறியுள்ளார்.

rajivganthi seeman
இதையும் படியுங்கள்
Subscribe