Skip to main content

“அண்ணாமலை ஏன் குறுக்க மறுக்க வருகிறீர்கள்?” - கேள்வியெழுப்பும் சீமான்!

Published on 06/09/2023 | Edited on 06/09/2023

 

Seaman says Why are you coming to interrupt Annamalai

 

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில், 40 தொகுதிகளிலும் நாங்கள் நிற்கிறோம். என்னைவிட ஒரு சதவீதம் அதிகமாக அண்ணாமலை வாக்கு வாங்க முடியுமா என்று கேட்டிருந்தார். தி.மு.க. எங்களுக்கு பங்காளி போன்றவர்கள் என்று பேசியிருந்தார். அதற்கு விமர்சித்து பேசிய தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை , “ சீமானிடம் எனக்கு பிடித்ததே அவருடைய துணிச்சலான பேச்சும், தைரியமும் தான். ஒரு பெண் புகார் கொடுத்தவுடன் திமுக எங்களது பங்காளி என்று பேசுகிறார். இதனால், அவர் மீது வைத்திருந்த மரியாதை குறைந்து விட்டது” என்று கூறியிருந்தார்.

 

இந்த நிலையில், கோவையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொள்ள  சீமான் நேற்று கோவை விமான நிலையம் வந்து இறங்கினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து பேசும் அண்ணாமலையின் கருத்து குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை அரசு அதிகாரியாக இருந்து வந்தவர். கச்சத்தீவு, காவிரி, முல்லை பெரியார் இதில் எல்லாம் உங்கள் நிலைப்பாடு என்ன? என்று அண்ணாமலை சொல்ல வேண்டும். அடிப்படையில், தமிழ்நாடு என்றாலே தமிழ் தேசியம்தானே. தமிழ் தேசியம் இல்லை என்றால், மோடி செல்லும் ஒவ்வொரு நாட்டிலும் தமிழை பற்றி ஏன் பேசுகிறார்?

 

கர்நாடகாவில் இருக்கும் போது ‘பிரவுட் கன்னடியன்’ என்று பேசுவிட்டு கர்நாடகா பா.ஜ.க தலைவராக வேண்டியது தானே?. இங்கே எதற்கு வந்தீர்கள்?. நான் மோடி, அமித்ஷாவுடன் சண்டை போட்டு கொண்டிருக்கும் போது, அண்ணாமலை நீங்கள் எதற்காக குறுக்க மறுக்க வருகிறீர்கள்? ஓரமாய் போய் நில்லுங்கள்.

 

என் கட்சியில் நான் தான் முடிவு எடுக்கிறேன். அது போல் அண்ணாமலை எடுக்க முடியுமா? இந்த கட்சியை நான் உருவாக்கியது. நீங்கள் எத்தனை நாளைக்கு தலைவராக இருப்பீர்கள்? பொன். ராதாகிருஷ்ணன் போல் இதற்கு முன்னாடி இருந்த பா.ஜ.க தலைவர்கள் எல்லாம் எங்கே போனார்கள்?. அண்ணாமலை தமிழ்நாட்டுக்கு ஒரு மேஸ்திரி தான். ஆனால் நான் அப்படி கிடையாது. 20 தொகுதியில் ஆண்களையும், 20 தொகுதியில் பெண்களையும் என்னால் நிறுத்த வைக்க முடியும்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தடுப்பணையில் குளிக்கச் சென்ற சிறுவர்களுக்கு நேர்ந்த சோகம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Incident happened to the boys who went to dig in the dam

கோவை மாவட்டம், ஆனைமலை அருகே குரங்கு நீர்வீழ்ச்சி, அறிவுத்திருக்கோவில், ஆழியார் பூங்கா, வால்பாறை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. கோடை காலத்தின் போது, இந்தச் சுற்றுலா தலங்களுக்குப் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருகை தந்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது வழக்கம். 

இந்த நிலையில், குரங்கு நீர்வீழ்ச்சி தடுப்பணையில் பிரவீன் (17), தக்சன் (17), கவீன் (16) ஆகிய மூன்று பள்ளி சிறுவர்கள் குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது, அங்கு அவர்கள் தடுப்பணையின் ஆழமான இடத்திற்கு சென்ற போது, மூவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் நீரில் மூழ்கி இறந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. 

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பலியான மூவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தடுப்பணையில் பள்ளி மாணவர்கள் மூவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.