Skip to main content

சாத்தூர் தொகுதியில் இரண்டாமிடம் யாருக்கு?- மும்முனைப் போட்டியில் தகிக்கும் வேட்பாளர்கள்!    

Published on 28/03/2021 | Edited on 28/03/2021

 

SATTUR ASSEMBLY CONSTITUENCY CANDIDATES STRENGTH

 

நக்கீரன் மார்ச் 25 இதழில், ‘சட்டமன்றத் தேர்தல் 2021- 234 தொகுதிகளில் யார் முன்னிலை? பண விநியோகத்துக்கு முன் கள நிலவரம்!’ என்னும் தலைப்பில், கவர் ஸ்டோரி வெளியிட்டு, நக்கீரன் டீம் எடுத்த சர்வே விபரங்களை  வெளியிட்டுள்ளோம்.

 

சாத்தூர் தொகுதியில் நிலவும் மும்முனைப் போட்டியையும், வேட்பாளர்களை வரிசைப்படுத்தியும், நக்கீரன் இதழில் ‘கள நிலவரம்’ வெளி வந்திருக்கும் நிலையில், நக்கீரன் இணையதள வாசகர்களுக்காக, சாத்தூர் தொகுதி குறித்த விரிவான கட்டுரை இதோ- “அ.தி.மு.க.வை தோற்கடிப்பதே லட்சியம்..” என்று சவால்விட்டு, அ.ம.மு.க. பக்கம் தாவி சாத்தூர் தொகுதியில் போட்டியிடுபவர் சிட்டிங் எம்.எல்.ஏ. ராஜவர்மன்.

 

‘அப்படியென்றால் வெற்றி பெற்று மீண்டும் எம்.எல்.ஏ. ஆக வேண்டும் என்ற நினைப்பே இல்லையா?’ என்று கேட்டால், “அ.தி.மு.க.வை தோற்கடிப்பேன்; ம.தி.மு.க. வேட்பாளர் ரகுராமனையும் தோற்கடிப்பேன். மீண்டும் எம்.எல்.ஏ. ஆவேன். மக்கள் ஆதரவு எனக்கே இருக்கிறது.” என்று சிலிர்க்கிறார் ராஜவர்மன்.  

 

சாத்தூர் தொகுதியின் கள நிலவரம் எப்படி? 

ஜாதி மற்றும் கூட்டணி கட்சிகளின் வாக்கு வங்கி அடிப்படையிலான  ‘அரித்மெடிக்’ ம.தி.மு.க. வேட்பாளர் ரகுராமனுக்கு சாதகமாக உள்ளது. தொகுதியில் இரண்டாம் இடத்தில் உள்ள நாயுடு சமுதாய வாக்குகளை ரகுராமனால் அறுவடை செய்ய முடியும். முதலிடத்தில் உள்ள முக்குலத்தோர் வாக்குகளை, ராஜவர்மன் கணிசமாகவும், அ.தி.மு.க. வேட்பாளர் ரவிச்சந்திரன் கட்சி ரீதியாகவும் பிரித்துக்கொள்கின்றனர். தேர்தல் களத்தில் ‘எங்க ஏரியா.. உள்ளே வராதே!’ என்று முக்குலத்தோர் ஏரியாக்கள் பலவற்றில் ரவிச்சந்திரனுக்கும், சிலவற்றில் ராஜவர்மனுக்கும் எதிர்ப்பு இருக்கிறது. சாத்தூர் டவுண் நாடார் வாக்குகளும்கூட, ஓரளவுக்கு ராஜவர்மன் பக்கமே சாய்கின்றன.  தே.மு.தி.க. வாக்குகள் இவருக்கு ப்ளஸ்.

 

தொகுதியில் அதிகமாக உள்ள தாழ்த்தப்பட்ட மக்களின் வாக்குகள், யாருக்கு ஆதரவு என்ற தள்ளாட்டத்தில் இருக்கின்றன. அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்று, ஒரு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்ட புரட்சி பாரதம் கட்சிக்கென்று, இத்தொகுதியில் எந்த வாக்கு வங்கியும் இல்லை. அதேநேரத்தில், விடுதலைச் சிறுத்தைகளின் வாக்குகள், ம.தி.மு.க. வேட்பாளருக்கு பலம் சேர்க்கின்றன. இத்தொகுதியில் சிறுபான்மையினர் வாக்கு வங்கி சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை. ரெட்டியார், செட்டியார், சாலியர், பிள்ளை, யாதவர், மூப்பர் வாக்குகளில் பெரும்பாலனவை ரகுராமனுக்கும், ஓரளவுக்கு ராஜவர்மனுக்கும் போகின்றன.

 

நாம் தமிழர் வேட்பாளராக கி.பாண்டியும், ஐ.ஜே.கே. சார்பில் எம்.பாரதியும் களமிறங்கினாலும், மும்முனைப் போட்டியே நிலவுகிறது இத்தொகுதியில். வேட்பாளர்களைப் பொறுத்த மட்டிலும், கில்லியாகச் சுற்றிவருவது ராஜவர்மன் மட்டும்தான். பெருவாரியான ஆதரவுப் பட்டாளம் அவர் பின்னாலேயே செல்கிறது. வாக்கு சேகரிப்பதற்கு நடந்தே போகிறார். வாக்காளர்கள் யாரைப் பார்த்தாலும் காலில் விழுகிறார். ஏனென்றால், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை மட்டுமல்ல, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சித்துள்ளார். எம்.எல்.ஏ. பதவியைத் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை என்றால், அரசியலில் தனக்கு எதிர்காலம் இல்லை என்பதை  உணர்ந்துதான், வெறித்தனமாக தேர்தல் வேலை பார்க்கிறார். 

 

பணபலம் இல்லாத ம.தி.மு.க. வேட்பாளர் ரகுராமனோ, அ.தி.மு.க. ரவிச்சந்திரனோ, தேர்தல் பணியில் அப்படி ஒன்றும் தீவிரம் காட்டவில்லை. ம.தி.மு.க. தரப்பு ஓட்டுக்கு பணம் கொடுக்குமா? கொடுக்காதா? என்று பட்டிமன்றம் வைக்காத குறையாக, இத்தொகுதியில் விவாதிக்கின்றனர். அ.தி.மு.க. ஓட்டுக்கு பணம் கொடுத்தாலும், முறையாகப் போய்ச் சேருமா என்ற சந்தேகம் வேட்பாளர் தரப்புக்கே இருக்கிறது. மற்ற வேட்பாளர்களைக் காட்டிலும், ஓட்டுக்கு அதிகமாக பணம் தந்தே ஆகவேண்டும் என்ற ராஜவர்மனின் முயற்சிக்கு, கடைசி நேரத்தில், அதிகார பலத்தால் முட்டுக்கட்டை போடும் திட்டம் ஆளும் கட்சியினருக்கு இருக்கிறது. 

 

யார் வெற்றி பெறுவார் என்பதைக் காட்டிலும், இரண்டாவது இடம் யாருக்கு என்பதுதான், இத்தொகுதியின் பிரதான கேள்வியாக இருக்கிறது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.