சத்தியமூர்த்தி பவனில் 150 அடி உயர கொடிக்கம்பம்

மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் நிறைவு விழாவையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அலுவலகத்தில் 150 அடி உயர கொடிக்கம்பத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி பூமி பூஜை போட்டு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். முன்னாள் தலைவர்கள் குமரி அனந்தன், கிருஷ்ணசுவாமி, திருநாவுக்கரசர், தங்கபாலு, எஸ்.சி துறை தலைவர் செல்வப்பெருந்தகை, மகிளா காங்கிரஸ் தலைவி ஜான்சிராணி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ராயபுரம் மனோகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

kumari ananthan Sathyamoorthy Bhavan TAMILNADU CONGRESS COMMITTEE
இதையும் படியுங்கள்
Subscribe