Advertisment

மீண்டும் பரோலில் வருகிறாரா சசிகலா? விடுதலையாகிறாரா? எதிர்பார்ப்பில் சசிகலா தரப்பு!

சசிகலாவின் தம்பி திவாகரனின் மகன் ஜெய் ஆனந்துக்குத் திருமணம் நிச்சயம் நடைபெற்றுள்ளது. சசிகலாவின் அக்கா மகனான ஜெயா டி.வி.பாஸ்கரன் மகள் ஜெயஸ்ரீதான் மணமகள். நெருங்கிய சொந்தம்னாலும் இது காதல் திருமணம் என்று கூறுகின்றனர். இவர்களுடைய நிச்சயதார்த்த நிகழ்ச்சி, மன்னார்குடிக் குடும்ப சொந்தங்கள் முன்னிலையில் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்துள்ளது. குடும்ப உறவுகள் புடைசூழ நடந்த இந்த நிகழ்ச்சிக்கு, பாஸ்கரனின் அண்ணனான அ.ம.மு.க. தினகரனுக்கு மட்டும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

Advertisment

sasikala family

சசிகலா எப்படியும் ரிலீஸ் ஆயிடுவார் என்று அவரோட குடும்ப உறவுகள் எதிர்பார்ப்போடு இருக்கிறார்கள். அவர் தலைமையிலேயே 2020 மார்ச் மாதம் கல்யாணத்தை நடத்தலாம் என்று முடிவு செய்து, சசிகலா வருகைக்கும் ரெடியாகி வருகின்றனர். கல்யாண கலகலப்போடு அரசியல் என்ட்ரிக்கும் சசிகலா ஆயத்தமாக இருக்கிறார் என்று நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றனர். இன்னமும் அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்படாதவரான சசிகலா, சிறையிலிருந்து ரிட்டன் ஆனதும் பவர்ஃபுல்லான மூவ்களை எடுப்பார் என்று அரசியல் வட்டாரங்களும் தெரிவித்து வருகின்றனர். இதனால் திருமணத்திற்குள் விடுதலையாவார் என்று சசிகலா தரப்பு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்குகின்றனர்.

Advertisment

function jail marriage release sasikala
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe