Skip to main content

சசிகலாவிற்கு பா.ஜ.க வைத்த செக்... அ.தி.மு.க.விடம் துணை முதல்வர் பதவி கேட்கும் பா.ஜ.க.? வெளிவந்த தகவல்!

Published on 17/06/2020 | Edited on 17/06/2020

 

admk

 

"தகவல் அறியும் சட்டத்தின் மூலம், நரசிம்மமூர்த்தி என்பவர் கர்நாடக சிறைத்துறையிடம் சசிகலா ரிலீஸ் பற்றி கேட்டிருந்தார். அதற்குப் பதில் அளித்திருக்கும் சிறைத்துறை, சசிகலாவின் தண்டனைக் காலத்தைக் கணக்கிடுவதில் பல்வேறு நடை முறைகள் உள்ளது என்றும், அவருக்கு அபராதத் தொகையும் விதிக்கப்பட்டிருப்பதால், அவருடைய விடுதலைத் தேதியில் மாற்றம் இருக்கலாம் என்றும், அதனால் இந்தக் கேள்விக்குத் தங்களிடம் பதில் இல்லை என்றும் விளக்கம் கொடுத்திருக்கிறது. இருந்தாலும் செப்டம்பர் 15ஆம் தேதி போல் சசிகலா ரிலீசாக வாய்ப்பு இருக்கும் என்று மன்னார்குடி தரப்பு நம்பி வருவதாகச் சொல்கின்றனர். இது பற்றி விசாரித்த போது, டெல்லியில் மூவ் பண்ணுவதால் இந்த நம்பிக்கை என்று கூறுகின்றனர். கர்நாடகாவில் நடப்பது பா.ஜ.க ஆட்சி. அதனால் டெல்லி பா.ஜ.க. தலைமை, கர்நாடகத்தில் இருக்கும் கட்சிப் பிரமுகர்கள் மூலம், சசிகலாவிடம் டீலிங் பேசி வருவதாகக் கூறுகின்றனர்.

 

அப்போது, பொதுத் தேர்தலில் ஒருங்கிணைந்த அ.தி.மு.க.தான் தேர்தலைச் சந்திக்க வேண்டும் என்றும், பா.ஜ.க.வுக்கு 30 சதவீத தொகுதிகள் ஒதுக்கப்படுவதோடு, துணை முதல்வர் பதவியும் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் கூறியதாகச் சொல்கின்றனர். அதேபோல், அ.தி.மு.க.வுக்கு 70 சதவீத தொகுதிகள் என்றும், முதல்வர் வேட்பாளர் யார் என்பதைப் பின்னர் முடிவு செய்துகொள்ளலாம் என்றும் டீலிங் பேசப்பட்டிருக்கிறது என்று தெரிவிக்கின்றனர். மேலும் தான் சிக்கலில்லாமல் வெளியே வர, பா.ஜ.க. போடும் நிபந்தனைக்கு பாசிட்டிவ் பதில் கூறியதாகவும் சொல்கின்றனர். மேலும் சசிகலா விஷயத்தில் டெல்லி ரொம்ப உன்னிப்பாக இருப்பதாகச் சொல்கின்றனர். அதோடு மன்னார்குடி தரப்பு மூவ் பண்ணுவதை டெல்லியில் இன்னொரு தரப்பு பிரேக் போடுவதாகவும், அதனால் பா.ஜ.க. மேலிடமும் கன்வின்ஸ் ஆகாததால், சசி விடுதலை இப்போது இல்லை என்று கூறுகிறார்கள். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.