ADVERTISEMENT

பிரதமர் ஆசையில்  சரத்குமார் என உளறிய அதிமுக அமைச்சர்! 

01:18 PM Apr 17, 2019 | Anonymous (not verified)

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக அதிமுக கூட்டணியில் பாமக வேட்பாளர் ஜோதிமுத்து போட்டியிடுகிறார் . இவரை ஆதரித்து பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஏற்கனவே பிரச்சாரம் செய்தார் .அப்போது அந்த பிரச்சார மேடையில் மாம்பழம் சின்னத்துக்கு பதிலாக ஆப்பிள் சின்னத்துக்கு ஓட்டு போடுங்க என்று அதிமுக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியது பெரும் பரபரப்பாக இருந்தது .

ADVERTISEMENT



இந்த நிலையில் நேற்று இறுதி கட்ட பிரச்சாரத்தின் போது பேசிய அவர், பா.ம.க. வேட்பாளர் ஜோதி முத்துவுக்கு பதிலாக சோலைமுத்து என்றார். இதை கேட்டதும் வேட்பாளர் அதிர்ச்சியடைந்தார் பின்பு சுதாரித்துக்கொண்டு ஜோதிமுத்து என்றார் , தொடர்ந்து பேசிய சீனிவாசன் இந்தியாவில் பிரதமர் பதவிக்கு ஆசைப்படுபவர்கள் யாரெல்லாம் என்று பார்த்தால் மம்தா பானர்ஜி, சரத்பவார் என்பதற்கு பதிலாக சரத்குமார் என்றார் இதனால் கூட்டத்தில் பெரும் சலசலப்பு உண்டானது . சமீப காலமாக இந்த மாதிரி மாற்றி பேசி பெரும் சர்ச்சைக்குள் அடிக்கடி சீனிவாசன் மாட்டிக்கொள்கிறார் என்று ஒரு பேச்சு அடிபடுகிறது .

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT