Skip to main content

மீண்டும் சேலம் மத்திய மா.செ. ஆனார் ராஜேந்திரன்... மேற்கு, கிழக்கிலும் மாற்றமில்லை... பாரப்பட்டி சுரேஷ்குமாருக்கு புரமோஷன்

Published on 29/09/2022 | Edited on 29/09/2022

 

Salem DMK District secretaries

 

கடந்த சில மாதங்களாக திமுக 15வது அமைப்புத் தேர்தல் நடந்து வருகிறது. ஏற்கனவே, ஒன்றியம், பேரூர், நகரம் உள்ளிட்ட கிளைக்கழக நிர்வாகிகள் தேர்தல் படிப்படியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்ட அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிடுவோரிடம் இருந்து வேட்புமனுக்கள் செப். 22 முதல் 25ம் தேதி வரை தலைமை அலுவலகத்தில் பெறப்பட்டது. செப். 26, 27ம் தேதிகளில் வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடந்தது. அதையடுத்து கட்சித் தலைமை அலுவலகம், புதிய நிர்வாகிகள் பட்டியலை புதன்கிழமை (செப். 28) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

 

சேலம் மத்திய மாவட்டம்: 


சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளராக சேலம் வடக்கு எம்.எல்.ஏ. வழக்கறிஞர் ராஜேந்திரன் மீண்டும் அதே பதவியில் நியமிக்கப்பட்டு உள்ளார். கல்லூரி மாணவராக கழகத்திற்குள் அடியெடுத்து வைத்த ராஜேந்திரன், பெரிய அளவில் சலசலப்புகளின்றி கட்சியை வழிநடத்திச் செல்லக்கூடியவர் என்று பெயரெடுத்துள்ளார். மத்திய மாவட்ட அவைத்தலைவராக ஜி.கே.சுபாசு, துணைச் செயலாளர்களாக  ஜி.குமரவேல், திருநாவுக்கரசு, எஸ்.மஞ்சுளா, பொருளாளராக மு.கார்த்திகேயன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

 

சி.ராஜேந்திரன், கே.டி.மணி, கு.சீ.வெ.தாமரைக்கண்ணன், ஜெ.ஜெயக்குமார் ஆகியோர் தலைமைச் செயற்குழு உறுப்பினர்களாகவும், நாசர்கான் என்கிற அமான், அ.பூபதி, அ.ராஜேந்திரன், பெ.அசோகன், கன்னங்குறிச்சி குபேந்திரன், ப.குப்புசாமி, எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி.,யின் தம்பி எஸ்.ஆர்.அண்ணாமலை, கே.சத்யா ஆகியோர் பொதுக்குழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

 

சேலம் மேற்கு மாவட்டம்: 


சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்து வந்த டி.எம்.செல்வகணபதி, மீண்டும் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். தேர்தல் களப்பணிகளைச் சிறப்பாக செய்யக்கூடியவர் என்பதோடு, கோஷ்டி அரசியல் செய்யாதவர் என்பதாலும் கட்சித் தலைமையின் 'குட்புக்'கில் இடம் பிடித்துள்ளார். அதனால் மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. 

 

Salem DMK District secretaries

 

மேற்கு மாவட்ட திமுக அவைத்தலைவராக பி.தங்கமுத்து, துணைச் செயலாளர்களாக அ.த.சம்பத்குமார், க.சுந்தரம், எஸ்.எலிசபத் ராணி, பொருளாளராக பி.பொன்னுசாமி ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர். தலைமைச் செயற்குழு உறுப்பினர்களாக பி.ஏ.முருகேசன், மு.ராமநாதன், எஸ்.பூவா ஆகியோரும், பொதுக்குழு உறுப்பினர்களாக க.அன்பழகன், ஆர்.காசிவிஸ்வநாதன், எஸ்.பி.ரவிக்குமரன், மு.சவுந்திரராஜன், என்.பழனியப்பன், எஸ்.தங்கமணி ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

 

Salem DMK District secretaries

 

சேலம் கிழக்கு மாவட்டம்: 


சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு இந்தமுறை கடும் போட்டி நிலவியது. பலத்த போட்டிக்கு இடையிலும் கிழக்கு மாவட்ட செயலாளராக மீண்டும் எஸ்.ஆர்.சிவலிங்கம் நியமிக்கப்பட்டு உள்ளார். 

 

Salem DMK District secretaries

 

மா.செ. பதவிக்கு குறி வைத்து காய் நகர்த்திய பாரப்பட்டி க.சுரேஷ்குமார், முதன்முதலாக மாவட்ட துணைச் செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். கு.சின்னதுரை, எஸ்.கோமதி ஆகியோரும் துணை செயலாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆர்.வி.ஸ்ரீராம், பொருளாளராக நியமிக்கப்பட்டு உள்ளனர். தலைமைச் செயற்குழு உறுப்பினர்களாக தும்பல் எ.கணேஷ், சங்கர் என்கிற சாமிநாதன், எம்.மனோகரன், ஜெ.ரேகாபிரியதர்ஷினி ஆகியோரும், பொதுக்குழு உறுப்பினர்களாக ஷேக் மொய்தீன், சோமசுந்தரம், ராஜா, முத்துலிங்கம், சந்திரமோகன், தமிழ்செல்வன், கோபால், டாக்டர் மலர்விழி ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Two people who went to vote fainted and passed way

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் காலை 9 மணி நிலவரப்படி 24.34 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்களிக்க சென்ற இருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகே செந்தாரப்பட்டி ஊராட்சி தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிக்கச் சென்ற சின்னபொண்ணு (77) என்ற மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தார். அதேபோன்று, சேலம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சூரமங்கலம் பகுதியை சேர்ந்த பழனிசாமி(65) தனது மனைவியுடன் வாக்களிக்கச் சென்றபோது மயங்கி விழுந்து பலியானார். சேலம் மாநகரில் நடந்த இந்த துயர் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.