மோடி அரசின் புதிய வேளாண்மை சட்டங்களை எதிர்த்து தலைநகர் டெல்லியில் போராடும் விவசாயிகளை ஆதரித்தும்,மத்திய பா.ஜ.க அரசு மற்றும் மாநில அ.தி.மு.க அரசை கண்டித்து,திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம், அரியலூர் மாவட்ட கழகம் சார்பில், மாவட்ட கழக செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்களின் தலைமையில் டிசம்பர் 5 சனிக்கிழமை காலை அரியலூரில், நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக முன்னனி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிக அளவில் கலந்து கொண்டனர்.