Advertisment

தேன் கலந்த குரல்... பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் மறைவுக்கு ராமதாஸ் இரங்கல்

sp balasubrahmanyam

Advertisment

பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் மறைவுக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ''இந்தியாவின் புகழ்பெற்ற பாடகர் மற்றும் இசையமைப்பாளர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன் உடல்நலக் குறைவால் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்.

இளம் வயதிலேயே இசைத்துறையில் அடியெடுத்து வைத்த பாலசுப்பிரமணியன், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் 40 ஆயிரத்துக்கும் கூடுதலான பாடல்களை பாடியவர். இசையமைப்பாளர், நடிகர், பின்னணி குரல் கலைஞர் என பல அவதாரங்களை எடுத்தவர். தமது தேன் கலந்த குரலால் திரைப்பட பாடல்களுக்கு கூடுதல் இனிமையும், சுவையும் சேர்த்தவர். இசை உலகில் அவர் படைத்த சாதனைகளை அடுத்த சில நூற்றாண்டுகளுக்கு எவராலும் முறியடிக்க முடியாது.

Advertisment

திரையுலகில் 54 ஆண்டுகளாக தனக்கென்று தனி இடத்தை வைத்திருந்த பாலசுப்பிரமணியன் எண்ணிடலங்காத விருதுகளை வென்றவர். சாதனைகளின் உச்சங்களைத் தொட்டவர் என்றாலும் கூட, எளிமையை தனது அடையாளமாக்கி கொண்டவர். கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர், கரோனாவிலிருந்து மீண்டு விட்டார் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், உடல்நலம் தேறி வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், அவர் வரவில்லை; அவரது மறைவுசெய்தி மட்டும்தான் வந்திருக்கிறது. உண்மையாகவே எஸ்.பி. பால சுப்பிரமணியத்தின் மறைவு அனைத்து மொழி திரையுலகத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு தான். அவர் மறைந்தாலும் அவரது பாடல்கள் ஒலிக்கும் வரை அவர் மக்களிடம் வாழ்ந்து கொண்டிருப்பார்.

பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் உலகம் முழுவதுமுள்ள ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்''இவ்வாறு கூறியுள்ளார்.

pmk Ramadoss spb
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe