Skip to main content

ரூ.100 கோடி அன்பளிப்பு; அண்ணாமலைக்கு எதிராக திரும்பும் ஆர்எஸ்எஸ்

Published on 28/02/2023 | Edited on 28/02/2023

 

RSS turns against Annamalai

 

நிதி நிறுவன குற்றச்சாட்டில் தேடப்பட்டு வரும் முக்கியக் குற்றவாளிக்கு பாஜகவில் பொறுப்பு கொடுத்ததுடன் டெல்லியில் தங்க வைத்து பாதுகாப்பு கொடுக்க நூறு கோடி ரூபாய் வரை, பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை அன்பளிப்பு வாங்கியுள்ளதாக வெளியான தகவல்தான் தமிழக அரசியலில் புயலை கிளப்பியுள்ளது.

 

சென்னையை தலைமை இடமாகக் கொண்டு ஆருத்ரா கோல்ட் ட்ரேடிங் எனும் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இது கவர்ச்சிகரமான பல விளம்பரங்கள் மூலம் மக்களை ஏமாற்றியதாக புகார் எழுந்தது. ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 30 சதவீதம் வரை வட்டியாக தருகிறோம் எனக் கூறியுள்ளனர். மேலும் மல்டி லெவல் மார்க்கெட்டிங், பிட்காயின் மற்றும் தீபாவளி பண்டிகையின் போது லாபகரமான திட்டங்களை அறிமுகப்படுத்தி பொதுமக்களை கவர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதை நம்பி சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருக்கும் இந்த நிறுவனத்தின் கிளைகளில் சுமார் 2,500 கோடி ரூபாய் வரை மக்கள் முதலீடு செய்துள்ளனர்.

 

ஆனால் சதுரங்க வேட்டை பாணியில் கல்தா கொடுக்க முடிவு செய்த நிர்வாகிகள், மக்களுக்கு உரிய வட்டி தராமல் ஏமாற்றியுள்ளனர். இதன் அடிப்படையில் அந்நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு சென்னை பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான ரபீக், பாஸ்கர், மோகன்பாபு, ஐயப்பன் உள்ளிட்ட 5 பேரை ஏற்கனவே கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த பணத்தை பறிமுதல் செய்து அவர்களின் வங்கிக் கணக்கை ஃப்ரீஸ் செய்தனர்.

 

மீதமுள்ள குற்றவாளிகளான சென்னை நாராயணி, விருதுநகர் முத்துராமலிங்கம், காஞ்சிபுரத்தை சேர்ந்த ஹரிஷ் உள்ளிட்டோரை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இதில் ஹரிஷ் என்பவரிடம் எந்த வருமானமும் இல்லாமல் ரூ.150 கோடி வரை சொத்து உள்ளதாக பொருளாதார குற்றப்பிரிவு வழக்கு போட்டது. இதனால் கடந்த மே 24 ஆம் தேதி முதல் ஹரிஷ் தலைமறைவாக இருந்து வந்தார். இவரை போலீசார் தீவிரமாகத் தேடி வந்தனர். போலீசார் ஒருபுறம் தீவிரமாகத் தேடி வந்த நிலையில், ஜூன் 2 ஆம் தேதி பாஜக விளையாட்டு மற்றும் மேம்பாட்டு பிரிவின் மாநிலத் தலைவர் எஸ். அமர் பிரசாத் ரெட்டி பத்து பேருக்கு புதிய பொறுப்புகள் வழங்கியிருந்தார். அதில் 8 ஆவது இடத்தில் ஹரிஷ் இடம்பெற்றிருந்தார். அவருக்கு விளையாட்டு மற்றும் மேம்பாட்டு பிரிவின் மாநிலச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.

 

இதைக் கண்டு எதிர்க்கட்சிகள் கொதித்து எழுந்தன. மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் முக்கிய நபருக்கு கட்சி பொறுப்பா... இதனால்தான் பாஜக மோசடிப் பேர்வழிகளின் கட்சி என விமர்சிப்பதாக எதிர்க்கட்சிகள் காட்டமான விமர்சனங்களை முன்வைத்தன. இதுகுறித்து, விளக்கமளித்த அமர்பிரசாத் ரெட்டி, “இந்த சம்பவம் அரசியல் பழிவாங்கல்” எனத் தெரிவித்தார். மேலும், அவர் கூறுகையில் “ஹரீஷை தொடர்புகொள்ள முடியவில்லையென்றும் அவர் இதுவரை கட்சி பதவியை ஏற்கவில்லையெனவும்” தெரிவித்தார். ஆனால், ஹரிஷ் அண்ணாமலையுடன் மாஸ்க் அணிந்தபடி நிற்கும் புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி தமிழக அரசியலில் அதிர்வுகளை ஏற்படுத்தியது.

 

பின்னர் இந்த விஷயம் ஆறிப்போன நிலையில், இப்போது மீண்டும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியுள்ளது. அண்ணாமலை மீது ஆர்எஸ்எஸ் அமைப்பும் பாஜகவினரும் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால், அண்ணாமலையை பாஜகவும் கிரிமினல்களின் ஃபாதர் என்றும் பக்கா ஃபோர் ட்வென்ட்டி என்றும் விமர்சிக்கத் தொடங்கியுள்ளனர். ஹரிஷ் என்பவருக்கு பாஜகவில் பொறுப்பு கொடுத்ததுடன் அவரை டெல்லியில் தன் பாதுகாப்பில் தங்கவும் வைத்துள்ளார் என்பதுதானாம்.  இதற்கு அண்ணாமலை 100 கோடி ரூபாய் வரை அன்பளிப்பு பெற்றுள்ளதுதான் பாஜகவினர் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாம். இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது அந்த ஹரீஷ் வாயைத் திறந்தால் நமது கட்சிக்கே ஆபத்து எனவும் சொல்லி அண்ணாமலை சமாளிக்க முயல்கிறாராம்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

4 கோடி ரூபாய் பறிமுதல் சம்பவம்; தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 4 Crore Seizure Incident; Tamilnadu DGP action order

இந்தியாவின் 18 ஆவது மக்களவை தேர்தல் களைகட்டி வருகிறது. முதல்கட்டமாக தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற போது சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து திருநெல்வேலிக்குச் செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்குப் பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய மூவரும் கொடுத்து அனுப்பியதாகத் தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் 23.04.2024 அன்று தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர். இந்நிலையில் நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.