/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mariyappan kennedy mla.jpg)
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்களில் ஒருவர் மானாமதுரை தொகுதியைச் சேர்ந்த மாரியப்பன் கென்னடி.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தீர்ப்பை குறை சொல்ல விரும்பவில்லை. மேல்முறையீடு செய்து வெற்றி பெறுவோம்.
மதுரை மண்ணை தன்னுடைய சுயநலத்திற்காக தொண்டர்களை குழப்புகிற விதமாக ஆர்.பி.உதயகுமார் பேசி வருகிறார். அவருக்கு ஆதரவாக செயல்பட்ட 150 வழக்கறிஞர்களில் 10 பேர் கூட தற்போது அவர் பின்னால் இல்லை.
அவர் எப்படி பதவி பெற்றார் என்பது இங்குள்ள எல்லோருக்கும் தெரியும். அவர் பெரிய ஜமீன்தாரெல்லாம் கிடையாது. அவர் எப்படி உருவாகி வந்தார் என்பெதெல்லாம் எங்களுக்கு தெரியும்.
சட்டமன்ற உறுப்பினராக போட்டியிடுவதற்கே குடும்பத்துடன் கிட்டத்தட்ட 100 பேரிடம் கும்பிட்டு விழுந்து போட்டியிட வாய்ப்பு பெற்றவர்தான் ஆர்.பி.உதயகுமார். நாங்கள் எங்களுக்கு பிடித்தவரை தலைவராக தேர்ந்தெடுத்திருக்கிறோம். ஆர்.பி.உதயகுமாரைப்போல பதவிக்காக காட்டிக்கொடுப்பவர்கள் நாங்கள் கிடையாது என்றார்.
Follow Us