Advertisment

சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும்... இன்று கீழே இருக்கும், நாளை மேலே வரும்... சட்டசபையில் ஈ.பி.எஸ்.

சட்டசபையில் வெள்ளிக்கிழமை காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. தி.மு.க. உறுப்பினர் க.பொன்முடி பேசியபோது நடைபெற்ற விவாதம் வருமாறு:-

Advertisment

பொன்முடி:- முடிவு எடுப்பதில் தமிழக மக்கள் சிறந்தவர்கள் என்று கடந்த ஆண்டு பதிலுரையில் முதல்- அமைச்சர் தெரிவித்தார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணிக்கு 37 இடங்களில் வெற்றியையும், இடைத்தேர்தலில் 22-ல் 13 இடங்களில் வெற்றியையும் மக்கள் அளித்திருக்கிறார்கள்.

EPS

எடப்பாடி பழனிசாமி:- நீங்கள் எப்படி வெற்றி பெற்றீர்கள்? நிறைவேற்ற முடியாத அறிவிப்புகளை எல்லாம் வாக்குறுதிகளாக அளித்து வெற்றி பெற்றீர்கள்.

Advertisment

மு.க.ஸ்டாலின்:- என்னென்ன வாக்குறுதிகளை அளித்தோமோ ஆட்சிக்கு வந்ததும் அதை நிச்சயம் நிறைவேற்றுவோம். சொன்னதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்வோம்.

எடப்பாடி பழனிசாமி:- நாங்கள் தேர்தல் பிரசாரத்தின்போது உண்மை சொல்லி ஓட்டுகேட்டோம். பொதுமக்கள் 9 இடங்களில் வெற்றியை தந்திருக்கிறார்கள். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் தனித்து போட்டியிட்டு 37 இடங்களில் வெற்றி பெற்றோம். எனவே, சக்கரம் என்பது சுழன்று கொண்டே இருக்கும். இன்று கீழே இருக்கும், நாளை மேலே வரும். மீண்டும் 2021-ம் ஆண்டு நிச்சயம் அ.தி.மு.க. ஆட்சி அமைக்கும்.

மு.க.ஸ்டாலின்:- 22 இடங்களில் 13 இடங்களில் தி.மு.க. வெற்றி பெற்றிருக்கிறது. இதில் 12 தொகுதிகள் உங்களிடத்தில் இருந்ததை நாங்கள் கைப்பற்றியிருக்கிறோம். எங்களுடைய வளர்ச்சியைத்தான் இது காட்டுகிறது.

எடப்பாடி பழனிசாமி:- நாடாளுமன்ற தேர்தலும், சட்டமன்ற இடைத்தேர்தலும் தனித்தனியாக நடந்திருந்தால் எங்கள் பலத்தை நிரூபித்து காட்டியிருப்போம். இவ்வாறு விவாதம் நடந்தது.

Speech assembly eps
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe