ADVERTISEMENT

திருமுருகன் காந்தி மீது சரியான நடவடிக்கை: தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி

10:58 AM Aug 15, 2018 | rajavel

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் செய்தியாளர்களை சந்தித்தார் பா.ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன்.

ADVERTISEMENT

அப்போது அவர்,

மீனவர்கள் நிறைந்த ராமநாதபுரம் மாவட்டத்தில் மீனவர்களின் நலனை பாதுகாக்க பா. ஜனதா அரசு பாடுபட்டு வருகிறது. சமீபத்தில் இலங்கையில் வாடிய தமிழக மீனவர்கள் மீட்கப்பட்டனர். மீனவர்களுக்கான் நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.


காரைக்குடி மற்றும் கன்னியாகுமரிக்கு கீழக்கரை, சாயல்குடி உள்ளிட்ட ஊர்களின் வழியாக புதிய ரெயில் பாதை திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி உள்ளோம். அந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும். அதே போன்று கீழக்கரை உள்ளிட்ட ஊர்களில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டதை செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்வோம்.

திருமுருகன் காந்தி மீது சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டு கைது செய்யப்பட்டு இருக்கிறார். அவர் தமிழகத்தில் குழப்பத்தை விளைவித்து கொண்டிருக்கிறார் என்பதை அவரை ஆதரிப்பவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT