Skip to main content

‘ராஜேந்திரபாலாஜியை பழிவாங்குவதா?’ - கட்சியிலிருந்து விலகிய திமுக உறுப்பினர் கேள்வி! 

Published on 12/01/2022 | Edited on 12/01/2022

 

‘Revenge of Rajendrapalaji?’ - DMK member quits party!

 

விருதுநகர் மாவட்டத்தில் அரசு அதிகாரிகள் லஞ்சம் வாங்குவது குறித்து அதிரடியாக கருத்து கூறிவருவதால், பத்திரிக்கைகளில் அடிக்கடி ‘விநாயகமூர்த்தி’ பெயர் அடிபடும். சிறு பட்டாசு உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் என்ற இவரது  அடையாளத்தை, இம்மாவட்ட அரசு அலுவலகங்கள் மிரட்டலாகவே பார்க்கிறது.  அதனால், சிறு பட்டாசு உற்பத்தியாளர்கள், அரசு அலுவலர்களால் தங்களுக்கு ஒரு பிரச்சனை என்றால், விநாயகமூர்த்தியை தேடிச் செல்வது வாடிக்கையாகிவிட்டது.

 

எதிர்க்கட்சிகளில் உள்ள நிர்வாகிகள் பலரும், ஆளும்கட்சி என்பதால் திமுகவுக்கு தாவிவருகிறார்கள். விநாயகமூர்த்தியோ, தனது திமுக உறுப்பினர் கார்டை, திமுக தலைமை அலுவலகத்துக்கு அனுப்பிவைத்து, கட்சியிலிருந்து விலகிக்கொள்கிறேன் எனக் கடிதம் எழுதியிருக்கிறார். இதற்கான காரணம் என இவர் குறிப்பிட்டுள்ளது – முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கைதான விவகாரத்தில், திமுக அரசு நேர்மையாகச் செயல்படவில்லை என்பதுதான்.

 

திமுக தலைவர்களை, அமைச்சராக இருந்தபோது ராஜேந்திரபாலாஜி கண்டபடி பேசி வெறுப்பேற்றியதை, திமுகவினர் இன்னும் மறக்கவில்லை. பணமோசடி வழக்கில் அவரைக் கைது பண்ணி சிறையில் தள்ளியதை வெகுவாகவே ரசிக்கின்றனர். திமுக உறுப்பினர் விநாயகமூர்த்தியோ வேறு முகம் காட்டுகிறார். ‘இது ஸ்டண்ட் மாதிரி தெரிகிறதே?’ என்று அவரிடமே கேட்டோம்.

 

“நான் 15 ஆண்டுகால திமுக உறுப்பினர்.  அண்ணா, கலைஞர், தளபதி போன்ற திமுக தலைவர்களை நான் பெரிதும் மதிக்கிறேன். ஆனாலும், மனசாட்சி உறுத்துதே? தேர்தல் நேரத்துல தளபதியை ராஜேந்திரபாலாஜி பேசினப்ப, ரத்தமெல்லாம் கொதிச்சது. அப்பத்தான் அதிமுக கட்சிக்காரங்க சொன்னாங்க.. அது அவரோட வீக்னஸ்ன்னு. சொந்தக் கட்சிக்காரனையே கண்டபடி திட்டுவாருன்னு வேற சொன்னாங்க.  ஆனாலும்,  மனசுல பட்டத பேசுற டைப்புன்னாங்க. ஒரு அமைச்சரா இருக்கிறவரு, நா காக்க-ன்னு வள்ளுவர் சொன்னத கடைப்பிடிக்கலைன்னா எப்படின்னு, அப்ப அவரு மேல கோபம் கோபமா வந்துச்சு. அப்புறம் எதுக்கு  நான் திமுகவுல இருந்து விலகினேங்கிற விஷயத்துக்கு வர்றேன்.

 

இந்தமாதிரி ஒருத்தர்,  சாதி பலம் இல்லைன்னாலும்,  ரெண்டு தடவை எம்.எல்.ஏ. ஆகி 10 வருஷம் அமைச்சரா இருந்திருக்காரு. ஏன்னா.. பட்டாசுத் தொழிலாளர் நலன்ல அவரு அக்கறையா செயல்பட்டதுதான். பட்டாசுத் தொழிலுக்கு ரொம்பவும் சப்போர்ட்டா இருந்ததுதான். இங்கே சிவகாசில இருக்கிற முதலாளிக, எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், தொகுதி எம்.எல்.ஏ. கேட்டாலும், கேட்கலைன்னாலும், கட்சி நிதியோ, வேற நிதியோ தாராளமா கொடுப்பாங்க. ஆனா, அமைச்சர்ங்கிற அதிகாரத்துல இருந்தும், ராஜேந்திரபாலாஜி யார்ட்டயும் நிதி கேட்டதும் இல்ல. எந்த முதலாளியும் கொடுத்ததும் இல்ல. அதனால, தொந்தரவு தராதவரா அவரைப் பார்த்தாங்க.

 

எல்லா மனுஷனுக்கு உள்ளயும் நல்லது இருக்கும்; கெட்டதும் இருக்கும். வாய் ரொம்பப் பேசியதுதான் ராஜேந்திரபாலாஜிகிட்ட இருக்கிற கெட்ட விஷயம். சரி பேசக்கூடாதத பேசிட்டாரு. அதுக்கு அப்பவே வழக்கு போட்டிருக்கலாம். அதான், சொத்துகுவிப்பு வழக்கு இருக்குல்ல. அதை வேகப்படுத்தி கோர்ட் மூலம் தண்டனை வாங்கித் தரலாம். இத எல்லாம் விட்டுட்டு, பொய் வழக்கு போட்டு ஓடவிட்டதும், பெயில் கிடைக்கிறதுக்குள்ள தீவிரமா தேடி அரெஸ்ட் பண்ணி, திருச்சி ஜெயில்ல அடைச்சதும், ஏத்துக்கிற மாதிரியில்ல. முகாந்திரமே இல்லாம,  நடுராத்திரில கலைஞரை ஜெயலலிதா கவர்மெண்ட் அரெஸ்ட் பண்ணுனப்ப, கொடுமைக்காரின்னு நாம திட்டுனோம்ல. இப்ப, எடப்பாடி திமுகவ திட்டுறாரு. அது அரசியல். ஆனா.. இந்த தொகுதி மக்கள், குறிப்பா நான் பழகிட்டு இருக்கிற அதிமுககாரங்க, ராஜேந்திரபாலாஜி விஷயத்த சொல்லி,  என்னய்யா ஆட்சி இதுன்னு கேட்கிறப்ப, என்னால பதில் சொல்ல முடியல.

 

அப்புறம், இந்த விஜயநல்லதம்பி எப்படிப்பட்ட ஆளுன்னு விருதுநகர் மாவட்டத்துக்கு நல்லாவே தெரியும். அவரு கொடுத்த புகாருல ராஜேந்திரபாலாஜிய அரெஸ்ட் பண்ணுனது கொஞ்சம்கூட சரியில்ல. பத்து வருஷம் அமைச்சரா இருந்தப்ப, ராஜேந்திரபாலாஜி ஊழல் பண்ணிருப்பாரு. அதுல அரெஸ்ட் பண்ணுனா யாரு கேட்கப்போறா? ஒருவேளை ராஜேந்திரபாலாஜி பணம் வாங்கிட்டு ஆவின் வேலைக்கு ரெடி பண்ணமுடியாம போயிருந்தா, நிச்சயம் திருப்பி தந்திருப்பாரு.

 

ராஜேந்திரபாலாஜிய கூட ரெண்டு நாளு ஜெயில்ல வைக்கணும்னு,  ஒரு சிட்டிங்குக்கு பல லட்சம் வாங்குற மூத்த வக்கீல் முகுல் ரோத்தகிய, தமிழக அரசு சார்பா வாதாட வச்சாங்க. இதை எப்படி சரின்னு சொல்லமுடியும்? அரசுப் பணத்தை சொந்தப் பகைக்காக வீணடிக்கலாமா?  இப்ப பாருங்க, சுப்ரீம் கோர்ட்டே சொல்லிருச்சு.. கைதுபண்ணுன விதம் சரியில்லைன்னு. ராஜேந்திரபாலாஜிக்கு நிபந்தனை ஜாமீனும் கொடுத்திருச்சு” என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.