Skip to main content

'உள்ளாட்சி தேர்தலில் கட்சியினர் விட்டுக்கொடுத்து போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும்' – எ.வ.வேலு பேச்சு

Published on 14/11/2019 | Edited on 14/11/2019

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம், திருவண்ணாமலை மாவட்ட திமுக அலுவலகத்தில் நவம்பர் 13ந்தேதி நடைபெற்றது. மாநில செயற்குழுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளருமான எ.வ.வேலு எம்.எல்.ஏ. பேசும்போது
 

resolutions taken by dmk


முதலில் கட்சியின் தீர்மானங்களை விளக்கியவர், திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் முழுவதும், பொதுக்கூட்டங்கள், துண்டு பிரசுரங்கள் வழங்குதல் மற்றும் திண்னை பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். அதேபோல், கட்சி நிர்வாகிகள், ஊராட்சி மன்ற தேர்தல், கவுன்சிலர் தேர்தல்களில் பொதுமக்களிடம் செல்வாக்கு உள்ளவர்களுக்கு விட்டுக்கொடுத்து, அவர்களின் வெற்றிக்கு பாடுப்பட வேண்டும். உள்ளாட்சி தேர்தலில் போட்டி போட்டுக்கொண்டு போட்டியிட்டால் தேர்தலில் வெற்றி பெறுவது கடினமாகிவிடும். இந்த வெற்றி என்பது வரப்போகிற சட்டமன்ற தேர்தலுக்கு முன்னோட்டம் என்றார்.

மாவட்ட திமுக செயற்குழு கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஒருமனதாய் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் : 1

திராவிட முன்னேற்றக் கழகத்தின் இதயமாக திகழும் பொதுக்குழு கூட்டம் கடந்த 10.11.2019 அன்று கழகத் தலைவர் ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்றபோது தமிழகத்தின் வரலாற்றில் இருண்ட காலம் என்று சொல்லும் அளவுக்கு பகல்கொள்ளை, ஊழல், எதற்கும் லஞ்சம், எங்கும் கமிஷன் என்று அபமானகரமான ஆட்சி என்பதாலும் அதற்கு அனைத்து வகையிலும் பாதுகாப்பு அளித்து வரும் மத்திய பா.ஜ.க அரசுக்கு கண்டனம் தெரிவிப்பது என்ற தீர்மானம் உள்ளிட்ட 21 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

இத்தீர்மானங்களை நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்கும் வண்ணம் மாவட்டத்தில், மாவட்ட தலைநகரில் வரும் 16.11.2019 அன்று மாவட்ட கழகத்தின் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது எனவும் மேலும், துண்டு பிரச்சுரங்கள் தயார் செய்து மாவட்டம் முழுவதும் வழங்குவது என்றும், பொதுக்குழு தீர்மானங்களை விளக்கி எளிய முறையில் திண்ணைகள் தோறும் பிரச்சாரம் மேற்கொள்வது என்றும் இம்மாவட்ட கழகம் ஏகமனதாக தீர்மானிக்கிறது.

தீர்மானம் : 2

தமிழ்நாட்டில் வெகு விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் அறிவித்து அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது. கழகத்தலைவர் ஸ்டாலின் அவர்கள், திராவிட முன்னேற்றக் கழகம் உள்ளாட்சி தேர்தலை எதிர் கொள்ளும் என்றும் போட்டியிட விரும்புவோர் வரும் நவம்பர் 14 முதல் 20ம் தேதி வரை மாவட்ட கழகத்தில் அல்லது தலைமைக் கழகத்தில் அதற்கான விண்ணப்ப கட்டணத்துடன் மனுக்களை பெற்று பூர்த்தி செய்து ஒப்படைக்கலாம் என்று அறிவித்துள்ளார்.

எனவே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் கழக தோழர்கள் ஒவ்வொரு பொறுப்புக்கும் உரிய ஊர்களில் கலந்து பேசி ஒருவருக் கொருவர் விட்டுக்கொடுத்து. வெற்றியினை மட்டுமே இலக்காக கொண்டு கழகத் தோழர்கள் செயல்பட்டு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் பெரு வெற்றியினை ஈட்டித் தருமாறு மாவட்ட கழகம் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் : 3

கழகப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட சட்ட திட்ட திருத்தங்களின் அடிப்படையில் ஓரே ஊராட்சியாக உள்ள அமைப்பில் உட்பிரிவுகளாக உள்ள அரசு ஆவணங்கள் அல்லது வாக்காளர் பட்டியலின்படி தனிப்பெயரோடும் எல்லையோடும் விளங்கும் ஊர்களில் அமையப்படுவதும் ஊர்க்கிளையாகவும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் குடியிருப்புகளில் தனியாக கிளைகள் அமைக்கப்படும் என்றும் ஆதிதிராவிடர் மட்டுமே அக்கிளைகளில் நிர்வாகிகளாக இருத்தல் வேண்டும்  என்றும் விதிகளில் திருத்தப்பட்டுள்ளது.

மேற்கண்ட பொதுக்குழுவின் முடிவு கழக வளர்ச்சிக்கு வலுவூட்டுவதாக அமையும் என்பதால் இச்சட்ட திருத்தத்தை கொண்டுவந்த கழகத்தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கும் திருத்தத்தை நிறைவேற்றி தந்த கழக பொதுக்குழுவிற்கும் மாவட்ட கழகம் பாராட்டுதலையும் நன்றியினையும் தெரிவித்துக் கொள்கிறது.


தீர்மானம் : 4

திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒப்பாரும் மிக்காருமில்லா தலைவர் தமிழினத்தலைவர் கலைஞர் அவர்களுக்கு தலைவர் கலைஞர் பிறந்த மண்ணான திருவாரூர் அருகே உள்ளே காட்டூரில் ‘தயாளு அம்மாள் அறக்கட்டளை’ சார்பில் தமிழினத்தலைவர் கலைஞர் அருங்காட்சியகம் அமைத்திட  பெருமுயற்சி எடுத்து சீரிய பணியாற்றி கொண்டிருக்கிற கழகத்தலைவர் ஸ்டாலின் அவர்களுக்கு, இம்மாவட்ட கழகம் பாராட்டுகளையும், நன்றினையும் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.