Advertisment

நேத்தே பிரச்சாரத்தை தொடங்கியாச்சா... நானும் வரேன்... நாராயணனுக்கு நம்பிக்கை கொடுத்த ஓ.பி.எஸ்.

Reddiarpatti V Narayanan

இடைத்தேர்தல் நடைபெற உள்ள நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளராக ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் அறிவிக்கப்பட்டார். இந்த அறிவிப்பையடுத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை ரெட்டியார்பட்டி வெ.நாராயணன் தனது ஆதரவாளர்களுடன் சென்று சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Advertisment

இந்த சந்திப்பின்போது, தனக்கு வாய்ப்பு அளித்ததற்காக நன்றி தெரிவித்தார் நாராயணன். அப்போது ஓ.பன்னீர்செல்வம், அதெல்லாம் இருக்கட்டும் பிரச்சாரத்திற்கு நானும் வரேன். போய் பூத் வாரிய கடுமையாக வேலையை பாருங்க என கூறியுள்ளார். அதற்கு நாராயணன், நேற்றே பிரச்சாரத்தை தொடங்கிட்டோம் என்று கூறியதற்கு, நேத்தே பிரச்சாரத்தை தொடங்கியாச்சா, அப்புறம் என்ன சுறுசுறுப்பா வேலையை பாருங்க, தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் போட்டாச்சி. அவர்களும் வருவாங்க. வேலை செய்வாங்க. பிரச்சாரத்திற்கு நானும் வரேன் என்று நம்பிக்கை கொடுத்துள்ளார்.

Advertisment

By election nanguneri Reddiarpatti Narayanan
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe