Skip to main content

''நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரும் என அதிமுக சொல்ல காரணமே இதுதான்''-டி.கே.எஸ் இளங்கோவன்

Published on 09/07/2023 | Edited on 09/07/2023

 

 "This is the reason why AIADMK said that assembly election will come along with parliamentary election"-TKS Ilangovan

 

'கொள்ளையடித்த  பணத்தை செலவு செய்தாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று துடிப்போடு இருப்பவர்கள் பாஜகவினர். எனவே தான் அதிமுகவினர்  2024 நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் வரும் என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்' என திமுகவின் டி.கே.எஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

 

இன்று செய்தியாளர்களைச் சந்தித்த திமுகவின் டி.கே.எஸ் இளங்கோவன் பேசுகையில், ''ஆட்சிக்கு ஆபத்து வருவதற்கான சட்ட ரீதியான எந்த காரணமும் இல்லை. பொம்மை வழக்கிலேயே உச்சநீதிமன்றமே ஆட்சியை கலைப்பது எளிதல்ல என்று கூறியுள்ளது. அதற்கு முன்னாலே மாநில அரசுகளின் ஆட்சிகள் கலைக்கப்பட்டன. அந்த நிலை பொம்மை வழக்குக்கு பிறகு எந்த மாநிலத்திற்கும் ஏற்படவில்லை.

 

ஒரே ஒரு வழியை பாஜக பின்பற்றுகிறது. சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்கிறார்கள். கர்நாடக மாநிலத்தில் கடந்த முறை மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தார்கள். ஆனால் அதை கொள்ளைபுற வழியாக சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கி பாஜக ஆட்சி அமைத்துக் கொண்டார்கள். அதேபோல் மத்திய பிரதேசத்திலும் அந்த மாநில மக்கள் காங்கிரசுக்கு வாக்களித்தார்கள் அங்கேயும் சட்டமன்ற உறுப்பினர்களை பாஜக விலைக்கு வாங்கி ஆட்சி அமைத்தது மக்கள் விருப்பத்திற்கு மாறாக நடந்து கொண்டார்கள்.

 

ஜனநாயக முறை என்பது மக்கள் யாரை தேர்ந்தெடுக்கிறார்களோ அவர்கள் ஆட்சி நடத்த வேண்டும். அந்த ஜனநாயகத்தை கொலை செய்யும் வகையில் மக்களுடைய விருப்பத்திற்கு மாறாக ஆட்சியை மாற்றி அமைத்தது பாஜக என்பது வரலாறு. அந்த வகையில் பாஜக எதையும் செய்ய துணிந்தவர்களாக, அரசியல் சட்டத்தை மீறத் துணிந்தவர்களாக, உச்சநீதிமன்ற தீர்ப்புகளை எல்லாம் புறக்கணிக்கத் துணிந்தவர்களாக அவர்கள் மாறி விட்டார்கள். எப்படியாவது ஆட்சியில் ஒட்டிக் கொண்டிருக்க வேண்டும், எப்படியாவது மறைமுகமாகவாவது கோடி கணக்கில் கொள்ளையடித்த  பணத்தை செலவு செய்தாவது ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று துடிப்போடு இருப்பவர்கள் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். எனவே தான் அவர்களின் அடிவருடிகளான அதிமுக 2024 நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் வரும் என சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.