the  reason behind  Surya Siva Quits BJP

பாஜகவின் ஓ.பி.சி. பிரிவு மாநிலச் செயலாளராக இருந்த திருச்சி சூர்யா சிவா அந்தக் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அந்தக் கட்சியிலிருந்து விலகுவதாக அண்ணாமலைக்கு கடிதம் எழுதியுள்ளதாகட்விட்டரில்அறிவித்துள்ளார். இதற்கு ஒரு சுவையான பின்னணி காரணம் சொல்லப்படுகிறது.

Advertisment

அலிஷா என்கிற இஸ்லாமியப் பெண்ணிடம் அண்ணாமலை தவறாக பேசியதாகவும், இந்தத்தகவல் கட்சி மேலிடத்திற்கு அனுப்பப் பட்டதாகவும், இதை சூர்யா சிவாதான் செய்தார் எனவும் அமர் பிரசாத் ரெட்டி குற்றம் சாட்டினர்.

Advertisment

நான்அண்ணாமலையின் விசுவாசி. நான் எப்படி கட்சி மேலிடத்திற்கு இது போல் செய்வேன். கேசவ விநாயகம் தான் இந்த வேலையைச் செய்தார் என சூர்யாவுக்கும்அமர் பிரசாத் ரெட்டிக்கும் இடையே சண்டை மூண்டது.

இந்தச் சண்டை அண்ணாமலை வரை சென்றது. ‘நீ ஆபாசப் பேச்சுபேசியதாக நக்கீரன்வெளியிட்ட ஆடியோவுக்குப் பதிலாக என் மீதே குற்றம் சாட்டுகிறாயா’என இன்று காலை அண்ணாமலைக்கும் சூர்யாவுக்குமான வாக்குவாதம் தடித்தது. அதன் எதிரொலியாக சூர்யாபாஜகவிலிருந்து விலகுவதாக அறிவித்தார் என்கின்றனர்பாஜக வட்டத்தினர்.