Skip to main content

''தமிழ்தேசியம் என்று சொல்லிக்கொண்டு சிலர் செய்யும் பிரச்சாரமே காரணம்'' - துரை வைகோ பேட்டி

Published on 06/03/2023 | Edited on 06/03/2023

 

"The reason is because of the propaganda done by some people saying Tamil nationalism" - Durai Vaiko interview

 

வட மாநிலத்தவர்கள் தாக்கப்பட்டதாகவும், கொலை செய்யப்பட்டதாகவும் போலி வீடியோக்கள் வெளியானதை தொடர்ந்து பீகாரை சேர்ந்த அதிகாரிகள் குழுவினர் தமிழக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டதோடு, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டிருந்தனர். தொடர்ந்து சமூக வலைதளங்களை பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும் எனவும், புலம்பெயர் தொழிலாளர்களின் நலன்கள் தமிழகத்தில் காக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்திருந்தது. காவல்துறையும் வதந்தி பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தது.

 

அதே நேரம் வடமாநிலத்தவர்கள் கணிசமான அளவில் சொந்த ஊருக்கு திரும்பி வருவதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இந்நிலையில், மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்பொழுது இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்து பேசுகையில், ''தமிழ்நாட்டில் இதனால் என்ன பாதிப்புகள் வரும் என்று நாம் பார்க்க வேண்டும். ஏற்கனவே கரோனா காலத்தில் தமிழ்நாட்டிலிருந்த நிறைய தொழிற்சாலைகளை மூடினார்கள். இப்பொழுது இந்த ஒன்றரை வருடத்தில் மீண்டும் தொழிற்சாலைகள் மெதுவாக திறக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் இப்படி ஒரு வதந்தி எதற்காக. தமிழகத்தில் உற்பத்தி தொழிற்சாலை, சர்வீஸ் இண்டஸ்ட்ரீஸ், இன்ஃப்ராஸ்ட்ரக்சர் இண்டஸ்ட்ரீஸ் போன்றவற்றில் 50ல் இருந்து 70% வெளிமாநிலத் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இப்படி ஒரு வதந்தியால் இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டை விட்டு, வேலையை விட்டு வடமாநிலத்திற்கு சென்றுவிட்டார்கள் என்றால் இந்த தொழிற்சாலைகள் எல்லாம் முடங்குவதற்கு காரணமாக இருக்கும்.

 

சமீப காலமாக, மூன்று நான்கு வருடங்களாக ஒரு தவறான பிரச்சாரம் தமிழ்நாட்டில் செய்து கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக தமிழ் தேசியம் என்று சொல்லிக்கொண்டு சில பேர் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். வடக்கன் சென்று சொல்லி வடமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களால் தமிழ்நாட்டு இளைஞர்கள், தமிழ்நாட்டு மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என்று ஒரு தவறான பிரச்சாரத்தைச் சொல்கிறார்கள். ஆனால், உண்மைநிலை என்னவென்றால் தமிழ்நாட்டு இளைஞர்கள், மாணவர்கள் அவர்களுடைய உயர்கல்வியால், ஆங்கிலப் புலமையால் இன்று உலகம் முழுவதும், இந்தியா முழுவதும் பல்வேறு துறைகளில் தலைசிறந்த நிபுணர்களாக இருக்கிறார்கள். உடல் உழைப்பை தரக்கூடிய கட்டுமான வேலை, சாலை போடுதல், டெக்ஸ்டைல் துறையில் வேலை செய்வதற்கு விருப்பம் கிடையாது. அவர்களெல்லாம் அடுத்த கட்டத்திற்கு போய்விட்டார்கள். ஒயிட் காலர் ஜாப்புக்கு போய்விட்டார்கள். சாதாரண கூலி வேலைகள் செய்ய  ஆள் பற்றாக்குறை இருக்கிறது. அந்த ஒரே காரணத்தினால் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தொழிற்சாலைகள், தமிழ்நாடு முதலாளிகள் வடமாநிலத்தவர்களை வைத்து வேலை செய்கிறார்கள்'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.

Next Story

துரை வைகோவை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர ஓட்டு வேட்டை!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Ministers are actively gain for votes by supporting MDMK candidate Durai Vaiko

திருச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் ம.தி.மு.க வேட்பாளர் துரை வைகோ தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தி.மு.க அரசின் சாதனைகளை எடுத்துக் கூறி தீவிரமாக வாக்கு சேகரிப்பில்  ஈடுபட்டார்.

திருச்சி கிழக்கு, திருச்சி மேற்கு, திருவரங்கம், திருவெறும்பூர், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை ஆகிய ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, துரை வைகோவுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து நேற்று (16-04-24) தீவிர இறுதி கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டார். நேற்று (16-04-24) காலையில் புதுக்கோட்டையில் துரை வைகோவை ஆதரித்து பிரம்மாண்ட வாகன பேரணி நடந்தது. இதில் அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், மாவட்ட செயலாளர் செல்ல பாண்டியன் மற்றும் கூட்டணி கட்சியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.

இதையடுத்து, நேற்று மதியம் ஒரு மணிக்கு திருச்சி மத்திய பேருந்து நிலையத்திற்கு வெளியே பெரியார் சிலை அருகில் பிரச்சார பேரணி தொடங்கியது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்துகொண்டு துரை வைகோவை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர். அப்போது, தமிழ்நாட்டு மக்களுக்கு அனைத்து உரிமைகளும், திட்டங்களும் கிடைத்திட, மத்தியில் நல்லாட்சி மலர்ந்திட நம்முடைய வேட்பாளர் துரைவைகோவுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இறுதிக்கட்ட பிரச்சார பேரணி நகர் முழுவதும் சென்று காந்தி மார்க்கெட்டில் முடிவடைந்தது .

இந்தப் பிரச்சார பயணத்தில் மத்திய மாவட்ட தி.மு.க செயலாளர் வைரமணி, மாநகர செயலாளர்கள் மேயர் அன்பழகன், மண்டல குழு தலைவர் மதிவாணன், இனிகோ இருதயராஜ், எம்.எல்.ஏ, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் டாக்டர் ரொகையா, ம.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் வெல்லமண்டி சோமு, தமிழ் மாணிக்கம், திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெக்ஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர்கள் புல்லட் லாரன்ஸ், கனியமுதன், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர் வக்கீல் கிஷோர் குமார் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.