Skip to main content

பொது விவாதத்திற்கு தயாரா? நடிகர் கார்த்திக்கு சவால் விடும் நடிகை காயத்ரி ரகுராம்! 

Published on 04/12/2020 | Edited on 04/12/2020

 

                       

ddd

 

 

மத்திய மோடி அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகளின் போராட்டம் வீரியமடைந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து போராடுகின்றன அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும். இந்த நிலையில், தமிழகத்தில், இத்தகைய சட்டங்களை எதிர்ப்பவர்களுக்கு பதிலடி தரும் அசைன்மெண்டை தமிழக பாஜகவினருக்கு தந்திருக்கிறது டெல்லி!

 

அந்த வகையில், நடிகர் கார்த்தியின் அறிக்கைக்கு எதிராக கச்சைக் கட்டுகிறார் நடிகை காயத்தி ரகுராம். உழவன் பவுண்டேசன் என்கிற அமைப்பை நடத்தி வருகிறார் நடிகர் கார்த்து. அந்த அமைப்பின் சார்பாக, மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்துள்ள நடிகர் கார்த்தி, "இந்த மண்ணில் விவசாயிகளுக்கு இருக்கும் உரிமையும், தங்களுடைய  விளைப்பொருட்கள் மீது தங்களுக்கு இருக்கும் சந்தை அதிகாரமும் பெரும் முதலாளிகளின் கைகளுக்கு இந்த சட்டங்களால் மடை மாற்றம் செய்யப்பட்டு விடும். அதனால் இந்த சட்டங்களை விலக்கிக்கொள்ள வேண்டும் என்பது விவசாயிகளின் வேண்டுகோளாக இருக்கிறது. அவர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து உழவர்கள் சுதந்திரமாக தொழில் செய்வதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்" என வலியுறுத்தியிருக்கிறார்.

 

நடிகர் கார்த்தியின் கருத்தை எதிர்க்கும் காயத்ரிரகுராம், "விவசாயிகளுக்கும் பொதுமக்களும் நீங்கள் தவறான தகவலை  சொல்கிறீர்கள் என என்னால் பந்தயம் கட்ட முடியும். உங்களுடைய கருத்து தீங்கு விளைவிப்பதாகும். உங்களுடைய என்.ஜி.ஓ. ஆர்வத்திற்காக இதையெல்லாம் செய்கிறீர்கள். மசோதாவின் உண்மையை விவசாயிகள் அறிந்துள்ளார்கள். இந்த சட்டத்தின் மூலம் விவசாயிகள் எந்தளவுக்கு பயனடைவார்கள் என நான் உங்களுடன் விவாதிக்கத் தயார். நீங்கள் தயாரா? அறிஞர்களுடன் பொது ஊடகங்கங்களின் முன் வாருங்கள். நான், விவாதிக்கத் தயார். பொதுமக்களை முட்டாளாக்க வேண்டாம்" என கொந்தளிக்கிறார் நடிகை காயத்ரி ரகுராம்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

காயத்ரி ரகுராமுக்கு அ.தி.மு.கவில் புதிய பொறுப்பு!

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
Gayatri Raghuram new responsibility in ADMK

நடிகையும் நடனக் கலைஞருமான காயத்ரி ரகுராம், தமிழக பா.ஜ.கவில் வெளிநாடு மற்றும் பிற மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவு தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார். இதனைத் தொடர்ந்து, அவருக்கு தமிழக பா.ஜ.க மீது ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், சில மாதங்களுக்கு முன்பு பா.ஜ.கவை சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வந்தார். அதனையடுத்து, அவர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனை சந்தித்து பேசியபோது, அவர் அக்கட்சியில் இணைவார் எனத் தகவல் பரவி வந்தது. இந்நிலையில், கடந்த ஜனவரி 19 ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அக்கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். 

இந்த நிலையில், காயத்ரி ரகுராமுக்கு அ.தி.மு.க.வில் தற்போது புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘அ.தி.மு.கவின் மகளிர் அணி துணைச் செயலாளர் பொறுப்பில் காயத்ரி ரகுராம் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். அ.தி.மு.க.வினர் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

“பொய்களை யார் கேட்பார்கள்? காலி ஓ ஜிம்கானா” - காயத்ரி ரகுராம்

Published on 03/07/2023 | Edited on 03/07/2023

 

 'Who listens to lies? Kali O Gymkhana'-Gayatri Raghuram

 

கன்னியாகுமரியில் பாஜகவின் 9 ஆண்டு கால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “மீனவர்களுக்கு திமுக அரசு என்ன செய்திருக்கிறார்கள் எனச் சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கிறது. தேர்தல் வாக்குறுதியில் ஆட்சிக்கு வந்தவுடன் மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் கட்டுவோம் என்றார்கள். கட்டினார்களா?” என செங்கல் ஒன்றை தூக்கிக் காட்டி, “இதுதான் அந்த இரண்டு லட்சம் வீடு. திமுக ஆட்சிக்கு வந்த இரண்டரை ஆண்டுகளில் அவர்கள் கட்டிக் கொடுப்பதாக சொன்ன ஒரு வீடு கூட தமிழகத்தில் இல்லை. அதனால் தான் இந்த செங்கல்” என்றார்.

 

“2026 மார்ச் மாதம் மக்களுடைய பயன்பாட்டிற்கு எய்ம்ஸ் திறக்கப்படும். முதல்வருக்கு பாஜக ஒரு கேள்வி கேட்க கடமைப்பட்டிருக்கிறது. உங்கள் தேர்தல் வாக்குறுதியில் அதே மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என ஒரு வாக்குறுதி கொடுத்தீர்கள். ஒருவேளை நீங்கள் மறந்திருந்தீர்களா. உங்கள் வாக்குறுதி எண் 54. அந்த வேளாண் பல்கலைக்கழகம் எங்கு இருக்கிறது என்றால்” என 'அக்ரி யுனிவர்சிட்டி' என எழுதிய செங்கலை மீண்டும் அண்ணாமலை எடுத்துக் காட்டினார்.

 

 'Who listens to lies? Kali O Gymkhana'-Gayatri Raghuram

 

தொடர்ந்து சமூக வலைதளங்களில் கன்னியாகுமரியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அளவுக்கு அதிகமாக மக்கள் கூட்டம் இருந்ததாக புகைப்படங்கள் வெளியாகியது. அதேநேரம் அக்கூட்டத்தில் பொதுமக்கள் அதிகமாக கலந்து கொள்ளவில்லை எனவும் அண்ணாமலை பேசிக் கொண்டிருந்தபோதே சிலர் அதிருப்தியில் சென்று விட்டார்கள் என காலி சேருடன் கூடிய புகைப்படம் ஒன்றும் சமூகவலைதளங்களில் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் அண்மையில் பாஜக கட்சியில் இருந்து வெளியேறிய காயத்ரி ரகுராம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்  காலி சேர்களுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, 'அவன் பொய்களை யார் கேட்பார்கள்? மலிவான அரசியலை யார் பார்க்க வேண்டும்? காலி ஓ ஜிம்கானா' எனப் பதிவிட்டுள்ளார்.