Skip to main content

தவப்புதல்வனின் தர்மயுத்தம்! -பழனியில் ரவீந்திரநாத்குமார் பரவசம்!

Published on 11/01/2020 | Edited on 11/01/2020

 

‘தந்தை ஓ.பன்னீர்செல்வத்தைப் போலவே மகன் ரவீந்திரநாத்குமாரும்  ‘தர்மயுத்தம்’ நடத்துவதற்கு ஆயத்தமாகி வருகிறார் போலும்!’


-காவி வேட்டி உடுத்தி, நெற்றியில் திருநீறு குங்குமமிட்டு, கண்களை மூடிய நிலையில் அமர்ந்து, வலக்கை விரல் நுனியையும் இடக்கை விரல் நுனியையும் இணைத்து ஹாகினி முத்திரை பிடித்து, ரவீந்திரநாத்குமார் தியானிக்கும் கோலத்தைப் பார்க்கும்போது, இப்படித்தான் சொல்லத் தோன்றும். 

 

opr


 

ஓ.பி.எஸ்., தன் மகன் ரவீந்திரநாத்குமாருக்கு ஆன்மிகத்தை ஊட்டி ஊட்டி வளர்த்திருப்பார் போலும். ஸ்ரீவில்லிபுத்தூர் – செண்பகத்தோப்பில் உள்ள குலதெய்வக் கோவிலுக்குச் செல்லும்போதெல்லாம், அர்ச்சகர்கள் மந்திரங்கள் சொல்லச் சொல்ல, சம்மணமிட்டு அமர்ந்து,  உடலில் முன்னும் பின்னுமாக  ‘ஜெர்க்’ கொடுத்து, மந்திர உச்சரிப்புக்கு ஏற்ப தலையை ஆட்டுவது அவரது வழக்கம். அந்த உடல் அசைவை, பவுர்ணமி நாளில் பழனி முருகன் கோவிலில் தியானித்தபோது காண முடியவில்லை.  
 

‘மத்திய அமைச்சர் ஆகவேண்டும்’ என்பதே, பழனியாண்டவரிடம் அவரது வேண்டுதலாக இருந்திருக்கும் என்கிறார்கள், ரவீந்திரநாத்குமாரின் எண்ண ஓட்டத்தை அறிந்த, அக்கட்சியின் சீனியர்கள்.   


 

“தமிழக எம்.பி.க்களிலேயே, மக்களவையில் அதிக அளவில், அதாவது 42 விவாதங்களில் பங்கேற்ற ஒரே எம்.பி. என்ற நற்பெயர் எடுத்திருக்கிறார் என்றால், அதற்கெல்லாம் காரணம், பக்தியின் வாயிலாக அவர் ஆன்மபலம் பெற்றிருப்பதுதான். ‘நாம் முதலில் இந்து.. அதற்கு அப்புறம்தான் மற்றது.’ என்று சின்னமனூரில் இந்து முன்னணி மேடையில், காவித்துண்டு அணிந்து,  ரவீந்திரநாத்குமார் பேசியது அப்போது சர்ச்சையானது. அவரோ,  ‘நான் பேசியதில் ஒரு தவறும் இல்லை..’ என்பதில் தீர்க்கமாக இருந்தார். ஏனென்றால், இந்துமத நம்பிக்கையில் அவருக்கு அத்தனை ஈடுபாடு.  ‘டெல்லி போனார்; பா.ஜ.க. பக்கம் சாய்ந்துவிட்டார். அதனால்தான் காவி உடுத்த ஆரம்பித்திருக்கிறார்.’ என்று புரியாதவர்கள் வேண்டுமானால் அவருடைய பக்திக்கு சாயம் பூசலாம். ஆனால்.. ரவீந்திரநாத்குமார், எப்போதும் இப்படித்தான். கண்மூடி பழனியில் அவர் அமர்ந்ததும்கூட, ஒருவகையில் தர்மயுத்தமே! பிரச்சனைகள் தலைதூக்காமல்  நாடு முழுவதும் அமைதி நிலவ வேண்டும் என்ற சிந்தனை   உள்ளவர், பழனியாண்டவர் சன்னதியில் என்ன வேண்டியிருந்தாலும், அது மக்கள் நலன் சார்ந்ததாகவே இருந்திருக்கும்.” என்கிறது, அவரது நட்பு வட்டம். 
 

“தற்போது, அதிமுக மக்களவைத் தலைவர்! அடுத்தடுத்து,  அவருக்காக என்னென்ன பொறுப்புகள் காத்திருக்கின்றனவோ? தவப்புதல்வன் அல்லவா?  எதிர்காலத்தையும் அறிந்தே வைத்திருக்கிறார்.” என்கிறார்கள், ‘இளைஞர்களின் எழுச்சி நாயகன்! நாளைய தலைமுறையின் உத்தமத் தலைவன்!’ என்றெல்லாம், ரவீந்திரநாத்குமாருக்கு  நாளும் ஒரு பட்டத்தை அளித்துவரும் இளம் விசுவாசிகள்.    


 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

“நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்” - புகழேந்தி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 People should vote against the forces that wants to divide the country says Pugazhendi

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது. காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகராட்சி, புனித ஜான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் ஓபிஎஸ் அணி, செய்தி தொடர்பாளர் புகழேந்தி வாக்களித்தார். வாக்களித்த பின் பத்திரிக்கையாளர்களிடம் பேட்டியளித்த புகழேந்தி, “இந்தியா என்கிற மாபெரும் ஜனநாயக நாட்டில், ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி உள்ளேன். மதத்தால், கடவுளால் நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகளுக்கு எதிராக வாக்களித்துள்ளேன்”.

“தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா திராவிட இயக்க வழியில் மத சார்பற்ற ஜனநாயகத்தை தழைக்க செய்ய இன்று வாக்களித்துள்ளேன். வாக்களிக்க அனைவரையும் அழைக்கிறேன். மதத்தால், கடவுளால் நம்மை யாராலும் பிரிக்க முடியாது என்பதை இந்த தேர்தலில் தமிழக  மக்கள் தெளிவுபடுத்த வேண்டும்”  எனத் தெரிவித்தார்.

இராமநாதபுரத்தில் ஓபிஎஸ் போட்டியிடுகிறாரே வெற்றி பெறுவாரா என்ற கேள்விக்கு "அண்ணன் ஓபிஎஸ் பலாப்பழ சின்னத்தில் போட்டியிடுகிறார். அமோக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்" என்று பதிலளித்தார்.