Skip to main content

காங்கிரஸ் அழைப்பைப் புறக்கணித்த ரங்கசாமி..! 

Published on 22/01/2021 | Edited on 22/01/2021

 

Rengasamy ignores Congress call ..!


புதுவை சட்டமன்றத்துக்கும் இந்தாண்டு தேர்தல் நடக்கவிருக்கிறது. புதுவையில் முதல்வர் நாராயணசாமியின் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

 

தமிழகம் மற்றும் புதுவையில் திமுக, காங்கிரஸ் கூட்டணி நீடித்து வரும் நிலையில், புதுவையில் திமுக ஆட்சிக்கு வர வேண்டும் என்றும் அதற்கேற்ப தி.மு.க. தனித்தோ அல்லது தி.மு.க. தலைமையில் கூட்டணியோ உருவாக்கப்பட வேண்டும் என்றும் புதுவை தி.மு.க.வினர், தங்கள் கட்சித் தலைமையை சமீபகாலமாக வலியுறுத்தி வந்தனர். இதனால், புதுவையில் காங்கிரஸ், தி.மு.க. கூட்டணி நீடிக்காதோ என்கிற அரசியல் பரபரப்பு உருவானது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கூட்டணி தொடரும் என்கிற ரீதியில் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

 

இதனையடுத்து, புதுவை தி.மு.க.வினரின் போர்க்குரல் தற்போது ஓய்ந்திருக்கிறது. இந்த நிலையில், புதுவை காங்கிரசின் மூத்த தலைவர்கள், தங்களுடைய டெல்லி தலைமைக்கு சில தகவல்களைத் தொடர்ச்சியாக அனுப்பி வைத்தபடி இருக்கிறார்கள். குறிப்பாக, நாராயணசாமியையே மீண்டும் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலைச் சந்தித்தால் காங்கிரஸ் தோற்றுப் போகும் என்று கட்சித் தலைமைக்கு தெரியப்படுத்தியிருக்கிறார்கள்.

இதனை ஆராய்ந்த ராகுல்காந்தி, திமுக - காங்கிரஸ் கூட்டணியில் சில புகைச்சல்கள் ஏற்கனவே புதுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்கள் நாராயணசாமி மீது நம்பிக்கை இழந்திருப்பது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது என்று காங்கிரஸ் தலைவர்களிடம் சொல்லியிருக்கிறார். இந்த நிலையில், டெல்லிக்கு அழைக்கப்பட்டார் நாராயணசாமி. அதன்படி டெல்லி சென்ற அவர், ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்தார். அதில், பல்வேறு அரசியல் நிலவரம் குறித்து அவரிடம் விவாதித்துள்ளார் ராகுல்காந்தி.

 

இந்த நிலையில், காங்கிரசிலிருந்து பிரிந்துசென்று தனிக்கட்சி நடத்தி வரும் முன்னாள் முதல்வர் ரங்கசாமியை, காங்கிரஸ் தலைமையிலிருந்து தொடர்பு கொண்டு, “நீங்கள் மீண்டும் காங்கிரஸுக்கு வர வேண்டும் என ராகுல் விரும்புகிறார். அதனால் காங்கிரசுக்கு வாருங்கள், நீங்கள்தான் முதல்வர் வேட்பாளர்” என்று அழைத்துள்ளனர். ஆனால், ரங்கசாமியோ, எடுத்த எடுப்பிலேயே காங்கிரசின் அழைப்பை ஏற்க மறுத்துவிட்டார். பாஜக கூட்டணியில் இணைவதற்கான முயற்சியில் அவர் இருப்பதாலேயே காங்கிரசின் அழைப்பைப் புறக்கணித்திருக்கிறார் என்கின்றனர் புதுவை காங்கிரஸார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

“காவிரி நீர் வேணுமா... ஈரோட்டில் கூட காவிரி ஓடுது பாருங்க...” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலால் எழுந்த விமர்சனம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Oh Cauvery water...? Even in Erode, see the Cauvery running'- Criticism caused by EVKS Elangovan's response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், ''ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி என்பது சாதி மதங்களைக் கடந்த கூட்டணி. மத வெறித்தனத்திற்கு அப்பாற்பட்ட கூட்டணி. மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல கொள்கைக்காக தான் இந்த கூட்டணி இருக்கிறது.

மற்ற கூட்டணிகளை எடுத்துக் கொண்டால் குறிப்பாக பாஜக கூட்டணியில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி, அதிமுக தலைமையில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி அவர்கள் கொள்கைக்காக ஒன்று சேரவில்லை. சில கோடி ரூபாய் பேரம் பேசி பெறுவதற்காக அந்த கூட்டணியில் இருக்கிறார்கள்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்று சொல்கின்ற காங்கிரசுக்கு பத்து சீட்டுகள் கொடுத்தது நியாயமா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளாரே' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இளங்கோவன், ''இல்லை காங்கிரசினுடைய கொள்கையே ஒரு சொட்டு நீர் கூட கொடுக்கக் கூடாது என்பதுதான். மக்கள் குடிப்பதால் கெட்டுப் போயிருக்கிறார்கள். மக்களுடைய சிந்தை மாறி போயிருக்கிறது. அதனால் காங்கிரசை பொறுத்தவரை எங்களுடைய மகாத்மா காந்தியினுடைய கொள்கையே ஒரு சொட்டு மது தண்ணீர் கூட மக்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான்'' என்றார்.

உடனே செய்தியாளர் 'காவிரி தண்ணீர்' என சொல்ல, ''காவிரி தண்ணீரா... காவிரி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஈரோட்டில் இருக்கின்ற காவிரி ஆற்றை பார்த்தீர்கள் என்றால் கூட, இன்னைக்கு பாருங்கள் இருக்கின்ற பாறை எல்லாம் மறைக்கும் அளவிற்கு தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது. வேண்டிய அளவிற்கு தண்ணீர் தர கர்நாடகா தயாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தால் சில தடங்கல்கள் இருக்கிறது'' என்றார்.

காவிரி நீர் குறித்த கேள்விக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடுத்த பதிலுக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.