Skip to main content

அன்புமணியால் ரொம்ப அப்செட்டான ராமதாஸ்!

Published on 27/05/2019 | Edited on 27/05/2019

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. மேலும் பல கட்சிகளுக்கு தேர்தல் முடிவுகள் ரொம்பவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தைலாபுரத்தில் இருந்த பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தர்மபுரியில் இருந்த அன்புமணியிடம் அடிக்கடி நிலவரத்தை விசாரிச்சிக்கிட்டே இருந்தார். அங்கே ஏறி ஏறி இறங்கி, பின்னோக்கிப் போன அன்புமணியின் நிலவரம், அவர் குடும்பத்தினரை அப்செட்டாக்கிடிச்சினு ஒரு தகவல் வந்தது. 

 

pmk



மேலும் தைலாபுரம் அடங்கிய விழுப்புரம் தொகுதியில் தி.மு.க. சின்னத்தில் விடுதலைச் சிறுத்தைகள் ரவிக்குமார் முன்னணியிலேயே இருந்ததை டாக்டர் ராமதாஸால் ஜீரணிக்க முடியலை. பா.ம.க. வேட்பாளரான வடிவேல் ராவணனைத் தொடர்புகொண்டு, விவரம் கேட்டிருக்காரு. சிறுத்தை வேட்பாளருக்கு தி.மு.க. ஓட்டு முழுமையா விழுந்திருக்கு. ஆனால் நமக்கு அ.தி.மு.க. ஓட்டுகள் முழுசா விழலை. நாம களமிறங்கிய 7 தொகுதியிலும் அவங்க நமக்கு உண்மையா செயல்படலைன்னு சொல்லியிருக்கார். 


ராமதாஸோ, இடைத் தேர்தல் நடக்கும் 22 தொகுதியில், 8 தொகுதி,  நம் செல்வாக்குள்ள வட மாவட்டங்கள்ல வருது. அதனால் இவற்றில் நம்ம பலத்தில் ஜெயிப்போம்னுதான் எடப்பாடி நம்மைக் கூட்டணியில் சேர்த்துக்கிட்டார். இப்ப வெட்கக்கேடா இருக்குன்னு தன் வருத்தத்தைப் பகிர்ந்துக் கிட்டாராம். இதனால் அதிமுக, பாமக கூட்டணியில் விரிசல் விழுந்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

2024 மக்களவை தேர்தல்; ஓய்ந்தது பிரச்சாரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
2024 Lok Sabha Elections; The campaign is over

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரச்சாரம் ஒரு வழியாக ஓய்ந்தது. பிரச்சாரம் முடிவடைந்ததால் வாக்கு சேகரிப்பு தொடர்பான எந்தப் பரப்புரைக்கும் அனுமதி இல்லை. அதேபோல தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் ஆறு மணியோடு வெளியேற வேண்டும் என்பது நடைமுறை. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. 

Next Story

பா.ஜ.க கொடியைத் தீயிட்டு கொளுத்திய பா.ம.க நிர்வாகி; பின்னணி என்ன?

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
What is the background on BJP executive who set fire to BJP flag

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புள்ளநேரி சேர்ந்த மதன்ராஜ் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், இரண்டு வீடியோக்களை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, ‘தான் புள்ளநேரி பகுதியைச் சார்ந்தவன் எனவும் பாட்டாளி மக்கள் கட்சியில் சுமார் 12 வருட காலமாக இருந்து வருகிறேன். மேலும் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளராகவும் உள்ளேன்.

இங்கு பஞ்சாயத்தில் உள்ள பா.ம.க நிர்வாகிகளை கலந்து ஆலோசனை செய்யாமல், பா.ஜ.க.வினர் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். இதன் காரணமாக தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய பஞ்சாயத்தில் 65 சதவீதம் பாட்டாளி மக்கள் கட்சியின் ஓட்டு சதவீதம் உள்ளது. ஆனால், பா.ஜ.க.வில் ஓர் இருவர் தான் உள்ளனர்.

பா.ஜ.க நிர்வாகிகள், மரியாதை எப்படி கொடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். எனவே எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக்கூறி பா.ஜ.க.வின் கொடியை எரித்து எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதன் வீடியோவை தனது முகநூலிலும் பதிவு செய்துள்ளார். மேலும் கட்சியினரின் அழுத்தத்தின் காரணமாக சிறிது நேரத்தில் அந்த வீடியோவை டெலீட் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.