Skip to main content

துக்க வீட்டில் கூட இறந்தவரின் செயல்பாடுகளை பற்றி பேசாமல்... ராமதாஸின் அரசியல் நாடகம்... ஞானமூர்த்தி 

Published on 19/09/2019 | Edited on 19/09/2019

 

செந்துறை வடக்கு திமுக ஒன்றியச் செயலாளர் மு.ஞானமூர்த்தி. இவர், ஜெ.குரு நினைவு மணிமண்டப திறப்பு விழாவில் பாமக நிறுவனர் ராமதாஸ் பேசியதற்கு பதில் அளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 

அதில், 
 

டாக்டர் ராமதாஸ் அவர்களின் மட்டமான அரசியல் நாடகம் காடுவெட்டி குருவின் நினைவு மணிமண்டப திறப்பு விழா நிகழ்ச்சியில் அரங்கேறி இருக்கிறது. 

 

இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்த ராமதாஸ் கூட்டத்தில் பேசும்போது, வன்னிய இளைஞர்களுக்கு சூடேற்ற வேண்டும் என்னும் நோக்கிலும், குரு உடல் பாதிக்கப்பட்ட நேரத்தில் இவர்கள் சரியாக மருத்துவம் பார்க்கவில்லை என்று குருவின் சகோதரிகள் பேசியதை மறைக்க வேண்டும் என்னும் நோக்கிலும் ராமதாஸ் மட்டமான பொய்யை அவிழ்த்து விட்டிருக்கிறார்.

 

mg


 

இவரையோ அல்லது குருவையோ கொலை செய்துதான் அரசியல் செய்ய வேண்டும் என்கிற அவசியம் திமுகவிற்கு இல்லை. 
 

இவர்களுக்கு சங்கம் துவங்கிய காலத்திலிருந்தே ஏதாவது ஒரு பழியை மற்றவர்கள் மீது போட்டு வன்னியர் இளைஞர்களை உணர்ச்சி வசப்பட வைத்து அதில் குளிர்காய்வதுதான் இவர்களின் கடந்த கால வரலாறு.  
 

1981ல் ஆதிதிராவிடர் சமுதாயத் தலைவராக இருந்த இளையபெருமாளை வழிமறித்தார்கள் என கூறி அப்போது ஒரு கலவரம் வரும் அளவுக்கு செய்திகள் ஆனது. பிறகு ஒருவாரத்தில் ராமதாஸ் அவர்களின் காரில் கல்லைத்தூக்கிபோட்டு அவரை கொல்ல முயற்சி என்று ஒரு நாடகத்தை நடத்தி சாலையில் இருந்த மரங்களை வெட்டி போட்டு கலவரத்தை தூண்ட முயற்சி நடந்தது. 
 

பிறகு வன்னியர் சங்கம் கட்டமைக்கும் காலகட்டத்தில் குருவை கொல்ல மாற்று சாதியினர் சிலர் திட்டமிட்டிருப்பதாக செய்தியை உருவாக்கி ஒரு பரபரப்பை ஏற்ப்படுத்துவார்கள். பிறகு காவல்துறையினர் கைது செய்து என்கவுன்டர் போட திட்டமிடுகிறார்கள் என செய்தியை பரப்பி பரபரப்பை ஏற்ப்படுத்துவார்கள். எப்போதெல்லாம் வன்னிய இளைஞர்கள் சோர்வாக இருக்கிறார்களோ அப்போதெல்லாம் இதைப்போன்று பரபரப்பான வதந்தியை பரப்புவது டாக்டர் ராமதாசுக்கு கைவந்த கலை.

 


 

 

குரு பேசும் ஒவ்வொரு கூட்டத்திலும் யாரை திட்டவேண்டும், என்ன என்ன பேச வேண்டும் என அவருக்கு உத்தரவிட்டு உசுப்பேற்றி, உசுப்பேற்றி பேசவைத்து அவரின் ஆயுளை முடித்தவர் ராமதாஸ்.  
 

குருவுக்கு உடல் பாதிக்கப்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த போது நுரையீரல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் மாற்று நுரையீரல் பொருத்தி சிகிச்சை செய்ய சுமார்  ரூ. ஒரு கோடி செலவாகும் என மருத்துவமனை நிர்வாகம் கூறிவிட்டது. 
 

இந்த தகவலை இரண்டு மருத்துவரிடத்திலும் (ராமதாஸ், அன்புமணி) தெரியப்படுத்தியவுடன் குருவிடம் பணம் இல்லையா? என கேட்க அவரிடம் இல்லை என சொல்ல. எங்களிடமும் பணம் இல்லை வசூல் செய்து சிகிச்சை கொடுங்கள் என மருத்துவர்கள் சொல்ல, இந்த செய்தியை குருவிடம் தெரிவிக்க, குரு மருத்துவமனையில் இருந்து மனம் நொந்து வீட்டுக்கு வந்து யாரையும் சந்திக்காமல் 3 மாதங்கள் வீட்டின் அறையிலேயே இருந்தார். 
 

இந்த செய்தி தமிழர் வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனுக்கு தெரிய, அவர் பத்திரிக்கையாளர்களை அழைத்து எனது நண்பர் குரு மருத்துவ சிகிச்சை இல்லாமல் வீட்டிலேயே இருப்பதாக கேள்விப்பட்டேன்.  அவர் என்னோடு வந்தால் வெளிநாட்டிற்க்கு அழைத்து சென்றாவது மருத்துவ சிகிச்சை கொடுக்க தயாராக இருக்கிறேன் என பேட்டி கொடுத்தார். 
 


 

உடனே ராமதாஸ் வெகுண்டெழுந்து காடுவெட்டி வந்து குருவை பார்த்து சமாதானப்படுத்தி மீண்டும் அப்பல்லோ கொண்டு சென்று மருத்துவமனையில் சேர்த்தார். 
 

 

குரு கூட்டங்களில் பேசும்போது தொண்டர்கள் கை தட்டுகிறார்கள், ஆரவாரம் செய்கிறார்கள், அன்புமணி பேசும்போதும், ராமதாஸ் பேசும்போதும் எழுந்து சென்றுவிடுகிறார்கள் என்கிற ஆதங்கம் இருவருக்கும் உண்டு. 
 

சாவு வீட்டில் கூட இறந்தவரின் செயல்பாடுகளை பற்றி பேசாமல் தமிழ் நாட்டுக்கு தான் முதல்வர் ஆக வேண்டும் என பேசும் அன்புமணியின் எண்ணம் எவ்வளவு கொடூரமானது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 
 

தமிழ்நாட்டில் இவர்கள் தனித்து நின்று 120 சீட்டுகளை பிடிப்பார்களாம், ஆட்சி அமைப்பார்களாம், அருகில் 3 அதிமுக  எம்எல்ஏக்களை வைத்துக்கொண்டு அன்புமணி பேசியிருக்கிறார். அது நடக்காது என்பதை புறிந்துகொள்ளுங்கள். இவ்வாறு கூறியுள்ளார். 


 

சார்ந்த செய்திகள்

Next Story

கோவையில் ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா-திமுக புகார்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
DMK complains about BJP payment through GPay in Coimbatore

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கோவை தொகுதியில் பாஜகவினர் ஜிபே மூலம் பண பட்டுவாடா செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து திமுக புகார் எழுப்பியுள்ளது. பிரச்சாரம் முடிந்தவுடன் வெளியூர் நபர்கள் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்ற நடைமுறையை பின்பற்றவில்லை என திமுக குற்றம் சாட்டியுள்ளது. கோவை அவிநாசி சாலையில் உள்ள அலுவலகத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த பலர் தங்கி ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்து பாஜகவுக்கு வாக்களிக்கும்படி கோரி வருகின்றனர் எனவும், சென்னையை சேர்ந்த ஜெயப்பிரகாஷ், கிருஷ்ணகுமார், கரூரை சேர்ந்த சிவகுமார் ஆகியோர் பணம் பட்டுவாடா செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் திமுக வலியுறுத்தியுள்ளது.

Next Story

“மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
We will achieve great success says CM MK Stalin 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது.

இந்நிலையில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் திமுக சார்பில் வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறவிருக்கும் இந்தியாவின் 18ஆவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறும் தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளும் புதுச்சேரியின் ஒரு மக்களவைத் தொகுதியும் உள்ளடங்கிய 102 தொகுதிகளிலும் நடைபெறுகிறது. இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை அறிவித்த நாளிலிருந்து உடன்பிறப்புகளாம் நீங்கள் அனைவரும் களத்தில் இறங்கிப் பணியை மேற்கொண்டு, தோழமைக் கட்சியினருடன் ஒருங்கிணைந்து, மிகக் குறைந்த கால அவகாசத்திற்குள் வாக்காளர்களைச் சந்தித்து ஆதரவைப் பெற்று, வெற்றியை உறுதி செய்து, தேர்தல் பணியில் தி.மு.க.வினரை மிஞ்ச எவரும் கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறீர்கள்.

மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் எழுச்சிகரமாகத் தொடங்கிய உங்களில் ஒருவனான என்னுடைய பரப்புரைப் பயணம் ஏப்ரல் 17 அன்று தமிழ்நாட்டின் தலைநகருக்குள் அடங்கிய தென்சென்னை - மத்திய சென்னை தொகுதிகளில் மக்களின் உணர்ச்சிகரமான முழக்கங்களுடன் நிறைவடைந்திருக்கிறது. நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். களத்தில் நமக்குக் கிடைத்துள்ள ஆதரவு, வாக்குகளாகப் பதிவாகி, வெற்றியாக வெளிப்படும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன். அந்த நம்பிக்கையும் உறுதியும் நிறைவேற, வாக்குப்பதிவு நாளான ஏப்ரல் 19 அன்று கழகத்தினர் மிகுந்த கவனத்துடன் செயலாற்ற வேண்டும். அப்போதுதான், இத்தனை நாள் பாடுபட்டது பயன் தரும். 

We will achieve great success says CM MK Stalin 

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றியை உறுதி செய்ய வேண்டிய கடமைக் கழகத் தொண்டர் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. மாவட்டக் கழகச் செயலாளர்கள் தொடங்கி கிளைக் கழக நிர்வாகிகள் வரை தங்களுக்கான பணிகளைத் திட்டமிட்டுக்கொண்டு செயலாற்றுவதுடன், வாக்குச்சாவடிப் பணிகளில் ஈடுபடக்கூடிய பாக முகவர்கள், வாக்குச்சாவடி முகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள்தான் வாக்குப்பதிவு நாளின் முன்களப் பணியாளர்கள். முழுமையான போர் வீரர்கள். இதில் வாக்குச்சாவடி முகவர்கள், மாற்று முகவர்கள் ஆகியோர் வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும் வரை விழிப்புடன் செயலாற்ற வேண்டிய பணியில் இருப்பதால், அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை முழுமையாக அறிந்திருக்க வேண்டியது அவசியமாகும்.

அதற்கான பயிற்சியினை நமது கழகச் சட்டத்துறையின் உதவியுடன் ஏற்கனவே வழங்கியுள்ள நிலையில், வாக்குப்பதிவு நாளன்று மறக்காமல் மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நினைவூட்ட விரும்புகிறேன். காகித வாக்குச் சீட்டுக்குப் பதில், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பொதுமக்கள் வாக்களிப்பதால், நாம் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளும், கவனிக்க வேண்டிய நடைமுறைகளும் நிறைய உள்ளன. அவை நம் தி.மு.கழகத்தின் சட்டத்துறை சார்பில் மாவட்டக் கழகச் செயலாளர்கள் மூலமாக உங்களிடம் கையேடாக வழங்கப்பட்டிருக்கும். 

We will achieve great success says CM MK Stalin 

அவற்றைக் கவனத்தில் கொண்டு வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்படவேண்டும். பாக முகவர்கள் உள்ளிட்ட கழகத்தின் தேர்தல் பணிகளை மேற்கொள்வோர் இவை ஒவ்வொன்றையும் உறுதி செய்யவேண்டும். வாக்குப்பதிவில் கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள் சரியாக அமைந்தால்தான் வாக்கு எண்ணிக்கையின்போது கழகக் கூட்டணியின் முழுமையான வெற்றி உறுதியாகும். விரைந்து களப்பணியாற்றி, வியர்வை சிந்தி விதைத்தவை அனைத்தும் அறுவடையாகும் நாள்தான் வாக்குப்பதிவு நாள். அதனால் மிகுந்த விழிப்புடன் பணியாற்றுங்கள். வாக்குரிமையை நிலைநாட்டுவோம். மகத்தான வெற்றியை ஈட்டுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.