Skip to main content

மாறி மாறி மகனுக்கே பதவி வாங்கி மற்ற வன்னியர்களுக்கு ‘பே....பே....! காட்டிய... -ராமதாஸ் மீது முரசொலி விமர்சனம்

Published on 10/10/2019 | Edited on 10/10/2019

 

நரிக்கண்ணீர் வடிக்காதீர் நன்றி மறக்காதீர் என்ற தலைப்பில் முரசொலியில் மருத்துவர் ராமதாசுக்கு பாட்டாளி தொண்டனின் பகீர் கடிதம் என்று கட்டுரை வெளிவந்துள்ளது. 
 

அதில், 
 

விக்கிரவாண்டியில்  `ஓட்டுப்  பொறுக்க  வேண்டும்’என்பதற்காக ஏ.கோவிந்தசாமி அவர்களுக்கு மணிமண்டபம் கட்டப்போவதாக தி.மு.க.தலைவர் கூறியிருப்பதாக,தங்கள்  வயதுக்கும்,  வகிக்கும் பொறுப்புக்கும்  தகுதியற்ற  நாலாந்தர  வார்த்தைகளை  ஏன்  பொறுக்கியுள்ளீர்களோ; தெரியவில்லை!  கோவிந்தசாமி  அவர்களின்புதல்வருக்கு  ஏன்  தேர்தலில்  போட்டியிட  வாய்ப்பளிக்கவில்லை  என்று  கேட்டிருக்கிறீர்கள்?

 

ramadoss - anbumani ramadoss



ஏ.கோவிந்தசாமி  அவர்களின்  மனைவியும்,  மகனும் தி.மு.கழகம்  சார்பில்  போட்டியிட்டு  வெற்றி பெற்று  சட்டமன்ற  உறுப்பினர்களாகத்  தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்! அந்த வரலாற்றை எல்லாம் ஏன் மறைக்கிறீர்கள். ஒரே  ‘கேபினட்’  பதவியா  தேர்தலில்  நின்று  போட்டியிடா விட்டாலும்   அந்தப்   பதவி   என்   மகனுக்கே வேண்டும், எம்.பி. வேட்பாளரா, அதுவும் என் மகன்தான், எம்.எல்.ஏ.  வேட்பாளரா  -அதுவும்  என்  மகன்தான், முதல் மந்திரி வேட்பாளரா, அதுவும்  என்  மகன்தான், எம்.பி.  தேர்தலுக்கு  நின்று தோற்று  விட்டாரா;  பரவாயில்லை.  பேரம் பேசி  பெற்ற ராஜ்யசபா உறுப்பினர் பதவியைப் பெற்று மகனை எம்.பி. ஆக்கி விடலாம் - என மாற்றி மாற்றி மகனுக்கே பதவிகளை  வாங்கித்  தந்து,  மற்ற  வன்னியச்  சொந்தங்களுக்கு ‘பே....பே....!  காட்டிய  நீங்கள்  அறிக்கைவெளியிடும்  போது  இந்தத்  தாக்குதல்கள்  எல்லாம்வருமே என எண்ணிப் பார்த்திட வேண்டாமா?


 

தி.மு.க.வின்  தளகர்த்தர்களாக  இருந்த  வன்னியர்கள்  எல்லாம்  உதாசீனப்படுத்தப்பட்டார்கள் என உண்மைக்கு  மாறாக  நீங்கள்  கூறலாமா;  தி.மு.கழகம் ஒரு அரசியல் கட்சியாக துவக்கப்பட்டது. எல்லா வகுப்பினரும்  இணைந்து  வளர்த்த  இயக்கம்  தி.மு.கழகம்!ஆனால், வன்னிய சமுதாய மக்கள் பெயரைச் சொல்லி ஆரம்பித்த  கட்சியின்  மறுதோற்றமாகத்  தோன்றியுள்ள பாட்டாளி   மக்கள்   கட்சி   ஆரம்பித்தபோது   இருந்த தளகர்த்தர்கள்         எல்லாம்         உதாசீனப்படுத்தப்படவில்லையா?
 

கட்சியின் முன்னாள் தலைவர் பேராசிரியர் தீரன் 21 ஆண்டு காலம் பிரிந்து செல்லவில்லையா? இயக்கத்தின் இதயநாடியாக விளங்கிய வேல்முருகனை உதாசினப்படுத்தி வெளியேற்றவில்லையா? பு.த.இளங்கோவன்,  பு.த.  அருள்மொழி  ஆகியோர் புண்பட்டு  போய்விட வில்லையா.... ஏன்? காடுவெட்டி குருவின் குடும்பம் உங்களைசபிக்கவில்லையா? இப்படி எல்லாம் நீங்கள்  நம்  பாட்டாளி  சொந்தங்களைஉதாசீனப்படுத்தி  விட்டு,  சாகும்  வரை தி.மு.கழகத்திலேயேஇருந்து  உயிர்விட்ட  அந்தக்  கட்சியின்  வன்னிய  முன்னணியினர் உதாசீனப்படுத்தப்பட்டனர்  என்று  கூறினால்  உண்மைநிலை  அறிந்த  என்  போன்றவர்கள்  இதை எல்லாம்  எண்ணிப்பார்க்க  மாட்டார்களா?


 

தீரனும், வேல்முருகனும், பு.த.இளங்கோவன்,  பு.த.அருள்மொழி போன்றவர்களும் இந்தக் கட்சி உதயமாக எத்தனை பாடுபட்டவர்கள். அவர்களை எல்லாம் எவ்வளவு கேவலமாகப் பேசினீர்கள்; நினைவில் இல்லையா? இப்படி உங்களை நம்பி வந்த எத்தனை வன்னியர்களை நட்டாற்றில் விட்டீர் கள் எண்ணிப்பாருங்கள்!
 

பொய் - புரட்டு - புளுகு இவற்றை வைத்து பாட்டாளிச் சொந்தங்களை எத்தனை நாள் ஏமாற்ற முடியும்? இப்போதே முக்கால்வாசி பேர் உங்கள் பேச்சை நம்பி ஏமாறத்  தயாராயில்லை! கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தின் மற்றும் இந்தியாவின் ஆளும் கட்சிகளோடு கூட்டணி சேர்ந்து, நமது சமுதாய மக்கள் அதிகம் உள்ள தொகுதிகளாகத் தேர்ந்தெடுத்துப் போட்டியிட்டும் ஒரு தொகுதியில் கூடவெற்றி பெற முடியாதது எதைக் காட்டுகிறது?
 

நம் பாட்டாளிச் சொந்தங்கள் எல்லாம் உண்மை உணர்ந்து விட்டனர் என்பதையும், இனியும் உங்களை நம்பத் தயாராக இல்லை  என்பதையும்  காட்டவில்லையா? இப்படி  இடக்கு  மடக்காக பேசியும்,  அறிக்கை  விட்டும், இருக்கும் என்னைப் போன்ற ஒன்றிரண்டு சொந்தங்களையும் விரட்டி  விட்டு  விடாதீர்கள்!  உங்கள்  வீட்டு  ரசம்  மணக்க நீங்கள்தான்  வன்னியர்களை கருவேப்பிலையாக  உபயோகிக்கிறீர்கள் என்ற உண்மையை வன்னியர்கள் உணரத் தொடங்கிவிட்டனர்.கடந்த  நாடாளுமன்றத்  தேர்தலுக்கு  முன்  10  வாக்குறுதிகளை ஏற்றதால்தான் பா.ஜ.க., அ.தி.மு.க. அணியோடு கூட்டுசேர்ந்ததாகக்  கூறினீர்களே?  அதில் ஏதாவது  நிறைவேற்றப்பட்டதா?  -  என  விழித்துக்  கொண்ட  நம்  இன  மக்கள்  கேட்கிறார்கள்... நீங்கள் அறிக்கையில் குறிப்பிட்ட  “சீனி சர்க்கரைசித்தப்பா  ஏட்டில்  எழுதி  நக்கப்பா”  -  என்ற பதிலை  உங்கள் சார்பில் சொல்லி விடவா? இப்படிக்கு, விழிபிதுங்கி நிற்கும் பாட்டாளி தொண்டன்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

“தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்” - அன்புமணி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
“Precautionary measures should be taken to prevent bird flu in Tamil Nadu says Anbumani

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில்,  தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும்  தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை  மேற்கொள்ள வேண்டும்.

கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள்  வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு  கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெயரளவில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுவதாகவும், பெரும்பான்மையான வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுவதில்லை என்றும், அதற்குத் தேவையான மனிதவளம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  அதேபோல், கோவை, தேனி மாவட்டங்களையொட்டிய எல்லைப் பகுதிகளில் இத்தகைய பணிகள் எதுவும்  மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.

பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.