ADVERTISEMENT

தமிழகத்திற்கு ராஜ்யசபா தேர்தல் அறிவிப்பு!

05:24 PM Jun 25, 2019 | Anonymous (not verified)

தமிழகத்தில் ஜூலை 18ஆம் தேதி மாநிலங்களவை தேர்தல் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஜூலை 8 ஆம் தேதி முதல் வேட்பு மனுதாக்கல் தொடங்கும் என்றும் அறிவித்துள்ளனர்.தமிழகத்தை சேர்ந்த 6 உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த மாதம் 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து ஜூலை 18 ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திமுக மற்றும் அதிமுக சார்பாக தலா 3 பேரை மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்க முடியும்.

ADVERTISEMENT


ADVERTISEMENT


இந்த நிலையில் வேட்புமனு பரிசீலனை ஜூலை 9ஆம் தேதியும், வேட்புமனுவை திரும்ப பெற கடைசி நாள் ஜூலை 11 என்றும் அறிவித்துள்ளனர். மேலும் ஜூலை 18ஆம் தேதி காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும், ஜூலை 18ஆம் தேதி மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT