Skip to main content

ராஜ்யசபா துணைத்தலைவர் தேர்தல்! காங்கிரஸின் பொது வேட்பாளர் கான்செப்டை எதிர்க்கட்சிகள் ஏற்குமா?

Published on 11/09/2020 | Edited on 11/09/2020
rrr

 

 

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் வருகிற 14-ந்தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தொடர் அதிகபட்சம் 18 நாட்கள் நடக்கும். கடந்த 1 வருடமாக லோக்சபா மற்றும் ராஜ்யசபாவின் துணை சபாநாயகர் பதவி காலியாகவே இருக்கும் நிலையில் அதற்கான தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கையை எழுப்பியபடி இருந்தன. 

 

இந்த நிலையில், ராஜ்யசபா துணை சபாநாயகருக்கான தேர்தலை நடத்த முடிவு செய்து அறிவித்தது மத்திய அரசு. அதனால் கூட்டத்தொடரின் முதல்நாள் இதற்கான தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்கான ஏற்படுகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் பாஜக கூட்டணியின் சார்பாக முன்னாள் துணை சபாநாயக பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவருமான ஹரிவன்ஷ் நாராயண்சிங்கை மீண்டும் களத்தில் இறக்கியிருக்கிறார் பிரதமர் மோடி. இவரை எதிர்த்து, எதிர்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த விரும்பிய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, திமுகவின் திருச்சி சிவாவை நிறுத்தும் யோசனையை தெரிவித்திருந்தார். 

 

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் பலரும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களிடம் பேசினர். திருணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பாணர்ஜியிடம் சோனியாவே பேசினார். ஆனால் காங்கிரஸ் எடுத்த அத்தகைய முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் சம்மதிக்கவில்லை. இந்த நிலையில், திருச்சி சிவாவுக்கு பதிலாக,  ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி எம்.பி. மனோஜ் ஜாவை நிறுத்த காங்கிரஸ் முயற்சி எடுத்துள்ளது. பாஜக சார்பில் நிறுத்தப்படும் ஹரிவன்ஷ் நாராயண் பீகார்காரர் என்பதால், அதே பீகாரை சேர்ந்த மனோஜ்ஜாவை நிறுத்தினால் போட்டி அதிகரிக்கும் என கணக்குப் போட்டுள்ளனர் காங்கிரஸ் தலைவர்கள். ஆனால், காங்கிரஸ் எடுக்கும் இந்த முயற்சிக்கும் இன்று காலை வரை எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்கவில்லை.

 

இதனால், பாஜகவுக்கு எதிராக பொது வேட்பாளர் என்கிற காங்கிரசின் கான்செப்ட்  முழு வடிவம் பெறுமா, பெறாதா என்கிற கேள்வியால் ராஜ்யசபா துணைத்தலைவர் தேர்தல் பரபரப்பாகி வருகிறது. இந்த நிலையில், பாஜக எம்.பி.க்கள் அனைவரும் முதல்நாள் அவசியம் சபையில் இருக்க வேண்டும் என அக்கட்சியின் கொறடா பாஜக எம்.பி.க்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.  

 

ராஜ்யசபாவுக்கான துணை தலைவர் தேர்தல் பரபரப்பு இப்படி இருக்கும் நிலையில், லோக்சபாவுக்கான துணை தலைவர் தேர்தலை எப்போது நடத்துவீர்கள் என்கிற கேள்வியும் டெல்லியில் எதிரொலிக்கிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள லோக்சபா தலைவர் ஓம்பிர்லா, “கொரோனா நெருக்கடியில் கூட்டத்தொடரை நடத்துவதே பெரிய சவாலான விஷயம். அதேசமயம், லோக்சபாவுக்கான துணை சபாநாயகரை தேர்வு செய்வதில் அரசுதான் முடிவு செய்யும்” என்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேர்தல் பறக்கும் படை கலைப்பு; எல்லையில் மட்டும் கண்காணிப்பு

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
Dissolution of Election Flying Corps; Surveillance only at the border

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது.

நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதிகளின்படி ஈரோடு மாவட்டத்தில் ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கு தலா 3 பறக்கும் படைகள் வீதம் 8 சட்டசபை தொகுதிக்கும்,  24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டன. இது தவிர ஈரோடு கிழக்கு தொகுதிக்கு கூடுதலாக ஒரு பறக்கும் படை குழு இயங்கியது. இது தவிர வீடியோ கண்காணிப்புக் குழு, நிலை கண்காணிப்புக் குழு, பார்வையாளர்கள் உள்ளிட்டோருக்கு தனியாக குழு என 144 குழுக்கள் செயல்பட்டன.

ஓட்டு பதிவு நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்ததால் நேற்று காலை முதல் பறக்கும் படை, வீடியோ கண்காணிப்பு குழு, நிலை கண்காணிப்புக் குழு ஆகியவற்றை தேர்தல் ஆணையம் கலைத்து உத்தரவிட்டது. அதன்படி ஈரோடு கிழக்கு, மேற்கு, மொடக்குறிச்சி, கோபி , பவானி சட்டசபை தொகுதிகளில் குழுக்கள் கலைக்கப்பட்டன.

அதேசமயம் பவானிசாகர் தொகுதிக்குட்பட்ட தாளவாடி, அந்தியூர் தொகுதிக்குட்பட்ட பர்கூர் ஆகியவை கர்நாடகா மாநிலத்தை ஒட்டி உள்ளது. கர்நாடகாவில் இன்னும் தேர்தல் முடியாததால் மாநில எல்லையை கண்காணிக்கும் வகையில் அந்தியூர் தொகுதியில் 3 பறக்கும் படை, பவானிசாகர் தொகுதியில் மூன்று பறக்கும் படையினர் மற்றும் எல்லை பகுதியில் சோதனை, வாகன சோதனையில் ஈடுபடுவார்கள் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.