Skip to main content

ஒரு ஏழைத்தாயின் மகனைத் திட்ட வச்சுட்டாரே இந்த ஆளு - ராஜூமுருகன் வருத்தம்

Published on 08/04/2019 | Edited on 08/04/2019

திமுக கூட்டணியில் சி.பி.ஐ.எம் சார்பில் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் சு.வெங்கடேசனை ஆதரித்து தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கம் சார்பில் கலைஞர்கள் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் கலந்துகொண்ட ஜோக்கர் பட இயக்குனர் ராஜூ முருகன் பேசுகையில்...

 

rajumurugan speech about s.vengatesan

 

“சு.வெங்கடேசனுக்கு ஓட்டுக் கேட்பது நானும், ஒட்டுமொத்த இந்தியாவும் கம்யூனிச இயக்கங்களுக்கு பட்டிருக்கிற நன்றிக்கடன். பல தொகுதிகளில் இவரெல்லாம் வேட்பாளரா என்று நினைக்கக்கூடிய சூழலில் இவர் நம் வேட்பாளர் என்று பெருமைப் படக்கூடிய ஒருவராக மதுரைத் தொகுதியில் சு.வெங்கடேசன் இருக்கிறார்.  25 ஆண்டுகளுக்கு மேலாக, இலக்கிய பணிகளில், அரசியல் மேடைகளில், களப் போராட்டங்களில் தனது வாழ்வை அர்பணித்த பெரும் போராளி சு.வெங்கடேசன். கீழடி விஷயத்தில் உரக்க குரல் கொடுக்கும் தமிழர், உத்தப்புரம் சுவர் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்காக களத்தில் நின்று போராடக்கூடிய நாயகன். எனவே, அவருக்கு எதிராக விழக்கூடிய ஒவ்வொரு ஓட்டும் செல்லாத ஓட்டுதான். 
 

எனக்கு மோடியின் மேல் என்ன கோபம் என்றால், ஏழை எளியவர்களுக்காகவே கட்டியமைக்கப்பட்ட இயக்கம் இந்த பொதுவுடமை இயக்கம். ஆனால், எல்லா மேடைகளிலும் ஒரு ஏழைத்தாயின் மகனைத் திட்டி திட்டிப் பேச வச்சுட்டாரே இந்த ஆளு, என்பதுதான்.  இந்த ஏழைத்தாயின் மகன் ஒவ்வொரு முறை அரசியல் என்னும் விளக்கை தேய்க்கும்போது அதானி என்ற பூதமும், அம்பானி என்ற பூதமும், அமித்ஷா என்ற பூதமும் கிளம்பி வந்து மக்களை விழுங்கிக்கொண்டிருக்கிறது.  
 

சமீபத்தில் டெல்லி சென்றிருந்த போது பத்திரிக்கையாளர் சப்னம் ஹாஸ்மிக்கை சந்தித்தேன். அவர் அரசியல்வாதிகளை எதிர்த்து ஹல்லா போல் என்ற வீதி நாடகத்தை நடத்தும்போது பாதியிலேயே அடித்துக் கொல்லப்பட்ட பெரும் போராளி சஃப்தர் ஹாஸ்கிக்கின் தங்கை. அவரும் அண்ணன் வழியில் பல போராட்டங்களை நடத்தி வருகிறார். அவரிடம் நான் “உங்களுக்கும் கௌரி லங்கேஷ்க்கு ஏற்பட்ட நிலைமை ஏற்படும் என்ற அச்சம் இல்லையா”என்றேன்.   “நிச்சயமாக அந்த அச்சம் எங்களைப் போன்ற எல்லோருக்கும் இருக்கு. இன்றுவரை நான் உயிரோடு இருக்கிறேன். ஆனால், திரும்பவும் இந்த ஆட்சி வந்தால் நிச்சயமாக படுகொலை செய்யப்படுவோம்”என்று கூறினார்.  இது அவரது அச்சம் மட்டுமல்ல, இந்தியாவில் மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ஒட்டுமொத்தமாக கருத்துரிமை நசுக்கப்படும், பல படுகொலைகள் நடக்கும், அதில் நம்முடைய உயிரும் போகும். 
 

மிக மோசமாக நம் இயற்கை வளங்களை சுரண்டிக்கொண்டு, சாதிய ரீதியாகவும் மத ரீதியாகவும் நம்மை பிரித்துக்கொண்டு ஒரு போர் சூழலை இங்கு உருவாக்கிக்கொண்டிருக்கும் இந்த பாசிட்டுகளுக்கு எதிராக பொதுவுடமை கட்சியைத் தவிர வேறு எதுவும் இல்லை. அதன் பிரதிநிதியாக இருக்கும் சு.வெங்கடேசனுக்கு அரிவாள், சுத்தியல், நட்சத்திரம் சின்னத்தில் நமது ஒவ்வொரு ஓட்டயும் பதிவு செய்து மதுரையை மீட்போம், இந்தியாவை மீட்போம், ஜனநாயகத்தை மீட்போம்”. என்று பேசி முடித்தார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இரண்டாம் கட்டத் தேர்தல் வாக்கு சதவீதம்; வெளியான விவரம்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Details released on Second Phase Election Vote Percentage

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது. 

இதில், இரண்டாம் கட்டத் தேர்தலில் 60.69% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, திரிபுரா மாநிலத்தில் அதிகபட்சமாக  79.66% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், குறைந்தபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் 54.85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், மணிப்பூர் 78.78%, சத்தீஸ்கர் 75.16%, மேற்கு வங்கம் 73.78%, அசாம் 77.35%, ஜம்மு காஷ்மீர் 72.32%, கேரளா 70.21%, கர்நாடகா 68.47%, ராஜஸ்தான் 64.07%, மத்தியப் பிரதேசம் 58.26%, மகாராஷ்டிரா 59.63%, பீகார் 57.81% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இரண்டாம் கட்டத் தேர்தல் நேற்று (26-04-24) முடிவடைந்த நிலையில், மூன்றாம் கட்டத் தேர்தல் வரும் மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 94 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.