Skip to main content

“தமிழ் நாட்டிற்குத் துரும்பைக் கூட வழங்காதவர் ரஜினிகாந்த்...” - காங்கிரஸ் எம்.பி.

Published on 19/12/2020 | Edited on 19/12/2020

 

"Everything has been leakage in Tamil Nadu for 10 years ..." - Karur MP Jothimani


திண்டுக்கல், வேடசந்தூர் காங்கிரஸ் கட்சியின் இளைஞர்கள் கலந்தாய்வுக் கூட்டம் நடந்தது.

 

இக்கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு உறுப்பினரும், கரூர் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோதிமணி பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, “தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி எத்தனை தொகுதியில் போட்டியிடுவது என்பது பற்றி முடிவெடுக்க, மத்திய, மாநில காங்கிரஸ் தலைவர்களின் கீழ், குழு அமைக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல காங்கிரஸ், தி.மு.க சார்பில் சர்வேவும் நடத்தப்பட்டு வருகிறது. இதற்குப் பிறகுதான் வேடசந்தூர் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடுகிறதா என்பது பற்றி தெரியவரும்.

 

யார் மக்கள் பிரச்சினையை முன்னெடுத்து, களத்தில் போராடுகிறார்களோ அவர்களுக்குத்தான் மக்கள் ஆதரவு கிடைக்கும். வருகின்ற சட்டமன்றத் தேர்தல் முடிவு எழுதப்பட்டதுதான். தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி 234 தொகுதியில் வெற்றி பெறும். நாளுமன்றத் தேர்தலில் எப்படிக் கூட்டணி இருந்ததோ அதே கூட்டணி இந்தச் சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும். 

 

வேடசந்தூர் அருகே உள்ள அழகாபுரி குடகனாறு அணையில் உள்ள ஷட்டர், பழுது ஏற்பட்டு லீக்கேஜ் ஆவதாகக் கூறப்படுகிறது. 10 ஆண்டுகாலமாக தமிழகத்தில் எல்லாமே லீக்கேஜ்தான். விவசாய, மக்களுக்குச் சேரவேண்டிய திட்டங்களும் லீக்கேஜ்தான். மக்கள் அதை உணர்ந்துள்ளனர். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் லீக்கேஜ்களை அடைக்க தி.மு.க தலைமையிலான கூட்டணி ஆட்சியை மக்கள் அமர்த்துவார்கள். 


நடிகர் ரஜினிகாந்த், கட்சி ஆரம்பிக்கப்போகிறேன் என்று கூறிவிட்டு, 40 நாட்கள் படப்பிடிப்பிற்குச் செல்கிறார். இது போல, தலைவர்களை நான் பார்க்கவில்லை. இந்த கரோனா ஊரடங்கின்போது மிகப்பெரிய பணக்காரரான ரஜினிகாந்த், அவர் நினைத்திருந்தால் பல கோடி ரூபாயை அரசாங்கத்திற்கு கரோனா நிவாரண நிதியாகக் கொடுத்து இருக்கலாம். பொது மக்களுக்கும் உதவி செய்திருக்கலாம். ஆனால், அவர் செய்யவில்லையே. அதுபோல், தமிழ் நாட்டிற்குத் துரும்பைக் கூட வழங்காதவர் ரஜினிகாந்த். அவருக்கு மக்கள் ஓட்டு போடமாட்டார்கள்.” என்று கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் - ஜோதிமணி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
India Alliance will win all 40 constituencies says Jothimani

தமிழகத்தில் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் கரூர் நாடாளுமன்ற  தொகுதியில் அதிக வேட்பாளராக 54 பேர் போட்டியிடுகின்றனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நான்கு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகின்றது.

கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதியிலும் 6,93,730 ஆண் வாக்காளர்களும்,7,35,970 பெண் வாக்காளர்கள், 90 இதர வாக்காளர்கள் என மொத்தம் 14,29,790 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் இந்நிலையில் இந்தியா கூட்டணி வேட்பாளர் ஜோதிமணி தனது சொந்த ஊரான பெரிய திருமங்கலம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச்  சந்தித்த ஜோதிமணி, “இந்தியா கூட்டணி 40 நாடாளுமன்ற தொகுதியிலும் மகத்தான வெற்றி பெறும். இந்தியா முழுவதும் இந்தியா கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமர் ஆவார். தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின். தமிழர்களின் உணர்வுகளும்,  உரிமைகளும் மீட்கப்பட வேண்டும். வளர்ச்சி பாதை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். இந்த தேர்தலில் செல்லுமிடமெல்லாம் எனக்கு மகத்தான  வரவேற்பை வழங்கியுள்ளனர். அது வாக்குகளாக மாறி வெற்றியை வழங்கும்”  எனக் கூறினார்.

Next Story

“இது மோடியின் வெட்கக்கேடான செயல்” - திருச்சி சிவா விமர்சனம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Trichy Siva critcized This is a shameful act by Modi

கரூர் மாவட்டம்,  கரூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய திருச்சி சிவா, “இந்தத் தேர்தலானது மிக முக்கியமான ஜனநாயகத் தேர்தல். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடைபெறுமா என்று சந்தேகம் உள்ளது. மதச்சார்பற்ற அனைவரும் சகோதரர்களாய் உள்ள நிலையில், மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ஒற்றை மதத்தைச் சார்ந்த ஆட்சியாக இருக்கும். ஜனநாயகமானது காணாமல் போய்விடும். கடந்த 2016ஆம் ஆண்டு 60 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் தற்போது 100 ரூபாய்க்கு மேல் விற்று வருகிறது. மோடி ஆட்சிக் காலத்தில் 108 முறை பெட்ரோல், டீசல் கேஸ், விலையினை உயர்த்தியுள்ளது.

ஆண்டிற்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் இதுவரை ஏதும் செய்யவில்லை. நான்கு கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். 80 கோடி பேர் தினமும் ரேஷன் கடையில் வரிசையில் நின்று பொருள் வாங்குகிறார்கள். 22 கோடி பேர் இரவு உணவு இல்லாமல் உறங்குகிறார்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த நாடு என்று கூறிக்கொள்ளும் மோடியின் வெட்கக்கேடான செயல்.

விவசாயக் கடன், மாணவர்களுக்கான கல்விக் கடன்களை ரத்து செய்யாத மோடி அரசு, கார்ப்பரேட் பெரும் முதலாளிகளுக்கு பல்லாயிரக்கணக்கான கோடியினை தள்ளுபடி செய்திருக்கிறது. இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் போதும், விவசாயக் கடன் மற்றும் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும்” என்று கூறினார்.