“அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம்...” – ஏக்கத்தில் ரஜினி ரசிகர்கள்... போஸ்டர் பரபரப்பு

Rajni politics entry poster in vellore district

போர் வரும்போது நாங்கள் களத்தில் இருப்போம் என நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் பிரவேசம் குறித்து 2017ல் அறிவித்தார். அதன்பின்நாடாளுமன்றத்தேர்தல்,உள்ளாட்சித்தேர்தல் என இரண்டு பெரிய தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இதில் எதிலும் ரஜினியின் மக்கள் மன்றம் கலந்துகொள்ளவில்லை. ரஜினிஅறிவிப்புக்குப்பின்கட்சி தொடங்கிய நடிகர் கமல்கூட இரண்டு தேர்தல்களிலும், தனது மக்கள் நீதிமய்யத்தைப்போட்டியிடச்செய்து கணிசமானவாக்குகளைப்பெற்றுள்ளார். ஆனால், ரஜினி இன்னமும் அமைதியாகவே உள்ளார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களாக ரஜினி, நவம்பரில் கட்சி தொடங்குகிறார், டிசம்பரில் மதுரையில் மாநாடு நடத்துகிறார்,களவேலையைதொடங்கச்சொல்லிவிட்டார், விரைவில் செய்தியாளர்கள் சந்திப்பை நடத்தவுள்ளார்எனப்பரபரப்பு கிளம்பியுள்ளது. இப்படிப்பட்ட பரபரப்புகள், வதந்திகள் கடந்த 25 ஆண்டுகளில் பலமுறை நடந்துள்ளது.

இந்நிலையில் ரஜினியின் மக்கள் மன்றத்தினர் பெரும் கவலையில் உள்ளனர். அவர்கள், ரஜினி உடனே அரசியல் கட்சி தொடங்க வேண்டும்எனக்கோரிக்கை விடுத்துவருகின்றனர். வேலூர் ஒருங்கிணைந்தமாவட்டச்செயலாளர் சோளிங்கர் என்.ரவி பெயரில் மாவட்டம் முழுவதும் திடீரெனசுவரொட்டிகள்ஒட்டப்பட்டுள்ளன. அந்தசுவரொட்டிகளில், ‘அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம்,இப்பஇல்லன்னாஎப்பவுமேஇல்லை’ என்கிற வாசகம் அடங்கியதாக உள்ளது.

Rajni politics entry poster in vellore district

ஓராண்டுக்கு முன்பு ரஜினிசெய்தியாளர்களைச்சந்தித்தபோது, “அரசியல் மாற்றம், ஆட்சி மாற்றம்,இப்பஇல்லன்னாஎப்பவுமேஇல்லை” என்றார். அதேவாசகத்தைக்குறிப்பிட்டு ரஜினி மக்கள் மன்றம்சுவரொட்டிஒட்டியதைக்காணும்போது, இது மக்களுக்கானதாக தெரியவில்லை,ரஜினிக்குச்சொன்னதுபோல் உள்ளது. அதாவது நீங்கஇப்போஅரசியலுக்குவரலன்னா, அதன்பின் எப்போதும் வரமுடியாது எனச்சொல்வது போல் உள்ளது என்கிறார்கள் அரசியல் விவரம் அறிந்தவர்கள்.

இதுபற்றிரஜினி ரசிகர்களிடம் பேசியபோது, தேர்தலுக்கு இன்னும் 6 மாதமே உள்ளது. இப்போதுகூட, ‘தலைவர் தனது அரசியல்முடிவைத்தெளிவாக அறிவிக்கமாட்டேன் என்கிறார். அணிகள் ஆரம்பித்து,பூத் கமிட்டிஅமைக்கச்சொன்னார் தலைவர், அதனைசெய்துகொண்டுஇருந்தோம். அந்தப் பணி சிலமாவட்டங்களைத்தவிர மற்ற மாவட்டங்களில் 40 சதவீதம்கூடபூர்த்தியாகவில்லை.அதன் பின்னால்கரோனாவந்ததால் அனைத்து பணிகளும் நிறுத்தப்பட்டன. உங்களை முதலில் பார்த்துக்கொள்ளுங்கள் எனதலைவரிடமிருந்துதகவல் வந்ததே தவிர, அதன்பின் எந்த தகவலும்அவரிடமிருந்துமன்றத்தினருக்கு வரவில்லை.

தற்போதுகரோனாகளத்திலிருந்துதேர்தல் களத்துக்கு அ.தி.மு.க, தி.மு.க உட்பட அனைத்து கட்சிகளும் திரும்பிவிட்டன. கூட்டணி,சீட்பங்கீடுஎனக்கட்சிகள் அரசியல்செய்துகொண்டுஇருக்கும் நிலையில், தலைவர் கட்சி பற்றியே பேசமாட்டேன் என்கிறார்.இதுயெல்லாம்எங்களுக்கு வருத்தமாக உள்ளது.தேர்தலுக்குக்குறுகிய காலமே உள்ளதால் தலைவர் விரைந்து நல்லதாக ஒரு முடிவெடுக்க வேண்டும்’ என்கிறார்கள்.

kamalhaasan politics rajni rajnikanth
இதையும் படியுங்கள்
Subscribe